மேலும் அறிய

பணம், நகை எப்போது கிடைக்கும்... காத்துக் கிடக்கும் மக்கள் - 6 மணி நேரம் போலீஸ் விசாரணை

சேலம், தருமபுரி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்த நகை கடை உரிமையாளருக்கு சொந்தமான அரூரில் உள்ள கடையில் காவல் துறையினர் 6 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை.

சேலம் வீராணம் அடுத்த வலசையூர் பகுதியை சேர்ந்தவர் சபரிசங்கர். இவர் சேலம், தருமபுரி, அரூர், நாமக்கல், ஆத்தூர், திருச்சி உள்ளிட்ட 11 பகுதிகளில் நகை கடை நடத்தி வருகிறார். மக்களை கவரும் வகையில் பொங்கும் தங்கம், பழசுக்கு புதுசு என்ற பெயரில் கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான மக்களிடம் பணம் நகைகளை ஏமாற்றியுள்ளார்.


பணம், நகை எப்போது கிடைக்கும்... காத்துக் கிடக்கும் மக்கள் - 6 மணி நேரம் போலீஸ் விசாரணை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகை்கு முன்னரே கடையை பூட்டி விட்டு மக்களிடம் வாங்கிய நகை, பணத்துடன் தலைமறைவாகியுள்ளார். இதில் பழைய நகை மற்றும் சீட்டு தொகை என சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்து தலைமறைவாகியுள்ளார். நகை மற்றும் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்து, பாதிக்கப்பட்ட மக்கள் அந்தந்த நகைக்கடை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றப்பட்டு சபரிசங்கர், மீது தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

சேலம், தருமபுரி, அரூர், நாமக்கல், ஆத்தூர், திருச்சி உள்ளிட்ட  11 இடங்களில் 1000 - க்கும் மேற்பட்டோர்கள் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், 15 நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சுமார் 13.75 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான சபரிசங்கர் புதுச்சேரியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாக, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் விரைந்து சென்று சபரிசங்கரை, கடந்த 28.05.2024 அன்று அதிரடியாக கைது செய்தனர்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் அரூரில் இயங்கி வந்த நகைக்கடையில் பணியாற்றிய பணியாளர்களிடம் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான காவல் துறையினர் திடீரென சோதனை நடத்தினர். தொடர்ந்து நகை கடையில் பணியாற்றிய ஊழியர்களிடம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். மேலும் கவர்ச்சி திட்டங்கள் வழங்கிய பொதுமக்களிடம், பணம் முறைகேடு செய்ததில், சில ஊழியர்களுக்கு தொடர்பு உண்டு என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நகைக்கடைகளில் கவர்ச்சி திட்டங்களை நம்பி பணம் கொடுத்து, ஏமார்ந்த மக்கள், தங்களுடைய பணம், நகை எப்பொழுது கிடைக்கும் என காத்துக் கிடக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Embed widget