மேலும் அறிய

Dharmapuri: தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு - பென்னாகரம் அருகே சோகம்

நெக்குந்தி அடுத்த கல் மாரியம்மன் கோவில் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு - பென்னாகரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பொம்மசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்-மனைவி கன்னியம்மாள் தம்பதியினருக்கு இரண்டு மகள், இரண்டு வயதில் சக்திதரன் எனும் ஆண் குழந்தை உள்ளது. இலட்சுமணன் ஆண்டுதோறும் தர்பூசணி பழ சீசனில் வெளியூர் சென்று வியாபாரம் செய்து வருகிறார். இந்த ஆண்டும் தர்பூசணி பழம் வியாபாரத்திற்காக வெளியூர் சென்றுள்ளார். அப்பொழுது தனது குழந்தைகளை கடந்த 3ம் தேதி மாலை நெக்குந்தி அடுத்த கல் மாரியம்மன் கோவில் அருகே உள்ள கன்னியம்மாளின் அக்கா வீட்டில் சக்திதரனை விட்டுவிட்டு வெளியூர்  சென்றுள்ளனர்.
 
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டு அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்துள்ளார். இதில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் சக்தி கரன் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து வெளியூரில் உள்ள கன்னியம்மாளுக்கு போன் செய்த அவரது உறவினர் ஆண் குழந்தை சக்திதரன் தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டதாகவும், சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்ததாகவும், ஆண் குழந்தை சக்திதரன் உடல் பிரேத கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.
 
இதனைக் கேட்ட கண்ணியம்மாள் மற்றும் அவரது கணவர் உடனடியாக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்து இறந்த ஆண் குழந்தை சக்திதரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து கண்ணியம்மாள் அவரது அக்காவிடம் கேட்டபோது தான் மாடு கட்ட சென்று விட்டு வந்து பார்த்தபோது, வீட்டில் சக்திதரனை காணவில்லை எனவும், வெளியில் தேடிப் பார்த்த போது தண்ணீர் தொட்டியில்  குழந்தை சக்திதரன் விழுந்து கிடந்தான், உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு  வந்ததாகவும் , அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர் என கூறியுள்ளார்.
 
இதுகுறித்து கண்ணியம்மாள் பென்னாகரம் காவல் நிலையத்தில் தனது ஆண் குழந்தை சக்திதரன் இறப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பென்னாகரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பென்னாகரம் பகுதியில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Embed widget