மேலும் அறிய

Delhi Crime: இளம்பெண் இரும்பு கம்பியால் அடித்து கொலை... டெல்லியில் என்ன நடக்குது? அடுத்தடுத்து கொடூரம்!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Delhi Crime: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

டெல்லியில் தொடரும் கொடூரங்கள்:

சமீப காலமாகவே, குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நாட்டின் தலைநகர் டெல்லியில் நடக்கும் குற்றசெயல்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.  டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இதேபோன்ற கொலை சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்வது மக்களை உச்சக்கட்ட அச்சத்தில் ஆழ்த்தியது.  இப்படி நாளுக்கு நாள் ஒரு குற்றச் சம்பவங்கள் டெல்லியில் அரங்கேறி வருகிறது.  அந்த வரிசையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  டெல்லி மாளவியா நகரில் இளம்பெண் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இவர் கமலா நேரு கல்லூரியில் படிக்கும் நக்ரிஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

என்ன நடந்தது? 

டெல்லி கமலா நேரு கல்லூரிக்கு அருகில் ஒரு பூங்கா உள்ளது. இங்க மாணவி நர்கிஸ் கல்லூரி முடிந்து பூங்காவிற்கு  தனது தோழியுடன் சென்றிருக்கிறார்.  அப்போது, அங்கு வந்த ஒரு நபர் நர்கிஸிடம் பேச்சு  கொடுத்துள்ளார். பின்னர், இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் அந்த நபர், நர்கிஸை அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கொடூரமாக அடித்துள்ளார். இதனால் நர்கிஸ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.


Delhi Crime: இளம்பெண் இரும்பு கம்பியால் அடித்து கொலை... டெல்லியில் என்ன நடக்குது? அடுத்தடுத்து கொடூரம்!

பின்னர், சிறிது நேரத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.  பெண் சடலம் கிடப்பது குறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 28 வயதான இர்பானை கைது செய்துள்ளனர். 

என்ன காரணம்? 

இளம்பெண் நர்கிஸ், இர்பானை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவர்களது காதல் குறித்து இரு குடும்பத்தினரிடம் அவரவர்கள் தெரிவித்தனர். இதற்கு நர்கிஸ் வீட்டில் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், நர்கிஸிடம் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார் இர்பான். இதனால் இளம்பெண் நர்கிஸ் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.  இர்பானின் நம்பரையும் பிளாக் செய்து வைத்துள்ளார்.  ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த இர்பான் சம்பவத்தன்று ஒரு முடிவு கட்ட நர்கிஸை பார்க்கச் சென்றுள்ளார்.  அங்கு இருவருக்கும் இடையே திருமணம் குறித்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து நர்கிஸின் தலையில் அடித்தே கொலை செய்துள்ளார் இர்பான். 


Delhi Crime: இளம்பெண் இரும்பு கம்பியால் அடித்து கொலை... டெல்லியில் என்ன நடக்குது? அடுத்தடுத்து கொடூரம்!

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு 40 வயதுடைய பெண்ணை, நடுரோட்டில் வைத்தே  ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அதன்பின் அவரும் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அடங்குவதற்குள், இன்று பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டிப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கள்ளக் காதலனுடன் உல்லாசம் !! கூலி தொழிலாளியால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு !! பலத்த சத்தத்துடன் விழுந்த பாட்டில்கள் !! நடந்தது என்ன ?
‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !
‘ஏன் மீண்டும் இங்கே வருகிறீர்கள்’ என்று கேட்டு திடீரென அரிவாளால் வெட்டத் தொடங்கினர் - மானாமதுரையில் பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி !
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்" - ₹5,000 லஞ்சம் கேட்டு சிக்கிய அரசு ஊழியர்கள்...
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
Embed widget