மேலும் அறிய

ரூ.3 ஆயிரம் கடன் வாங்கி... அவர் பைக்கிலே லிப்ட் வாங்கி... அவரையே கடத்தி ரூ.50 லட்சம் அபேஸ்!

முந்திரி வியாபாரியிடம் 3 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய நபர், கடன் தந்தவர் பைக்கில் லிப்ட் கேட்டு, அவரையே கடத்தி கத்தி முனையில் 50 லட்சம் ரூபாயை பறித்து தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தெற்கு மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்(வயது 48).முந்திரி வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன்(37). இவர் முந்திரி வியாபாரம் செய்து தொழிலில் நஷ்டம் அடைந்தார். நேற்று இரவு கலைசெல்வன்,வடிவேலை நேரில் சந்தித்தார். அப்போது கலைசெல்வன் தனக்கு கடனாக ரூ.3ஆயிரம் பணம் வேண்டும் எனகூறினார். உடனே வடிவேல் அவருக்கு பணம் கொடுத்தார். அதன் பின்னர் கலைசெல்வன் தனது மோட்டார் சைக்கிள் வேலங்குப்பம் பகுதியில் நிற்பதாகவும். தன்னை அந்த பகுதிக்கு அழைத்து செல்லும்படி கூறினார். இதை நம்பிய வடிவேல் மோட்டார் சைக்கிளில் கலைசெல்வனை அந்த பகுதிக்கு அழைத்து சென்றார். வேலங்குப்பம் பகுதியில் உள்ள முந்திரி தோப்பு அருகில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது கலைசெல்வன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வடிவேலுவின் கழுத்தில் வைத்து மிரட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி கூறினார்.


ரூ.3 ஆயிரம் கடன் வாங்கி... அவர் பைக்கிலே லிப்ட் வாங்கி... அவரையே கடத்தி ரூ.50 லட்சம் அபேஸ்!

அதன் பின்னர் உடனடியாக ரூ.50 லட்சத்தை இந்த பகுதிக்கு எடுத்து வர சொல் என்று வடிவேலுவிடம், கலைசெல்வன் கூறினார். அதற்கு வடிவேல் மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த கலைசெல்வன் கத்தியால் வடிவேலுவின் கையில் வெட்டினார். இதில் பயந்து போன வடிவேல் செல்போன் மூலம் அவரது உறவினர் வினோத்குமாரை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு உடனடியாக வேலங்குப்பம் பகுதிக்கு வருமாறு கூறினார்.


ரூ.3 ஆயிரம் கடன் வாங்கி... அவர் பைக்கிலே லிப்ட் வாங்கி... அவரையே கடத்தி ரூ.50 லட்சம் அபேஸ்!

உடனே வினோத்குமார் ரூ.50 லட்சத்தை ஒரு பையில் எடுத்து கொண்டு அந்த பகுதிக்கு சென்றார். அந்த பணத்தை அந்த பகுதியில் உள்ள மினிலாரியில் வைத்து விட்டு சிறிது தூரம் தள்ளி நிற்குமாறு கலைசெல்வன் கூறினார். அதன்படி வினோத்குமார் ரூ.50 லட்சத்தை மினி லாரியில் வைத்து விட்டு சென்றார். அதன் பின்னர் கலைசெல்வன் ரூ.50 லட்சம் பணத்துடன் மினிலாரியில் தப்பி சென்றுவிட்டார். கலைசெல்வன் கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த வடிவேலை அவரது உறவினர் வினோத்குமார் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு வடிவேலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


ரூ.3 ஆயிரம் கடன் வாங்கி... அவர் பைக்கிலே லிப்ட் வாங்கி... அவரையே கடத்தி ரூ.50 லட்சம் அபேஸ்!

இது குறித்து காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாபுபிரசாத் தலைமையில் காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், தவசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முந்திரி வியாபாரி வடிவேலை கத்தியால் வெட்டி ரூ. 50 லட்சம் பணத்தை பறித்து சென்ற கலைசெல்வனை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கலைசெல்வனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

சீர்காழி பள்ளி சர்ச்சை: மாணவி தற்கொலை முயற்சி... ஆசிரியர் இடமாற்றம்... மாணவர் மறியல்!
சீர்காழி பள்ளி சர்ச்சை: மாணவி தற்கொலை முயற்சி... ஆசிரியர் இடமாற்றம்... மாணவர் மறியல்!
கும்மிடிப்பூண்டி ATM கொள்ளை: கேஸ் கட்டிங், கருப்பு பெயிண்ட்! வடமாநில கும்பல் கைவரிசையா?
கும்மிடிப்பூண்டி ATM கொள்ளை: கேஸ் கட்டிங், கருப்பு பெயிண்ட்! வடமாநில கும்பல் கைவரிசையா?
" கள்ளக் காதலியின் வீட்டில் ரகளை " தடுக்க வந்த வருங்கால மருமகனுக்கு கத்திக் குத்து
அதிகாலை 3.40 மணி... டார்ச் லைட்டுடன் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்! ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
அதிகாலை 3.40 மணி... டார்ச் லைட்டுடன் வீடுகளை நோட்டமிட்ட மர்ம நபர்! ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
Vanni Arasu: சாதிய அடக்குமுறை பற்றி பேசத் தொடங்கிய வன்னியரசு..! கும்பலாக கூச்சலிட்ட திமுக, அதிமுக எம்எல்ஏ-க்கள்! வீடியோவை பாருங்க
China Warning to Nepal: இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
இன்னும் முடியவில்லை.! 3 நாட்களில் நேபாளத்திற்கு பேரழிவு காத்திருக்கிறது.! பீதியை கிளப்பும் சீனா
"விடிவெள்ளி திட்டம் முதல் புதிய கான்கிரீட் வீடுகள் வரை.." சமூக நலத்துறையில் பொன்னான 20 அறிவிப்புகள் - என்னென்ன?
Russia Ukraine War: உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமா.? சிஐஏ தலைவரின் அவசர மாஸ்கோ பயணத்தால் பரபரப்பு
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமா.? சிஐஏ தலைவரின் அவசர மாஸ்கோ பயணத்தால் பரபரப்பு
நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - : முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
நேபாளத்தில் தமிழர்களின் நிலை என்ன? - முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு.. டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்
Kanimozhi : ‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு திமுகவில் கிடைக்கப்போகும் பதவி என்ன ?
‘பொதுச்செயலாளரா? செயல் தலைவரா?’ கனிமொழிக்கு என்ன பதவி ?
Ukraine Russia India: ரஷ்யாவை துவம்சம் செய்து பெட்ரோலுக்கு கையேந்த வைத்த உக்ரைன்; புதினை காப்பாற்றுவாரா மோடி.?
ரஷ்யாவை துவம்சம் செய்து பெட்ரோலுக்கு கையேந்த வைத்த உக்ரைன்; புதினை காப்பாற்றுவாரா மோடி.?
சம்பா பருவம் முழுக்க கர்நாடகாவிடம் இருந்து நீரைப் பெறுக: அன்புமணி வலியுறுத்தல்
சம்பா பருவம் முழுக்க கர்நாடகாவிடம் இருந்து நீரைப் பெறுக: அன்புமணி வலியுறுத்தல்
Embed widget