மேலும் அறிய

போலீசாரைக் கண்டு அலறிய பைக் ஆசாமிகள்... சீர்காழியில் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கிய 'துள்ளல்' இளைஞர்கள்!

சீர்காழியில் 1.2 கிலோ கஞ்சா கடத்திய கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே போலீசார் நடத்திய அதிரடி வாகன தணிக்கையில், 1 கிலோ 200 கிராம் கஞ்சா கடத்தி வந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், சொகுசு இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தப்பியோடிய மற்றொரு இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்திலேயே சிக்கிய கடத்தல் கும்பல்

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கவும் காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூர் பகுதியில், சீர்காழி காவல் நிலைய போலீசார் இன்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அடுத்தடுத்து வந்த இரண்டு இருசக்கர வாகனங்களை போலீசார் மறித்து நிறுத்தினர். போலீசாரைக் கண்டதும் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதுடன், அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களைச் சுற்றி வளைத்து, அவர்கள் வைத்திருந்த பைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல்

போலீசார் நடத்திய சோதனையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த பைகளில் சிறு சிறு பொட்டலங்களாகப் போடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிறு பொட்டலங்களாக (பேக் செய்து) சில்லறை விற்பனை செய்வதற்காக அவர்கள் வைத்திருந்த ஏராளமான பாலித்தீன் கவர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் அவர்களிடம் இருந்த 3 விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன்களையும் போலீசார் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்தனர்.

மூன்று இளைஞர்கள் அதிரடி கைது

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் பிடிபட்ட மூவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி, திருமயிலாடியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 24), கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, கொத்தவாஞ்சேரியை சேர்ந்த கௌஷிக் (வயது 18) மற்றும் கடலூர் மாவட்டம், அகரமங்கலத்தை சேர்ந்த செம்மொழியன் (வயது 19) என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டப் பகுதிகளில் உள்ள இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

காவல்துறை நடவடிக்கை

பிடிபட்ட ஸ்ரீதர், கௌஷிக், செம்மொழியன் ஆகிய மூன்று பேர் மீதும் சீர்காழி போலீசார் போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் (NDPS Act) வழக்குப் பதிவு செய்து அவர்களை முறைப்படி கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தப்பியோடிய நபருக்கு வலைவீச்சு

போலீசாரின் இந்த அதிரடி சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில் ஒருவரான பாவட்டமேடு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்பவர் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தப்பியோடியுள்ளார். இந்த கஞ்சா கடத்தல் நெட்வொர்க்கில் இவருக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய அபிஷேக்கை கைது செய்ய சீர்காழி காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள்? இதன் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் யார்? கல்லூரி மாணவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான குண்டாஸ் சட்டம் பாயும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget