மேலும் அறிய

Crime : ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! குரங்குகளை ஏவி இளம்பெண்ணை கடிக்க வைத்த கொடூரம்... விழுப்புரத்தில் பகீர்!

தன்னை அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குரங்குகளை ஏவி கடிக்க வைத்ததாக பாதிக்கப்பட்ட வடமாநில பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Crime : தன்னை அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குரங்குகளை ஏவி கடிக்க வைத்ததாக பாதிக்கப்பட்ட வடமாநில பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வடமாநில பெண் புகார்

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டலபுலியூர் என்ற இடத்தில் அன்பு ஜோதி என்ற ஆசிரமம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 200க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரமத்திற்கு 2019ஆம் ஆண்டு வந்துள்ளார். இவர் தனது கணவரை 8  ஆண்டுகளுக்கு முன்பு விட்டுவிட்டு தமிழகம் வந்துள்ளார். தமிழகம் வந்த இந்த பெண்ணை மீட்பு குழு ஒன்று மீட்டு விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்துவிட்டுள்ளது.  

இதன்பின், 5 ஆண்டுகள் அந்த ஆசிரமத்திலேயே தங்கி இருந்த அப்பெண் பாலியல் ரீதியாக துன்புறத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடமாநில பெண் அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த ஆசிரமத்தை ஆய்வு செய்தனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அறையில் கட்டிப்போட்டு கொடுமை

ஆசிரமத்திற்கு வந்த போலீசார் புகார் அளித்த பெண் உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில பெண் கூறியதாவது, "எனது கணவரை 8 ஆண்டுகளுக் முன்பு விட்டுவிட்டு தமிழகம் வந்துவிட்டேன். இங்கு ஊர் ஊராக சென்று கொண்டிருந்தபோது 2019ஆம் ஆண்டு ஒரு குழு ஒன்று விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்தனர்.

ஆசிரமத்தில் சமைக்கும் வேலை செய்வேன். ஆசிரமத்தில் வேலை பளு அதிகமாக இருந்தது. வேலை செய்ய தாமதமானதால் ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் என்னை அறையில் பூட்டி வைத்து கட்டிப்போட்டு அடித்து கொடுமைப்படுத்தினார்கள்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில் ”டிசம்பர் 3ஆம் தேதி குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து புதுச்சேரி அருகே கோட்டக்குப்பத்தில் உள்ள அவர்களது ஆசிரமத்திற்கு கட்டாயமாக அழைத்து சென்றனர். அங்கு நள்ளிரவு ஜூபின்பேபி என்னிடம் தவறாக நடத்துக் கொண்டதோடு, பாலியல் வன்கொடுமை செய்தார். மறுநாள் விழுப்புரம் ஆசிரமத்திற்கு அழைத்து வந்துவிட்டனர்" என்று வடமாநில பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தோழிக்கு நேர்ந்த கொடுமை

அங்கு எனக்கு நடந்த கொடுமை குறித்து, ஆசிரமத்தில் உள்ள எனது தோழி ஒருவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர், ஜூபின்பேபி என்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக தெரிவித்தார். இதை நாங்கள் வெளியே சொல்ல பயந்தோம். இந்நிலையில், ஜூபின்பேபி, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கேரளா சென்றார். இதை நாங்கள் பயன்படுத்தி ஆசிரமத்தில் இருந்த கோவை சென்றோம். இதனை அறிந்த அவர்கள் எங்களை பிடித்து மீண்டும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தனர்.

குரங்குகளை ஏவி கடிக்க வைத்தனர்

இதுமட்டுமின்றி, நான் இதையெல்லாம் போலீசாரிடம் சொல்லிவிடுவேன் என்பதால், அவர்கள் வளர்க்கும் குரங்களை தன்னை கடிப்பதற்காக அவிழ்த்து விட்டனர். இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார். 

கைது

இதனை அடுத்து, வெளிமாநில பெண் அளித்த புகாரின்படி 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆசிரமம் கடந்த 17 ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரிந்தது. இதனை அடுத்து, ஆசிரமத்திற்கு சீல் வைத்து அதில் இருந்த 142 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும், ஆசிரமத்தை நடத்தி வந்த ஜூபேபி அவரது மனைவி உட்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, ஆசிரமத்தை நடத்தி வந்த ஜூபேபி அவரது மனைவி மரியா, ஆசிரமத்தில் வேலை பார்த்த மோகன், முத்துமாரி, கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆசிரம நிர்வாகி ஜூபேபியை மார்ச் 2ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
ஓயோ ரூமுக்கு சென்ற காதல் ஜோடி.. சில நிமிடங்களில் நடந்த ஷாக் சம்பவம்.. நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
TVK Vijay: கடைசி நேரத்தில் வேட்பாளர்களை மாற்றிய விஜய் .. எந்தெந்த தொகுதி தெரியுமா?
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
Embed widget