மேலும் அறிய

Crime : ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை! குரங்குகளை ஏவி இளம்பெண்ணை கடிக்க வைத்த கொடூரம்... விழுப்புரத்தில் பகீர்!

தன்னை அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குரங்குகளை ஏவி கடிக்க வைத்ததாக பாதிக்கப்பட்ட வடமாநில பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Crime : தன்னை அறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், குரங்குகளை ஏவி கடிக்க வைத்ததாக பாதிக்கப்பட்ட வடமாநில பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

வடமாநில பெண் புகார்

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டலபுலியூர் என்ற இடத்தில் அன்பு ஜோதி என்ற ஆசிரமம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் மனநலம் குன்றியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 200க்கும் மேற்பட்டோர் தங்கி வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரமத்திற்கு 2019ஆம் ஆண்டு வந்துள்ளார். இவர் தனது கணவரை 8  ஆண்டுகளுக்கு முன்பு விட்டுவிட்டு தமிழகம் வந்துள்ளார். தமிழகம் வந்த இந்த பெண்ணை மீட்பு குழு ஒன்று மீட்டு விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்துவிட்டுள்ளது.  

இதன்பின், 5 ஆண்டுகள் அந்த ஆசிரமத்திலேயே தங்கி இருந்த அப்பெண் பாலியல் ரீதியாக துன்புறத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடமாநில பெண் அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த ஆசிரமத்தை ஆய்வு செய்தனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அறையில் கட்டிப்போட்டு கொடுமை

ஆசிரமத்திற்கு வந்த போலீசார் புகார் அளித்த பெண் உட்பட பலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில பெண் கூறியதாவது, "எனது கணவரை 8 ஆண்டுகளுக் முன்பு விட்டுவிட்டு தமிழகம் வந்துவிட்டேன். இங்கு ஊர் ஊராக சென்று கொண்டிருந்தபோது 2019ஆம் ஆண்டு ஒரு குழு ஒன்று விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்தனர்.

ஆசிரமத்தில் சமைக்கும் வேலை செய்வேன். ஆசிரமத்தில் வேலை பளு அதிகமாக இருந்தது. வேலை செய்ய தாமதமானதால் ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் என்னை அறையில் பூட்டி வைத்து கட்டிப்போட்டு அடித்து கொடுமைப்படுத்தினார்கள்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில் ”டிசம்பர் 3ஆம் தேதி குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து புதுச்சேரி அருகே கோட்டக்குப்பத்தில் உள்ள அவர்களது ஆசிரமத்திற்கு கட்டாயமாக அழைத்து சென்றனர். அங்கு நள்ளிரவு ஜூபின்பேபி என்னிடம் தவறாக நடத்துக் கொண்டதோடு, பாலியல் வன்கொடுமை செய்தார். மறுநாள் விழுப்புரம் ஆசிரமத்திற்கு அழைத்து வந்துவிட்டனர்" என்று வடமாநில பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தோழிக்கு நேர்ந்த கொடுமை

அங்கு எனக்கு நடந்த கொடுமை குறித்து, ஆசிரமத்தில் உள்ள எனது தோழி ஒருவரிடம் தெரிவித்தேன். அப்போது அவர், ஜூபின்பேபி என்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக தெரிவித்தார். இதை நாங்கள் வெளியே சொல்ல பயந்தோம். இந்நிலையில், ஜூபின்பேபி, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கேரளா சென்றார். இதை நாங்கள் பயன்படுத்தி ஆசிரமத்தில் இருந்த கோவை சென்றோம். இதனை அறிந்த அவர்கள் எங்களை பிடித்து மீண்டும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தனர்.

குரங்குகளை ஏவி கடிக்க வைத்தனர்

இதுமட்டுமின்றி, நான் இதையெல்லாம் போலீசாரிடம் சொல்லிவிடுவேன் என்பதால், அவர்கள் வளர்க்கும் குரங்களை தன்னை கடிப்பதற்காக அவிழ்த்து விட்டனர். இதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார். 

கைது

இதனை அடுத்து, வெளிமாநில பெண் அளித்த புகாரின்படி 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆசிரமம் கடந்த 17 ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரிந்தது. இதனை அடுத்து, ஆசிரமத்திற்கு சீல் வைத்து அதில் இருந்த 142 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும், ஆசிரமத்தை நடத்தி வந்த ஜூபேபி அவரது மனைவி உட்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

அதன்படி, ஆசிரமத்தை நடத்தி வந்த ஜூபேபி அவரது மனைவி மரியா, ஆசிரமத்தில் வேலை பார்த்த மோகன், முத்துமாரி, கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆசிரம நிர்வாகி ஜூபேபியை மார்ச் 2ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget