மேலும் அறிய

Crime: துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்.. பல்லை உடைத்த கொடூரம்.. சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்!

உத்தர பிரதேசத்தில் 35 வயதுடைய பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

Crime: உத்தர பிரதேசத்தில் 35 வயதுடைய பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  சமீபத்தில் கூட, மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சிறுமி ரத்தப்போக்குடன் தெருவில் உதவி கோரிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 

சந்தேகம் அடைந்த மனைவி:

உத்தர பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கு சூரஜ் பிரக்காஷ், பிரிஜேஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, ராம்குமார் முதல் மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, மாயா தேவி (35) என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர், இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். திருமணம் நடந்து சிறிது நாட்களிலேயே இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ராம்குமார், தனது இரண்டாவது மனைவி மாயா தேவியை சந்தேகித்தார். தனது மகன்களுடன் உறவில் இருப்பதாக ராம்குமார் சந்தேகித்ததாக கூறப்படுகிறது.  இதனால், மாயா தேவியை கொலை செய்ய குடும்பத்துடன் திட்டம் தீட்டினர்.  

கொடூரமாக கொலை செய்த கணவர்:

அதன்படி, பண்டா மாவட்டத்திற்கு மாயா தேவியை காரில், மூன்றும் பேரும் அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது,  அங்கு மாயா தேவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து,  கோடாரியால் அவரின் தலை மற்றும் நான்கு விரல்களை வெட்டியுள்ளனர்.  மேலும், பெண்ணின் அடையாளத்தை மறைக்க பற்களை உடைத்திருப்பதோடு, பெண்ணின் தலை முடியையும் வெட்டி உள்ளனர்.

பின்னர், அங்கிருந்த அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அழுகிய நிலையில், ஒரு சடலம் கிடந்தது பற்றி  அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலை பகுதி மற்றும் நான்கு விரல்களையும் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் கோடாரி ஆகியவை போலீசார் மீட்டுள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்தனர். அதில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து, மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாக தெரிகிறது. 


மேலும் படிக்க 

Crime: பணம் கொடுக்க மாட்டியா? பெண்ணை அடித்தே கொன்ற கொடூரம்: 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செ கொடுத்த திடீர் ட்விஸ்ட்
திமுகவா.? அதிமுகவா.? யாருடன் கூட்டணி.? ஓட்டெடுப்பு நடத்திய பிரேமலதா- மா.செயலாளர்கள் கொடுத்த திடீர் ட்விஸ்ட்
North Korea tests missile: டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
டிரம்ப்புக்கு பயத்தை ஏற்படுத்திய கிம் ஜாங் உன்.! கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரெடி- வட கொரியா அதிரடி
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
Trump India: வெனிசுலா பிரச்னைக்கு மத்தியில் இந்தியாவிற்கு ட்ரம்ப் வார்னிங்.. ”எங்களுக்கு உதவி செய்யலைன்னா”
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
SSTA Strike: இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை! 
நனவாகும் வெளிநாட்டு கனவு! கத்தாரில் இலவச உயர்கல்வி: முழு உதவித்தொகை அறிவிப்பு- என்ன தகுதி?
நனவாகும் வெளிநாட்டு கனவு! கத்தாரில் இலவச உயர்கல்வி: முழு உதவித்தொகை அறிவிப்பு- என்ன தகுதி?
Tn Govt free laptop: மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
மாணவர்களே ரெடியா.! Al அதிநவீன தொழில்நுட்பத்தோடு Dell, Acer, HP இலவச லேப்டாப்.! அசத்தும் தமிழக அரசு
Top 10 News Headlines: மாணவர்களுக்கு லேப்டாப், வேதாந்தாவிற்கு அனுமதி, ஐபோன் ஏற்றுமதி அபாரம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மாணவர்களுக்கு லேப்டாப், வேதாந்தாவிற்கு அனுமதி, ஐபோன் ஏற்றுமதி அபாரம் - 11 மணி வரை இன்று
DMK vs Congress: கூட்டணி ஆட்சி.! நேரம் பார்த்து திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் காங்.எம்பி- அசால்டு செய்யும் திமுக
கூட்டணி ஆட்சி.! நேரம் பார்த்து திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் காங்.எம்பி- அசால்டு செய்யும் திமுக
Embed widget