மேலும் அறிய

CM Vijay: கையகப்படுத்தப்பட்ட பரந்தூர் நிலங்கள்! திருப்பித் தருமா தவெக அரசு? விஜய்யின் முடிவு என்ன?

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி கைவிடப்பட்ட நிலையில், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் என்ன செய்யப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கடந்த ஆட்சியில் திமுக அரசுக்கு எதிராக மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்தது பரந்தூர் விமான நிலைய விவகாரம். சென்னை விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்திற்காக பரந்தூரில் 3 ஆயிரத்து 700 ஏக்கர் அளவிலான நிலத்தில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்:

இதற்கான பணிகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மிகவும் தீவிரமாக குரல் கொடுத்து வந்தவர் தவெக தலைவர் விஜய். தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள விஜய், பரந்தூர் விமான நிலைய பணிகளை தொடர்வதற்கு தடை விதித்துள்ளார். 

நிலத்தை திருப்பித் தருமா?

கடந்த ஆட்சியில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 1700 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சூழலில், இந்த நிலத்தை தமிழக அரசு நிலத்தின் உரிமையாளர்களுக்கு திருப்பித் தருமா? அல்லது அரசே தங்கள் வசம் வைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்தது. 

ஏனென்றால், இந்த நிலத்தை கடந்த ஆட்சியில் நில எடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்தவில்லை. 1700 ஏக்கர் நிலங்களும் அந்தந்த நில உரிமையாளர்களின் சம்மதத்துடன் அரசுக்கு நேரடியாக பதிவு செய்து தரப்பட்டுள்ளது. இதனால், தற்போது அந்த நிலத்தை அரசு திருப்பித் தருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவே ஆகும். 

புதிய தொழிற்பூங்காவா?

தற்போது கையகப்படுத்தப்பட்ட அந்த 1700 ஏக்கர் நிலத்தில் புதிய தொழிற்பூங்கா அமைக்கலமா? என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. நிலத்தை கொடுத்த உரிமையாளர்கள் சிலர் தங்கள் நிலம் மீண்டும் தங்களுக்கு திரும்ப கிடைக்குமா? என்றும் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. நிலத்தை அரசுக்கு அளித்த உரிமையாளர்களுக்கு அரசின் சார்பில் அதற்கான தொகை வழங்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசு நிலத்தை திரும்ப வழங்கினாலும், அவர்கள் பெற்ற தொகையை மீண்டும் அரசுக்கு செலுத்த வேண்டியது அவசியம் ஆகும். 

இதனால், இந்த விவகாரத்தில் அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது? என்பது முக்கியமானது ஆகும். பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னை புறநகரில் புதிய விமான நிலையம் வேறு ஏதேனும் அமைக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அல்லது சென்னை விமான நிலையமே விரிவாக்கம் செய்யப்படுமா? இல்லாவிட்டால் இதே இட வசதியுடன் சென்னை விமான நிலையம் இயங்குமா? என்ற கேள்வியும் உருவாகியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

சுடுகாடு பிரச்சினை: கோட்டகுப்பத்தில் மீனவப் பெண்கள் கழுத்தில் கயிறு கட்டி தற்கொலை முயற்சி போராட்டம் - கடலோரக் கிராமத்தில் பெரும் பதற்றம்!
சுடுகாடு பிரச்சினை: கோட்டகுப்பத்தில் மீனவப் பெண்கள் கழுத்தில் கயிறு கட்டி தற்கொலை முயற்சி போராட்டம் - கடலோரக் கிராமத்தில் பெரும் பதற்றம்!
விழுப்புரம்: ஜூன் 10-ல் நாட்டுப் படகுகள் நேரடி ஆய்வு - கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கடும் எச்சரிக்கை!
விழுப்புரம்: ஜூன் 10-ல் நாட்டுப் படகுகள் நேரடி ஆய்வு - கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் கடும் எச்சரிக்கை!
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
பட்ஜெட் விலை.. அசத்தலான மைலேஜ்! குடும்பஸ்தனுங்களுக்கான இ ஸ்கூட்டர் Ampere Magnus Grand!
Embed widget