மேலும் அறிய

crime: ஒரு பெண்ணுடன் 2 பேருக்கு திருமணத்திற்கு மீறிய உறவு... கொலை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்.. என்ன நடந்தது?

திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஜல்லிக்கட்டு வீரர் கொலை. கள்ளக்காதலி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பாடி எ எனும் கிராமத்தில் கொல்லப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளம் ஒன்று  உள்ளது. இந்த குளத்தில் கடந்த 9-ந்தேதி இரவு ஆண் சடலம் ஒன்று கிடந்தது குறித்த தகவலறிந்த தீயணைப்பு படையினர், குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் மிதந்தவரின் உடலை மீட்டனர். இறந்தவரின் விபரம் பற்றி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த மணி (23) என்றும், அவர் ஜல்லிக்கட்டு வீரர் என்பதும் தெரியவந்தது. அவரை கை, கால் மற்றும் வாயை கட்டி கொடூரமாக கொலை செய்து உடலில் கல்லை கட்டி குளத்தில் வீசி இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

crime: ஒரு பெண்ணுடன் 2 பேருக்கு திருமணத்திற்கு மீறிய உறவு... கொலை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்.. என்ன நடந்தது?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வீரர் மணியை கொலை செய்தது தொடர்பாக கருங்குளத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் கரூரை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முறையான பதில் ஏதும் தராததால் அவர்கள் மீது போலீசார் சந்தேகமடைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் மணியை கொலை செய்தது தொடர்பாக பாலசுப்பிரமணி (47), அவரது மகன் பரத்ராஜ் (19), சுரேஷ் (42) மற்றும் கருங்குளத்தை சேர்ந்த மூக்காயி (33) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

crime: ஒரு பெண்ணுடன் 2 பேருக்கு திருமணத்திற்கு மீறிய உறவு... கொலை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்.. என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி மூக்காயி. பாலசுப்பிரமணி குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக கரூருக்கு சென்றார். அப்போது கரூரில் வசித்து வரும் மற்றொரு பாலசுப்பிரமணியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் பாலசுப்பிரமணியிடம் கடனாக மற்றொரு பாலசுப்பிரமணி பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வசூல் செய்வதற்காக அவர், பாலசுப்பிரமணி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மூக்காயிக்கும், மற்றொரு பாலசுப்பிரமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதையறிந்த பாலசுப்பிரமணி தனது மனைவியை கண்டித்துள்ளார். பின்னர் அவர்கள் கருங்குளத்துக்கு குடியேறினர். இதனால் அவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்ய கருங்குளத்தில் உள்ள ஜல்லிக்கட்டு வீரர் மணியிடம், மற்றொரு பாலசுப்பிரமணி கூறினார். அதன்படி மூக்காயி வீட்டுக்கு சென்று மணி பணத்தை வசூல் செய்துள்ளார். இதில் மூக்காயியுடன் மணிக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டது. இது மற்றொரு பாலசுப்பிரமணிக்கு தெரியவந்தது. இதனால் மணியை தீர்த்து கட்ட அவர் முடிவு செய்ததாகவும், இதைத்தொடர்ந்து கரூரில் மணிக்கு வேலை வாங்கி தருவதாக பாலசுப்பிரமணி கூறினார். இதை நம்பி கடந்த 4-ந்தேதி மணி கரூர் சென்றார்.

crime: ஒரு பெண்ணுடன் 2 பேருக்கு திருமணத்திற்கு மீறிய உறவு... கொலை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்.. என்ன நடந்தது?

அங்கிருந்து பாலசுப்பிரமணி, அவரது மகன் பரத்ராஜ், உறவினர் சுரேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மணியை ஒரு வேனில் குஜிலியம்பாறை அருகே கோட்டாநத்தத்தில் உள்ள கொடியரசு என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கிய மணியை ஒரு சாக்குமூட்டையில் கட்டினர். பின்னர் அவரை ஒரு வேனில் வைத்து குஜிலியம்பாறை அடுத்த கொல்லப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மணியின் கை, கால்கள் மற்றும் வாயை கட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடலில் கல்லை கட்டி குட்டையில் தூக்கி வீசி சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

 

தலைப்பு செய்திகள்

கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget