மேலும் அறிய

crime: ஒரு பெண்ணுடன் 2 பேருக்கு திருமணத்திற்கு மீறிய உறவு... கொலை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்.. என்ன நடந்தது?

திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஜல்லிக்கட்டு வீரர் கொலை. கள்ளக்காதலி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பாடி எ எனும் கிராமத்தில் கொல்லப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளம் ஒன்று  உள்ளது. இந்த குளத்தில் கடந்த 9-ந்தேதி இரவு ஆண் சடலம் ஒன்று கிடந்தது குறித்த தகவலறிந்த தீயணைப்பு படையினர், குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் மிதந்தவரின் உடலை மீட்டனர். இறந்தவரின் விபரம் பற்றி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த மணி (23) என்றும், அவர் ஜல்லிக்கட்டு வீரர் என்பதும் தெரியவந்தது. அவரை கை, கால் மற்றும் வாயை கட்டி கொடூரமாக கொலை செய்து உடலில் கல்லை கட்டி குளத்தில் வீசி இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

crime: ஒரு பெண்ணுடன் 2 பேருக்கு திருமணத்திற்கு மீறிய உறவு... கொலை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்.. என்ன நடந்தது?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வீரர் மணியை கொலை செய்தது தொடர்பாக கருங்குளத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் கரூரை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முறையான பதில் ஏதும் தராததால் அவர்கள் மீது போலீசார் சந்தேகமடைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் மணியை கொலை செய்தது தொடர்பாக பாலசுப்பிரமணி (47), அவரது மகன் பரத்ராஜ் (19), சுரேஷ் (42) மற்றும் கருங்குளத்தை சேர்ந்த மூக்காயி (33) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

crime: ஒரு பெண்ணுடன் 2 பேருக்கு திருமணத்திற்கு மீறிய உறவு... கொலை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்.. என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி மூக்காயி. பாலசுப்பிரமணி குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக கரூருக்கு சென்றார். அப்போது கரூரில் வசித்து வரும் மற்றொரு பாலசுப்பிரமணியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் பாலசுப்பிரமணியிடம் கடனாக மற்றொரு பாலசுப்பிரமணி பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வசூல் செய்வதற்காக அவர், பாலசுப்பிரமணி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மூக்காயிக்கும், மற்றொரு பாலசுப்பிரமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதையறிந்த பாலசுப்பிரமணி தனது மனைவியை கண்டித்துள்ளார். பின்னர் அவர்கள் கருங்குளத்துக்கு குடியேறினர். இதனால் அவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்ய கருங்குளத்தில் உள்ள ஜல்லிக்கட்டு வீரர் மணியிடம், மற்றொரு பாலசுப்பிரமணி கூறினார். அதன்படி மூக்காயி வீட்டுக்கு சென்று மணி பணத்தை வசூல் செய்துள்ளார். இதில் மூக்காயியுடன் மணிக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டது. இது மற்றொரு பாலசுப்பிரமணிக்கு தெரியவந்தது. இதனால் மணியை தீர்த்து கட்ட அவர் முடிவு செய்ததாகவும், இதைத்தொடர்ந்து கரூரில் மணிக்கு வேலை வாங்கி தருவதாக பாலசுப்பிரமணி கூறினார். இதை நம்பி கடந்த 4-ந்தேதி மணி கரூர் சென்றார்.

crime: ஒரு பெண்ணுடன் 2 பேருக்கு திருமணத்திற்கு மீறிய உறவு... கொலை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்.. என்ன நடந்தது?

அங்கிருந்து பாலசுப்பிரமணி, அவரது மகன் பரத்ராஜ், உறவினர் சுரேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மணியை ஒரு வேனில் குஜிலியம்பாறை அருகே கோட்டாநத்தத்தில் உள்ள கொடியரசு என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கிய மணியை ஒரு சாக்குமூட்டையில் கட்டினர். பின்னர் அவரை ஒரு வேனில் வைத்து குஜிலியம்பாறை அடுத்த கொல்லப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மணியின் கை, கால்கள் மற்றும் வாயை கட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடலில் கல்லை கட்டி குட்டையில் தூக்கி வீசி சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கம்பர் பெயர் சூட்ட மனம் இல்லையா..? பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் மயிலாடுதுறையில் பரபரப்பு...!
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget