மேலும் அறிய

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!

தீண்டாமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மேலூர் பகுதியில் சிறப்பு சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களில் மட்டும் அதிக அளவு கொலைகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக நெல்லையில் 2 நாளில் மூன்று கொலைகள் நடைபெற்றுள்ளன. இதனால் பழிக்குப் பலி அதிகரிப்பதாக 8 மாவட்ட போலீஸ் பாதிப்பு அளித்து வருகின்றனர். அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு வாரத்தில் 6 கொலைகள் நடைபெற்றுள்ளன.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
மதுரை மேலூர் பகுதியில் ஆதிக்க சாதியினரால் தூய்மை பணியாளர் அடித்து கொள்ளப்பட்டார். தென்மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக  அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து மூத்த வழக்கறிஞர் மேலூர் செல்லப்பாண்டி நம்மிடம், “போதைப் பொருள் காரணமாகவே அதிக குற்றசம்பவங்கள் நடைபெறுகின்றன. போதைப்பொருள் அடிப்படையில் தான் 90% குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
காவல்துறையினரை அதிகப்படுத்தாமல் கஞ்சா விற்பனையை எவ்வாறு குறைக்க முடியும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி போதைப் பொருள் அடிப்படையில் குற்றங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சட்ட விரோதமாக போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்கள் காவல்துறையினர் சிலருக்கு பணம் கொடுப்பதால், குற்றம் செய்யும் நபர்களுக்கே காவல்துறையினர் சிலர் உடந்தையாக இருக்கின்றனர்.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
மறைமுக புகார் அளித்தால் கூட, யார் புகார் அளித்தார் என்பதை குற்றவாளிகளிடம் சொல்லிவிடுகின்றனர். இதனால் புகார் அளிக்க கூட யாரும் முன் வருவதில்லை. எனவே போதை தடுப்புப் பிரிவினரை கூடுரலாக நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தினால் முக்கால்வாசி குற்றங்களை குறைக்கலாம். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை சாதிய கொலை அதிகளவு நடைபெறுகிறது. குறிப்பாக மேலூர் பகுதியில் இது போன்ற அதிக சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கண்காணிப்பு அமைப்பு இது தொடர்பான கூட்டம் நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. மேலூர் பகுதியில் பதவி ஏற்கும் டி.எஸ்.பிகள் கூட முறையாக விசாரணை நடத்துவதில்லை. அடிமட்ட காவல்துறையினர் சொல்வதை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர்.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
உள்ளூர் போலீஸ்கள் அதிகளவு இருப்பதால் உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளிக்கின்றனர். சாதிய இந்துக்களாக செயல்படும் சில காவல்துறையினர் குற்றங்களை மறைக்க முயற்சி எடுக்கின்றனர். கர்ணன் திரைப்பட காட்சிகள் போல உயர் அதிகாரிகளுக்கு தவறான கண்ணோட்டத்தை விதைக்கின்றனர். புகார் அளிக்கக் கூட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. வழக்கு பதிய தனி போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இப்படி எளியவர்களுக்கு எதிரான ஒவ்வொரு வழக்கிற்கும் போராட்டமாக தான் இருக்கிறது.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
தொடர் குற்றசம்பவங்களை நிகழ்த்தும் நபர்கள் கொலை குற்றங்கள்வரை செல்லும் போது கூட குண்டாஸ் போட தயங்குகின்றனர். குற்றவாளிகளுக்கு தகுந்தது போலவே வழக்குகள் மாற்றியமைக்கப்படுகின்றன.  எனவே காவல்துறையில் உள்ளூரில் இருந்துகொண்டு சாதிய வன்மத்தோடு செயல்படும் நபர்களை வெளியூருக்கு மாற்ற வேண்டும். நீண்ட வருடங்களாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றும் நபர்களையும் மாற்ற வேண்டும். நவீன தீண்டாமையை ஒழிக்க வேண்டும். மேலும் தீண்டாமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மேலூர் பகுதியில் சிறப்பு சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதிக சாதிய கொலைகள் நடக்கும் பகுதியாக மேலூரை அறிவிக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் 15ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் 15ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Iran Trump Russia Warning: ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் 15ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் 15ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Iran Trump Russia Warning: ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
Maruti Fronx No.1: காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
Gold Silver Rate New Peak: ஏய் தங்கமே.. உனக்கு மனசாட்சியே இல்லையா.? இன்று சவரனுக்கு ரூ.880 உயர்வு; ரூ.300-ஐ கடந்த வெள்ளி
ஏய் தங்கமே.. உனக்கு மனசாட்சியே இல்லையா.? இன்று சவரனுக்கு ரூ.880 உயர்வு; ரூ.300-ஐ கடந்த வெள்ளி
7 Seater SUV: 7 சீட்டர்னா நாங்க தான்.. சட்டையை கிழித்து சண்டை - எர்டிகா Vs ஸ்கார்ப்பியோ, குறுக்கே பொலேரோ
7 Seater SUV: 7 சீட்டர்னா நாங்க தான்.. சட்டையை கிழித்து சண்டை - எர்டிகா Vs ஸ்கார்ப்பியோ, குறுக்கே பொலேரோ
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Embed widget