மேலும் அறிய

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!

தீண்டாமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மேலூர் பகுதியில் சிறப்பு சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களில் மட்டும் அதிக அளவு கொலைகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக நெல்லையில் 2 நாளில் மூன்று கொலைகள் நடைபெற்றுள்ளன. இதனால் பழிக்குப் பலி அதிகரிப்பதாக 8 மாவட்ட போலீஸ் பாதிப்பு அளித்து வருகின்றனர். அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு வாரத்தில் 6 கொலைகள் நடைபெற்றுள்ளன.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
மதுரை மேலூர் பகுதியில் ஆதிக்க சாதியினரால் தூய்மை பணியாளர் அடித்து கொள்ளப்பட்டார். தென்மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பதாக  அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து மூத்த வழக்கறிஞர் மேலூர் செல்லப்பாண்டி நம்மிடம், “போதைப் பொருள் காரணமாகவே அதிக குற்றசம்பவங்கள் நடைபெறுகின்றன. போதைப்பொருள் அடிப்படையில் தான் 90% குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாக மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
காவல்துறையினரை அதிகப்படுத்தாமல் கஞ்சா விற்பனையை எவ்வாறு குறைக்க முடியும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படி போதைப் பொருள் அடிப்படையில் குற்றங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சட்ட விரோதமாக போதைப் பொருள் விற்பனை செய்யும் நபர்கள் காவல்துறையினர் சிலருக்கு பணம் கொடுப்பதால், குற்றம் செய்யும் நபர்களுக்கே காவல்துறையினர் சிலர் உடந்தையாக இருக்கின்றனர்.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
மறைமுக புகார் அளித்தால் கூட, யார் புகார் அளித்தார் என்பதை குற்றவாளிகளிடம் சொல்லிவிடுகின்றனர். இதனால் புகார் அளிக்க கூட யாரும் முன் வருவதில்லை. எனவே போதை தடுப்புப் பிரிவினரை கூடுரலாக நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தினால் முக்கால்வாசி குற்றங்களை குறைக்கலாம். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை சாதிய கொலை அதிகளவு நடைபெறுகிறது. குறிப்பாக மேலூர் பகுதியில் இது போன்ற அதிக சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் கண்காணிப்பு அமைப்பு இது தொடர்பான கூட்டம் நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. மேலூர் பகுதியில் பதவி ஏற்கும் டி.எஸ்.பிகள் கூட முறையாக விசாரணை நடத்துவதில்லை. அடிமட்ட காவல்துறையினர் சொல்வதை மட்டும் எடுத்துக் கொள்கின்றனர்.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
உள்ளூர் போலீஸ்கள் அதிகளவு இருப்பதால் உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளிக்கின்றனர். சாதிய இந்துக்களாக செயல்படும் சில காவல்துறையினர் குற்றங்களை மறைக்க முயற்சி எடுக்கின்றனர். கர்ணன் திரைப்பட காட்சிகள் போல உயர் அதிகாரிகளுக்கு தவறான கண்ணோட்டத்தை விதைக்கின்றனர். புகார் அளிக்கக் கூட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. வழக்கு பதிய தனி போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இப்படி எளியவர்களுக்கு எதிரான ஒவ்வொரு வழக்கிற்கும் போராட்டமாக தான் இருக்கிறது.

போதைப் பொருட்களால் தொடரும் கொலைகள்.. அச்சத்தில் தென்மாவட்டங்கள்..!
தொடர் குற்றசம்பவங்களை நிகழ்த்தும் நபர்கள் கொலை குற்றங்கள்வரை செல்லும் போது கூட குண்டாஸ் போட தயங்குகின்றனர். குற்றவாளிகளுக்கு தகுந்தது போலவே வழக்குகள் மாற்றியமைக்கப்படுகின்றன.  எனவே காவல்துறையில் உள்ளூரில் இருந்துகொண்டு சாதிய வன்மத்தோடு செயல்படும் நபர்களை வெளியூருக்கு மாற்ற வேண்டும். நீண்ட வருடங்களாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றும் நபர்களையும் மாற்ற வேண்டும். நவீன தீண்டாமையை ஒழிக்க வேண்டும். மேலும் தீண்டாமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மேலூர் பகுதியில் சிறப்பு சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். அதிக சாதிய கொலைகள் நடக்கும் பகுதியாக மேலூரை அறிவிக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

தலைப்பு செய்திகள்

ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கேலி செய்து முகபாவனை.! வைரலான வீடியோ... திமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் கொடுத்த ஷாக்
கேலி செய்து முகபாவனை.! வைரலான வீடியோ... திமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் கொடுத்த ஷாக்
CM Vijay Bday: பட்டாசாய், தீப்பொறி பறக்க இணையத்தை கலக்கும் CM விஜயின் மேஷ்-அப் வீடியோக்கள் - குவியும் வாழ்த்து
பட்டாசாய், தீப்பொறி பறக்க இணையத்தை கலக்கும் CM விஜயின் மேஷ்-அப் வீடியோக்கள் - குவியும் வாழ்த்து
திமுகவில் உச்சகட்ட குழப்பம்: ஸ்டாலினை தூக்கி எறிய கனிமொழி ஆசை- நாஞ்சில் சம்பத் பரபர!
திமுகவில் உச்சகட்ட குழப்பம்: ஸ்டாலினை தூக்கி எறிய கனிமொழி ஆசை- நாஞ்சில் சம்பத் பரபர!
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விபத்து.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விபத்து.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மீண்டும் டெலிகிராமில் கசிந்த நீட் தேர்வு வினாத்தாள்? வைரல் வீடியோ- நடந்தது இதுதான்!
மீண்டும் டெலிகிராமில் கசிந்த நீட் தேர்வு வினாத்தாள்? வைரல் வீடியோ- நடந்தது இதுதான்!
புதுச்சேரி பல்கலைக்கழக PG சேர்க்கை 2026: தற்காலிக மாணவர் பட்டியல் வெளியீடு!
புதுச்சேரி பல்கலைக்கழக PG சேர்க்கை 2026: தற்காலிக மாணவர் பட்டியல் வெளியீடு!
Skoda Slavia: புத்தம் புதுசா ஸ்கோடா ஸ்லாவியா..!ஃபேஸ்லிஃப்டில் வந்த அப்க்ரேட்களின் விவரங்கள் - விலை எப்படி?
புத்தம் புதுசா ஸ்கோடா ஸ்லாவியா..!ஃபேஸ்லிஃப்டில் வந்த அப்க்ரேட்களின் விவரங்கள் - விலை எப்படி?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய விலை நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget