மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்கள் மதுக்கடைகளை மூட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் 26-ம் ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை முழுமையாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் 16-ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை முழுமையாக மூட மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், உத்தரவிட்டுள்ளார்.

அரசு அறிவிப்பு மற்றும் பின்னணி

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் விதிகளின்படி, முக்கியமான தேசியத் தலைவர்களின் நினைவு நாட்கள், பிறந்த நாட்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் ‘உலர் தினமாக’ (Dry Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஜனவரி மாதம் வரவிருக்கும் இரண்டு மிக முக்கியமான தினங்களில் பொது அமைதியைப் பேணவும், அரசு விதிகளுக்கு மதிப்பளிக்கவும் மயிலாடுதுறை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியரின் அதிகாரப்பூர்வ உத்தரவு

இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

"மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லரை விற்பனைக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் கிளப்புகளில் செயல்படும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் (Bars) அனைத்தும் ஜனவரி 16, 2026 (வெள்ளிக்கிழமை) – திருவள்ளுவர் தினம்

ஜனவரி 26, 2026 (திங்கட்கிழமை) குடியரசு தினம் ஆகிய நாட்களில் முழுவதுமாக மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் எவ்வித மதுபான விற்பனையும் நடைபெறக்கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என எச்சரிக்கை விடுத்துள்ளார்‌.

கண்காணிப்பு மற்றும் கடுமையான நடவடிக்கை

மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கும், உரிமம் பெற்ற தனியார் மதுக்கூட உரிமையாளர்களுக்கும் உரிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தீவிர கண்காணிப்பு 

விற்பனை தடையை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க காவல்துறையினரும், ஆயத்தீர்வைத் துறையினரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஆணையைச் செயல்படுத்தத் தவறும் பட்சத்தில், தொடர்புடைய மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் மதுக்கூட உரிமதாரர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேவைப்படின் அவர்களின் விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்" என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தனது அறிக்கையில் எச்சரிக்கையாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் 

திருவள்ளுவர் தினத்தை அமைதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் கொண்டாடுவதற்கும், குடியரசு தின விழாவைத் தேசப்பற்றுடன் சிறப்பிப்பதற்கும் இந்த மது விற்பனைத் தடை அவசியம் எனச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். அன்றைய தினங்களில் மது அருந்திவிட்டு பொது இடங்களில் இடையூறு செய்பவர்கள் மீது காவல்துறை மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகளின் நுழைவு வாயில்களில் இது குறித்த அறிவிப்புப் பலகைகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மதுக்கூட உரிமையாளர்கள் இந்த அரசு உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget