மேலும் அறிய

காணாமல் போன நகை.. சிசிடிவி கேமிராவால் சிக்கிய பெண்

நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 22 கிராம் தங்க கம்மலை திருடிச் சென்ற பெண் கைது. 22 கிராம் தங்க கம்மல் மீட்பு.

காணாமல் போன நகை 

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணி ரசாக் கார்டன் பகுதியில் நாகராஜன் ( வயது 49 ) தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 23.04.2025 அன்று இரவு கடையிலிருந்தபோது , கடைக்கு வந்த ஒரு பெண் மணி தாலியில் கோர்க்கும் உருப்படிகளை வாங்கி , அதற்கு அரக்கு போட வேண்டும் எனக் கூறி காத்திருந்து, சிறிது நேரத்தில் அரக்கு போட வேண்டாம் எனக் கூறி அவர் வாங்கிய தங்க உருப்படிகளுக்கான பணத்தை கொடுத்து, உருப்படிகளை வாங்கி சென்றுள்ளார்.

சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் தங்க நகைகளை சரி பார்த்தபோது , 22 கிராம் எடை கொண்ட ஒரு ஜோடி தங்க கம்மல் காணாமல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து நாகராஜன் K-3 அமைந்தகரை காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி கேமிராவில் சிக்கிய பெண்

К-3 அமைந்தகரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடையிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது , தங்க கம்மல் ஜோடியை திருடிச் சென்றது சென்னை பொழிச்சலூர் நேரு நகர் வனஜா 2 வது தெருவை சேர்ந்த தாட்சாயினி ( வயது 52 ) என்பது தெரிய வந்தது. 

பின்பு அவரை கைது செய்து, அவரிடமிருந்து கடையில் திருடிய 22 கிராம் எடை கொண்ட ஒரு ஜோடி தங்க கம்மல் மீட்கப்பட்டது. விசாரணையில் தாட்சாயினி மீது ஏற்கனவே சைதாப்பேட்டை, யானைகவுனி , ஜெ.ஜெ. நகர் , ஆயிரம் விளக்கு , சௌந்தரபாண்டியனார் அங்காடி மற்றும் நசரத்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் 7 திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட தாட்சாயினி விசாரணைக்குப் பின்னர் , நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆட்டோவில் வந்து , கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற 2 நபர்கள்

சென்னை மேற்கு மாம்பலம் படவேட்டம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் செல்வமணி ( வயது 26 ) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் , இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் , செல்வமணி 26.04.2025 அன்று இரவு மருத்துவமனையில் தாயாரை பார்த்து விட்டு, மறுநாள் (27.04.2025) அதிகாலை, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில், மேற்கு மாம்பலம், ரெட்டி குப்பம் சாலையில் செல்லும் போது, ஆட்டோவில் வந்த 2 நபர்கள் செல்வமணியை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி , அவர் வைத்திருந்த பணம் ரூ.3,000/-ஐ பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.

இது குறித்து செல்வமணி R-6 குமரன் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். R-6 குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட செனாய் நகர் பகுதியை சேர்ந்த அனுஷ் ( வயது 24 ) , கணேஷ் ( வயது 37 ) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.1,000/-மீட்கப்பட்டது.

விசாரணையில் அனுஷ் மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகளும்,  கணேஷ் மீது 14 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 2 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget