மேலும் அறிய

சென்னையில் தலை விரித்தாடும் கஞ்சா.. குடும்பத்துடன் கஞ்சா விற்பனை.. கட்டுக்கட்டாக சிக்கிய கஞ்சா பொட்டலம்

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி கைது.

குரோம்பேட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில தம்பதியினரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்

கஞ்சாவும் சென்னை புறநகர் பகுதிகளும் 

சென்னை எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது, அதற்கேற்றார் போல் சென்னை புறநகர் பகுதிகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. நாள்தோறும் பொதுமக்களின் குடியேற்றமும் அதிகரித்து வருகிறது. மறுபுறம் கல்லூரிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களும் சென்னை புறநகர் நோக்கி படையெடுக்கின்றனர். 

இளைஞர்களை குறிவைத்து

தொடர்ந்து இளைஞர்கள் அதிகளவு சென்னை புறநகர் பகுதிகளாக இருக்கக்கூடிய தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பல் பகுதிகளில் ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா மோகமும் அதிகரித்திருப்பதால், இவற்றை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க பல்வேறு குழுக்கள் உலா வருகின்றன.

உள்ளுரை சேர்ந்த இளைஞர்கள், குட்டி ரவுடிகள், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என பாகுபாடு இல்லாமல் பலரும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை காவல்துறையினர் முறையாக தடுப்பதில்லை என குற்றச்சாட்டும் நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இந்தநிலையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வெளிமாநில தம்பதி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாருக்கு ரகசிய தகவல்

சென்னை குரோம்பேட்டை அடுத்த நாகல்கேனி பகுதியில் உள்ள மீன் விற்பனையகம் அருகே சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகம்படும் படி நின்று கொண்டிருந்த வடமாநில தம்பதியை பிடித்து சோதனைச் செய்த பொழுது, அவர்களிடம் 2 கிலோ மதிப்புள்ள  கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.

சிக்கிய தம்பதி

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரனையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷியாம் ஹன்ஸ் (33) மற்றும் பரிமா ஹன்ஸ்(30) எனவ திருப்போரூரில் தங்கி கட்டடட வேலை செய்து வந்த நிலையில் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு பல்லாவரம், தாம்பரம், சங்கர்நகர் ஆகிய பகுதியில் விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புகொண்டதை அடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சில ஆண்டுகளாகவே இந்த தம்பதியினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் எங்கிருந்து இருவரும் கஞ்சாவை கொண்டு வந்தார்கள், கஞ்சா சப்ளை செய்யும் முக்கிய நபர் யார் ? இதில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் விசாரணையை துவங்கியுள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
IND vs ZIM T20: ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு வாய்ப்பு! யார் இல்லை தெரியுமா?
IND vs ZIM T20: ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு வாய்ப்பு! யார் இல்லை தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
IND vs ZIM T20: ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு வாய்ப்பு! யார் இல்லை தெரியுமா?
IND vs ZIM T20: ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணியில் சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு வாய்ப்பு! யார் இல்லை தெரியுமா?
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ITR Filing: ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
Embed widget