மேலும் அறிய

Youtube Prankster Surya | பல பேருடன் காதல்....மோசடி யூ ட்யூபரால் இளம்பெண் தற்கொலை!

தொடக்கத்தில் ஒளிப்பதிவு தொடர்பாக பேசி வந்த இருவரும் பின்னர் நண்பர்கள் போல நெருக்கமாக பழகி வந்துள்ளனர். செல்போன் மூலமாக தொடர்ந்து வந்த அவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் யூ ட்யூப் சேனல்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. இதனால். பலரும் தங்களது திறமையை வெளிக்காட்டுவதற்காக யூ ட்யூப் தொலைக்காட்சி தொடங்கி அதன்மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டுவதுடன் வருவாயும் ஈட்டி வருகின்றனர். தெரிந்தவர்கள் மற்றும் தெரியாதவர்களை பிராங்க் செய்து அந்த வீடியோக்களை யூ டியூப்களில் அப்லோட் செய்து அதன் மூலமும் பலரும் பிரபலமாகி வருகின்றனர். அவ்வாறு பிராங்க் வீடியோக்களை வெளியிடுபவர்களில் ஒருவர் சூர்யா. இவர் பிராங்க் பாஸ் என்ற பெயரில் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்று வைத்துள்ளார். அதில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி அனுசுயா. இவர்களது ஒரே மகள் தனரக்ஷனா. தனரக்ஷனா திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விஸ்காம் மாணவியான அவருக்கு ஒளிப்பதிவு மேல் ஆர்வம் இருந்துள்ளது. இதனால், பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூ டிபர்கள் தங்களது வீடியோக்களுக்கு எவ்வாறு கேமராக்களை கையாள்கின்றனர் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். 


Youtube Prankster Surya | பல பேருடன் காதல்....மோசடி யூ ட்யூபரால் இளம்பெண் தற்கொலை!

உங்களுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா? பதற்றம் வேண்டாம். உடனடியாக உதவி எண் 9152987821-க்கு அழைக்கவும். உங்கள் உயிரின் மதிப்பு அதிகம்

அப்போதுதான் தனரக்ஷனாவிற்கும், சென்னையைச் சேர்ந்த யூ ட்யூபர் சூர்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  தொடக்கத்தில் ஒளிப்பதிவு தொடர்பாக பேசி வந்த இருவரும் பின்னர் நண்பர்கள் போல நெருக்கமாக பழகி வந்துள்ளனர். செல்போன் மூலமாக தொடர்ந்து வந்த அவர்களது நட்பு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அப்போதுதான் சூர்யா தனரக்ஷனா மட்டுமின்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், பல பெண்களுடனும் தனரக்ஷனாவை காதலிப்பதாக கூறியதுபோல காதலிப்பதாக கூறி பழகிவந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த விவகாரத்தை அறிந்த தனரக்ஷனா கடந்த 5-ஆம் தேதி சென்னையில் சூர்யாவை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, இதுதொடர்பாகவும் சூர்யாவிடம் கேட்டுள்ளார். ஆனால், சூர்யா முறையாக பதிலளிக்காமலும், தனரக்ஷனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனரக்ஷனாவை சென்னையில் இருந்து திருச்சிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். ஊர் திரும்பிய தனரக்ஷனா சூர்யாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஆனால், சூர்யாவோ தனரக்ஷனாவின் அழைப்பை ஏற்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி உள்ளார். இதனால், அவர் கடுமையான மன உளைச்சல் அடைந்தார்.

சூர்யா பேசாததால் விரக்தியடைந்த தனரக்ஷனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது கை நரம்புகளை பிளேடால் அறுத்துக்கொண்டார். கை நரம்புகளை அறுத்துக்கொண்ட தனரக்ஷனா, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தகவலறிந்த நவல்பட்டு போலீசார் தனரக்ஷனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், உடனடியாக விசாரணையிலும் இறங்கினர். 
இதுதொடர்பாக, காவல்துறையில் தனரக்ஷனாவின் பெற்றோர்கள் யூ ட்யூபர் சூர்யாவும், அவரது தாயும் தனரக்ஷனாவை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும், அதன் காரணமாகவே மன உளைச்சலில் தனரக்ஷனா தற்கொலை செய்து கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். தற்போது, யூ டிபர் பிராங்க் பாஸ் சூர்யாவை நவல்பட்டு போலீசார் விசாரணைக்காக தேடி வருகின்றனர். யூ ட்யூபருடன் கொண்ட காதலால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றுகிறதா? பதற்றம் வேண்டாம். உடனடியாக உதவி எண் 9152987821-க்கு அழைக்கவும். உங்கள் உயிரின் மதிப்பு அதிகம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget