மேலும் அறிய

வங்காளதேசம் டூ இந்தியா! நடந்தே எல்லையைக் கடந்த சிறுமி! காரணத்தைக் கேட்டு ஷாக் ஆன பாதுகாப்புப் படை!

வங்காளதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது தந்தைக்கு பயந்து வீட்டில் இருந்து வெளியேறி நடந்தே இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். அவரை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர்.

இந்தியாவின் அண்டை நாடு வங்காளதேசம். இந்தியா மற்றும் வங்காளதேச எல்லை மிகவும் பெரிய எல்லை ஆகும். கடத்தல், தீவிரவாதிகள் அச்சுறுத்தல், சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறுதல் மற்றும் நாட்டை விட்டு வெளியேறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த எல்லையில் பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


வங்காளதேசம் டூ இந்தியா! நடந்தே எல்லையைக் கடந்த சிறுமி! காரணத்தைக் கேட்டு ஷாக் ஆன பாதுகாப்புப் படை!

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மதியம் மேற்கு வங்காளத்தில் உள்ள இந்தியா – வங்காளதேச எல்லையில் ஒரு சிறுமி ஊடுருவியதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, உடனடியாக அந்த சிறுமியை மீட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமி வங்காளதேசத்தில் உள்ள ஜெனடைா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த சிறுமிக்கு 15 வயதே ஆகிறது என்றும் தெரியவந்தது. இந்த மாவட்டத்தில் உள்ள பான்ஸ்பேரியாதான் இந்த சிறுமியின் சொந்த ஊர் என்பதையும் அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தனர். அந்த சிறுமியிடம் பணமோ, மாற்று உடையோ என்று வேறு எதுவுமே இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த சிறுமியின் தந்தை சிறுமியை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாலும், பல சமயங்களில் காரணமே இல்லாமல் துன்புறுத்தியதாலும் அந்த சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால், வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த சிறுமி எல்லையை கடந்து இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளார். அவரது கிராமத்தில் இருந்து இந்தியா- வங்காளதேச சர்வதேச எல்லை 3 கிலோ மீட்டர் மட்டுமே என்பதால், வீட்டில் இருந்து நடந்தே வந்து அந்த சிறுமி எல்லையை கடந்துள்ளார்.


வங்காளதேசம் டூ இந்தியா! நடந்தே எல்லையைக் கடந்த சிறுமி! காரணத்தைக் கேட்டு ஷாக் ஆன பாதுகாப்புப் படை!

அந்த சிறுமிக்கு அறிவுரை கூறி மீண்டும் அவரது நாட்டிற்கே அனுப்பி வைக்க பாதுகாப்பு படையினர் முடிவு செய்தபோது, அந்த சிறுமி தனது வீட்டிற்கு செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டார். பின்னர், அந்த சிறுமியை குழந்தைகள் தன்னார்வ அமைப்பு ஒன்றிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், வங்காளதேச எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடமும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியா – வங்காளதேச சர்வதேச எல்லை மிகவும் பெரியது ஆகும். மொத்தமுள்ள 4 ஆயிரத்து 96 கி.மீட்டரில் மேற்கு வங்காளத்தில் மட்டும் 2 ஆயிரத்து 216 கி.மீட்டர் எல்லை அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : Crime | தகாத உறவுக்கு மறுத்ததால் ஆத்திரம்.. நண்பரின் மனைவியைக் கொன்று, சோபாவுக்குள் மறைப்பு.. செருப்பால் பிடிபட்ட குற்றவாளி..

மேலும் படிக்க : Crime | 300 ரூபாய் தராததால் கொடூரம்.. மனைவி கண்முன்னே கணவனைக் குத்திக் கொன்றவர் கைது..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Chennai Power Cut(16.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!
Nainar Nagendran | ”சோறு கூட போடுறோம் ஓட்டு போட மாட்டோம்” அதிர்ச்சியில் உறைந்த  நயினார் நாகேந்திரன்
மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Chennai Power Cut(16.07.25): சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
என்னுடைய உயிருக்கு ஆபத்து! ஆதவ் அர்ஜுனா போலீசில் புகார்! பின்னணி என்ன?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
ரூ.35 ஆயிரம் ஊதியம்.. கிராம உதவியாளர் பணி- 134 இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
MK Stalin: மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கு கண்டிப்பா வேணுமா.? இத மட்டும் பண்ணுங்க - ஸ்டாலினே தந்த அப்டேட்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Teachers Protest: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்வதா? அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதா? அன்புமணி விளாசல்!
Teachers Protest: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்வதா? அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதா? அன்புமணி விளாசல்!
Embed widget