மேலும் அறிய

விழுப்புரம் சிறுவன் குடும்பத்திற்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு: என்.ஓ.சி., வாங்காமல் கொடி நட்டது அம்பலம்!

கொடி கம்பங்களை நடுவதற்கு தடையில்லா சான்றிதழுக்கான விண்ணப்பம் கலெக்டருக்கு அனுப்பப்பட வேண்டும். ஆனால் எந்த விண்ணப்பமும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 8ஆம் வகுப்பு படிக்கும்  13 வயது தினேஷ் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அச்சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடாக 1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நடைப்பெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10 க்கும் மேற்ப்பட்டவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அதில் விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன தினேஷ் என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அச்சாலையில் மின் பகிர்மான கழகம் செயல்ப்பட்டு வருவதால் அங்கு அதிக அளவிலான உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. அப்போது பணியில் ஈடுப்பட்டு இருந்த சிறுவன் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உராசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் தூக்கி வீசப்பட்டான்.

படுகாயம் அடைந்த சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது, சனிக்கிழமை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி தொடர்புகொண்ட போது, மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தெரியும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும், விழா ஏற்பாட்டாளர் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 1.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


விழுப்புரம் சிறுவன் குடும்பத்திற்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு: என்.ஓ.சி., வாங்காமல் கொடி நட்டது அம்பலம்!

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சாலை நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இருப்பதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், கொடி கம்பங்களை நடுவதற்கு தடையில்லா சான்றிதழுக்கான விண்ணப்பம் கலெக்டருக்கு அனுப்பப்பட வேண்டும். பின்னர் அவர் அதை நகராட்சிக்கு கட்டணம் செலுத்துவதற்காக அனுப்புவார். ஆனால் எந்த விண்ணப்பமும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த காலத்தில் ஃப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களால் ஏற்பட்ட விபத்துகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நிகழ்ச்சிகளில் ஆடம்பரத்தை தவிர்க்குமாறு  கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். 2019 ஆம் ஆண்டில், சென்னையில் அதிமுக ஃப்ளெக்ஸ் பேனர் மோதியதில் ஒரு இளம் பெண் தனது ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து இறந்தார். அதே ஆண்டு கோவையில் ஸ்கூட்டரில் சென்ற மற்றொரு பெண், அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுபஸ்ரீக்கு எழுப்பப்பட்ட நியாயம்... தினேஷிற்கு மறைக்கப்பட்டது ஏன்? ஆட்சி மாறினாலும் மாறாத காட்சி!

 

தலைப்பு செய்திகள்

பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
புழல் சிறையில் மதுரை ரவுடியை கொலை செய்ய சதியா..? ரூ.1 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!
புழல் சிறையில் மதுரை ரவுடியை கொலை செய்ய சதியா..? ரூ.1 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!
மிட்நைட் திருட்டு... இலங்கை டூ வெளிநாடு ஸ்கெட்ச்! சினிமா பாணியில் மடக்கப்பட்ட சர்வதேச சிலை கடத்தல் கும்பல்!
மிட்நைட் திருட்டு... இலங்கை டூ வெளிநாடு ஸ்கெட்ச்! சினிமா பாணியில் மடக்கப்பட்ட சர்வதேச சிலை கடத்தல் கும்பல்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
TVK Government : ‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ பரபரப்பு தகவலை வெளியிட்ட திமுக..!
‘விஜய் ஆட்சிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள்’ தகவலை வெளியிட்ட திமுக..!
Diesel Hatchback: நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
நாட்டின் ஒரே டீசல் ஹேட்ச்பேக்..! 35kM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், பட்ஜெட்டில் ப்ரீமியம் கார்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
Onam festival Special Train : 100 சிறப்பு ரயில்.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு குஷி- எங்கிருந்து எங்கே.? ரயில்வே அமைச்சர் அதிரடி
100 சிறப்பு ரயில்.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு குஷி- எங்கிருந்து எங்கே.? ரயில்வே அமைச்சர் அதிரடி
SENTHIL BALAJI vs TVK : செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Crime: திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
திருமணமாகி மூன்றே மாதங்கள்..! காதலிக்காக அழகு மனைவிக்கு கணவன் செய்த கொடூரம் - நேபாளம் ப்ளான்
Embed widget