மேலும் அறிய

’தந்தையை இழிவாக பேசியதால் தாத்தா, பாட்டி எரித்து கொலை’- மது அருந்திவிட்டு சிறுவன் வெறிச்செயல்...!

’’ஆத்திரமடைந்த சிறுவன் மது அருந்திவிட்டு வந்து தாத்தா-பாட்டி தூங்கும்போது வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார். மேலும் வெளியே வரக்கூடாது என்பதால் கதவை வெளிபுறம் பூட்டி உள்ளார்’’

சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தாம்பட்டி காமம் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி காட்டு ராஜா (75) இவரது மனைவி காசியம்மாள் (65)‌. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் மூன்று பேரும் திருமணமாகி தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு காட்டு ராஜா தனது மனைவியுடன் அவரது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில், அவரது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டிற்கு அருகில் சத்தம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது. தீ வேகமாக பரவியதால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

’தந்தையை இழிவாக பேசியதால் தாத்தா, பாட்டி எரித்து கொலை’- மது அருந்திவிட்டு சிறுவன் வெறிச்செயல்...!

உள்ளே சென்று பார்த்தபோது காட்டு ராஜாவும், காசியம்மாளும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து காட்டு ராஜாவின் மகன்கள் குடும்பத்தினரை விசாரணை நடத்திய போது, காட்டு ராஜா - காசியம்மாள் இவர்களது இரண்டாவது மகன் குமார் (48) உயிரிழந்த பெற்றோர் வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார். இவரது 16 வயது மகன் பெத்தநாயக்கன் பாளையம் அரசுப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் காவல் துறையினர் விசாரணையின்போது முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

’தந்தையை இழிவாக பேசியதால் தாத்தா, பாட்டி எரித்து கொலை’- மது அருந்திவிட்டு சிறுவன் வெறிச்செயல்...!

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், காட்டுராஜாவின் இரண்டாவது மகனான குமார் குடிபோதையில் தினமும் அவரது மனைவி ஜெயலட்சுமி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இவரது 16 வயது மகன் தாயை அடிக்க வேண்டாம் என்று கண்டித்துள்ளார். இதை கேட்காத தந்தையின் செயல்பாட்டிற்கு அவர்களது பெற்றோரே காரணம் என்று நினைத்ததாலும் சிறுவனின் தந்தை குமாரை காட்டு ராஜா இழிவுபடுத்தி பேசியதாலும் ஆத்திரமடைந்த சிறுவன் மது அருந்திவிட்டு வந்து தாத்தா-பாட்டி தூங்கும்போது வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து அவர்கள் வெளியே தப்பி ஓடி வந்து விடக்கூடாது என்பதற்காக வீட்டின் வெளிப்பக்கத்தில் பூட்டியுள்ளார். கொலை செய்ததை சிறுவன் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அவனை சேலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் நல மையத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 16 வயது சிறுவன் தாத்தா பாட்டியை கொலை செய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

வயதான நபருடன் தொடர்பு.. மனைவியை கொன்ற கணவன்.. ஃப்ரிட்ஜில் இருந்த தலை.. நடந்தது என்ன?
வயதான நபருடன் தொடர்பு.. மனைவியை கொன்ற கணவன்.. ஃப்ரிட்ஜில் இருந்த தலை.. நடந்தது என்ன?
தமிழக வெற்றி கழக கொடியை சட்டென கழற்றியது ஏன்? மயிலாடுதுறை விபத்தில் மறைக்கப்படும் ரகசியம்!
தமிழக வெற்றி கழக கொடியை சட்டென கழற்றியது ஏன்? மயிலாடுதுறை விபத்தில் மறைக்கப்படும் ரகசியம்!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் !! கொந்தளித்த பெற்றோர்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் !! கொந்தளித்த பெற்றோர்
ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல் !! மூட்டையுடன் சிக்கிய 2 பேர்
ஒடிசாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தல் !! மூட்டையுடன் சிக்கிய 2 பேர்

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
CM Joseph Vijay: சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை கேலி செய்தேனா? .. முதலமைச்சர் விஜய் பரபரப்பு விளக்கம்!
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
திமுக-தான் கேட்கல.. சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்றாரு.. அடித்துச் சொல்லும் பிரேமலதா விஜயகாந்த்
Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 
Madurantakam By Election: மதுராந்தகம் மக்களே உஷார்! தேர்தல் விதிமீறலா? புகார் அளிக்க உடனே இந்த எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 
TVK vs DMK:
TVK vs DMK: "பதறல் நிதி.. கதறல் நிதி.. ஆபாசநிதி.." உதயநிதியை தாறுமாறாக விமர்சித்த தவெக!
Vinayagar Chaturthi Holiday: மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! செப். 12 முதல் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- வெளியான அறிவிப்பு
மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! செப். 12 முதல் மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- வெளியான அறிவிப்பு
Vinayagar Chaturthi 2026: வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. சாமி கும்பிட சரியான நேரம் எது? .. விவரம் இதோ!
Vinayagar Chaturthi 2026: வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. சாமி கும்பிட சரியான நேரம் எது? .. விவரம் இதோ!
கள்ளச்சாராய மரணம்.. டாஸ்மாக் நேரம் மாற்றம், கள் இறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை!
கள்ளச்சாராய மரணம்.. டாஸ்மாக் நேரம் மாற்றம், கள் இறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை!
EV Velu: ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
Embed widget