மேலும் அறிய

’தந்தையை இழிவாக பேசியதால் தாத்தா, பாட்டி எரித்து கொலை’- மது அருந்திவிட்டு சிறுவன் வெறிச்செயல்...!

’’ஆத்திரமடைந்த சிறுவன் மது அருந்திவிட்டு வந்து தாத்தா-பாட்டி தூங்கும்போது வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார். மேலும் வெளியே வரக்கூடாது என்பதால் கதவை வெளிபுறம் பூட்டி உள்ளார்’’

சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தாம்பட்டி காமம் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி காட்டு ராஜா (75) இவரது மனைவி காசியம்மாள் (65)‌. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் மூன்று பேரும் திருமணமாகி தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு காட்டு ராஜா தனது மனைவியுடன் அவரது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில், அவரது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டிற்கு அருகில் சத்தம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது. தீ வேகமாக பரவியதால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

’தந்தையை இழிவாக பேசியதால் தாத்தா, பாட்டி எரித்து கொலை’- மது அருந்திவிட்டு சிறுவன் வெறிச்செயல்...!

உள்ளே சென்று பார்த்தபோது காட்டு ராஜாவும், காசியம்மாளும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து காட்டு ராஜாவின் மகன்கள் குடும்பத்தினரை விசாரணை நடத்திய போது, காட்டு ராஜா - காசியம்மாள் இவர்களது இரண்டாவது மகன் குமார் (48) உயிரிழந்த பெற்றோர் வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார். இவரது 16 வயது மகன் பெத்தநாயக்கன் பாளையம் அரசுப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் காவல் துறையினர் விசாரணையின்போது முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

’தந்தையை இழிவாக பேசியதால் தாத்தா, பாட்டி எரித்து கொலை’- மது அருந்திவிட்டு சிறுவன் வெறிச்செயல்...!

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், காட்டுராஜாவின் இரண்டாவது மகனான குமார் குடிபோதையில் தினமும் அவரது மனைவி ஜெயலட்சுமி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இவரது 16 வயது மகன் தாயை அடிக்க வேண்டாம் என்று கண்டித்துள்ளார். இதை கேட்காத தந்தையின் செயல்பாட்டிற்கு அவர்களது பெற்றோரே காரணம் என்று நினைத்ததாலும் சிறுவனின் தந்தை குமாரை காட்டு ராஜா இழிவுபடுத்தி பேசியதாலும் ஆத்திரமடைந்த சிறுவன் மது அருந்திவிட்டு வந்து தாத்தா-பாட்டி தூங்கும்போது வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து அவர்கள் வெளியே தப்பி ஓடி வந்து விடக்கூடாது என்பதற்காக வீட்டின் வெளிப்பக்கத்தில் பூட்டியுள்ளார். கொலை செய்ததை சிறுவன் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அவனை சேலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் நல மையத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 16 வயது சிறுவன் தாத்தா பாட்டியை கொலை செய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி
ஆன்லைனில் ஆர்டர் செய்றீங்களா? அப்போ இதப் படிங்க! - புதுச்சேரியில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்!
ஆன்லைனில் ஆர்டர் செய்றீங்களா? அப்போ இதப் படிங்க! - புதுச்சேரியில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்!
" எவன் கூட கள்ள தொடர்பு வெச்சுட்டு இருக்க " மனைவி மீது சந்தேகம் - இறுதியில் நடந்ந சோகம்
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை - விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை - விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
Embed widget