மேலும் அறிய

’தந்தையை இழிவாக பேசியதால் தாத்தா, பாட்டி எரித்து கொலை’- மது அருந்திவிட்டு சிறுவன் வெறிச்செயல்...!

’’ஆத்திரமடைந்த சிறுவன் மது அருந்திவிட்டு வந்து தாத்தா-பாட்டி தூங்கும்போது வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார். மேலும் வெளியே வரக்கூடாது என்பதால் கதவை வெளிபுறம் பூட்டி உள்ளார்’’

சேலம் மாவட்டம் ஆத்தூர் கொத்தாம்பட்டி காமம் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி காட்டு ராஜா (75) இவரது மனைவி காசியம்மாள் (65)‌. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் மூன்று பேரும் திருமணமாகி தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு காட்டு ராஜா தனது மனைவியுடன் அவரது குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில், அவரது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டிற்கு அருகில் சத்தம் கேட்டதால், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது. தீ வேகமாக பரவியதால் தண்ணீர் ஊற்றி அணைக்க முடியவில்லை. தகவலறிந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். 

’தந்தையை இழிவாக பேசியதால் தாத்தா, பாட்டி எரித்து கொலை’- மது அருந்திவிட்டு சிறுவன் வெறிச்செயல்...!

உள்ளே சென்று பார்த்தபோது காட்டு ராஜாவும், காசியம்மாளும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அவர்களது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து காட்டு ராஜாவின் மகன்கள் குடும்பத்தினரை விசாரணை நடத்திய போது, காட்டு ராஜா - காசியம்மாள் இவர்களது இரண்டாவது மகன் குமார் (48) உயிரிழந்த பெற்றோர் வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார். இவரது 16 வயது மகன் பெத்தநாயக்கன் பாளையம் அரசுப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் காவல் துறையினர் விசாரணையின்போது முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

’தந்தையை இழிவாக பேசியதால் தாத்தா, பாட்டி எரித்து கொலை’- மது அருந்திவிட்டு சிறுவன் வெறிச்செயல்...!

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், காட்டுராஜாவின் இரண்டாவது மகனான குமார் குடிபோதையில் தினமும் அவரது மனைவி ஜெயலட்சுமி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இவரது 16 வயது மகன் தாயை அடிக்க வேண்டாம் என்று கண்டித்துள்ளார். இதை கேட்காத தந்தையின் செயல்பாட்டிற்கு அவர்களது பெற்றோரே காரணம் என்று நினைத்ததாலும் சிறுவனின் தந்தை குமாரை காட்டு ராஜா இழிவுபடுத்தி பேசியதாலும் ஆத்திரமடைந்த சிறுவன் மது அருந்திவிட்டு வந்து தாத்தா-பாட்டி தூங்கும்போது வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து அவர்கள் வெளியே தப்பி ஓடி வந்து விடக்கூடாது என்பதற்காக வீட்டின் வெளிப்பக்கத்தில் பூட்டியுள்ளார். கொலை செய்ததை சிறுவன் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அவனை சேலத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் நல மையத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 16 வயது சிறுவன் தாத்தா பாட்டியை கொலை செய்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
Stalin Criticize EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
Trump Vs Samsung: உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை.. ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
கோவை, நீலகிரிக்கு தொடரும் ரெட் அலர்ட்.. தென் மாவட்டத்தில் காத்திருக்கு கனமழை - வெதர் ரிப்போர்ட் என்ன?
Stalin Criticize EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
Trump Vs Samsung: உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
2 New Type Corona: என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
LIVE | Kerala Lottery Result Today (25.05.2025): மாதத்தின் கடைசி ஞாயிறு.. சம்ருதி லாட்டரியில் சம்பாதிக்க போவது  யார்?
LIVE | Kerala Lottery Result Today (25.05.2025): மாதத்தின் கடைசி ஞாயிறு.. சம்ருதி லாட்டரியில் சம்பாதிக்க போவது யார்?
EPS Vs Stalin Vs Udhayanidhi: ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
"அரசு இதை செய்வது தற்கொலைக்கு சமமானது;" எச்சரிக்கை விடும் அன்புமணி
Embed widget