மேலும் அறிய

Crime: "தண்ணி வேணுமா.. இந்தா சிறுநீரை குடி.." பட்டியலின இளைஞரை தாக்கி அராஜகம் செய்த போலீஸ் எஸ்.ஐ..!

ஆந்திராவில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞரை காவல் உதவி ஆய்வாளர் சரமாரியாக அடித்ததுடன் சிறுநீரை குடி என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் சமீபகாலமாக மனிதர்கள் மீது மனிதர்களே நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறுநீரை குடிக்குமாறு வற்புறுத்துவது போன்ற சம்பவங்கள் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கி வருகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீதுதான் இந்த மனிதாபிமானமற்ற செயல் அதிகரித்து காணப்படுகிறது. தற்போது ஆந்திராவில் இதேபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

காவல் நிலையத்தில் பட்டியலின இளைஞர்:

ஆந்திராவில் அமைந்துள்ளது கிழக்கு கோதாவரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது சாகல்லு மண்டல் பகுதி. இந்த பகுதியில் உள்ள குங்குடுபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட பிரசாத். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 23. இந்த கிராமமானது கடியம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.


Crime:

இந்த நிலையில், இந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூலை மாதம் முதல் மாயமாகியுள்ளதாக வழக்கு ஒன்று கடியம் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்கூட்டி ஒன்றை வெங்கடபிரசாத்தான் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, வெங்கட பிரசாத்தை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுநீரை குடி:

அங்கு வெங்கடபிரசாத்தை காவல் நிலையத்தில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் சிவாஜி மிருகத்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், கடும் காயமடைந்த வெங்கட பிரசாத் தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு காவல் உதவி ஆய்வாளர் தண்ணீருக்கு பதிலாக சிறுநீரை குடிக்கச் சொல்லி சரமாரியாக திட்டி, தாக்கியுள்ளார்.


Crime:

இதுதொடர்பாக, வெங்கட பிரசாத் கூறியிருப்பதாவது, எனது கைகள், கால்கள் மற்றும் முகத்தில் கடுமையாக தாக்கினர். நான் சுயநினைவின்றி விழுந்துவிட்டேன். ஆனால், போலீசார் என்னை நடிக்கிறியா? என்று கேட்டனர். காவல் உதவி ஆய்வாளர் என்னை எழுப்பி மீண்டும் அடித்தார். நான் மிகவும் பலவீனம் ஆனதைத் தொடர்ந்து, என்னை ராஜமகேந்திரவரம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

 போலீஸ் விசாரணை:

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர் சரமாரியாக தாக்கப்பட்டதுடன், சிறுநீர் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராஜமகேந்திவரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரஜனி வெங்கட பிரசாத்தை நேரில் சென்று பார்த்து விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்கினார்.

வெங்கடபிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் சிவாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தற்போது பணியிடமாற்றம் செய்துள்ளனர். வட இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பழங்குடியின இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்கச் சொல்லிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சட்டத்தின்படி நடக்க வேண்டிய காவல்துறை உதவி ஆய்வாளரே விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட இளைஞரை அடித்து உதைத்ததுடன் சிறுநீரை குடி என்று கூறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Crime: போலீஸ் அதிகாரிகள் போல நடித்து நகை பறித்த கும்பல் கைது ; கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மேலும் படிக்க: Crime : காது குத்து விழாவுக்கு அழைத்து கொலை.. உறவினரை அடித்துக்கொன்ற நபர்.. மூவர் கைது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
உதயநிதி பெயரை உபயோகப்படுத்திய திமுக எம்.பிக்கள்! விளாசித்தள்ளிய ஜெயக்குமார்!
உதயநிதி பெயரை உபயோகப்படுத்திய திமுக எம்.பிக்கள்! விளாசித்தள்ளிய ஜெயக்குமார்!
Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Jobs: பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget