மேலும் அறிய

crime: குடும்ப தகராறில் மனைவி, மைத்துனரை கொடூரமாக கொலை செய்த இளைஞன்! அதிர்ச்சியில் தேனி மக்கள்!

தேனி மாவட்டம் தேவாரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் மைத்துனர் சரமாரியாக வெட்டி படுகொலை.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டி பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பிரதீப் (27) இவருக்கு சின்னமனூரை சேர்ந்த நிகிலா என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது. இருவரும் முத்தையன்செட்டிபட்டியில் வசித்து வந்த நிலையில், பிரதீப் அமமுக கட்சியில் கிளைச் செயலாளராக இருந்த நிலையில், எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என்று செய்து வந்துள்ளார். மேலும் பல்வேறு வழக்குகளிலும் சிக்கி வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தம்பதியினர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இதைத் தொடர்ந்து உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த வாரம் நிகிலாவை கணவருடன் சேர்த்து வைத்தனர்.


crime: குடும்ப தகராறில் மனைவி, மைத்துனரை கொடூரமாக கொலை செய்த இளைஞன்! அதிர்ச்சியில் தேனி மக்கள்!

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் இருவருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதில், பிரதீப் நிகிலாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சின்னமனூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், பிரதீப் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், இன்று இதுகுறித்து பஞ்சாயத்து பேசி முடித்துவிட்டு, தன்னுடைய பொருட்களை எடுத்துச் செல்வதற்காக நிகிலா அவரது அண்ணன் விவேக் (33) மற்றும் 10க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்துக் கொண்டு முத்தையன்செட்டிபட்டியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சிவக்குமார், பிரதீப் மற்றும் நிகிலாவின் குடும்பத்தினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் பிரதீப் கத்தியால் விவேக்கை சரமாரியாக குத்தியதில் விவேக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.


crime: குடும்ப தகராறில் மனைவி, மைத்துனரை கொடூரமாக கொலை செய்த இளைஞன்! அதிர்ச்சியில் தேனி மக்கள்!

இதனைப் பார்த்த நிகிலா கீழே மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த நிகிலாவை பிரதீப் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தார். இதனைப் பார்த்து அனைவரும் பதறி அடித்து ஓடினார்கள். இதனைத் தொடர்ந்து சிவக்குமார் மற்றும், அவரது மகன் பிரதீப் ஆகியோர் தலைமறைவாகி விட்டார்கள். இது தொடர்பாக போடி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிகிலா மற்றும் அவரது அண்ணன் விவேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய பிரதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர்.


crime: குடும்ப தகராறில் மனைவி, மைத்துனரை கொடூரமாக கொலை செய்த இளைஞன்! அதிர்ச்சியில் தேனி மக்கள்!

இரட்டை கொலை செய்த பிரதீப் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும் நிகிலா வழக்கறிஞருக்கு படித்து முடித்துள்ளார். அவரது அண்ணன் விவேக் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.குடும்பத்தகராறு காரணமாக இளைஞர் மனைவி மற்றும் மைத்துனரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Embed widget