மேலும் அறிய

கோவை : போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் ஏற்றும் கொடூரம்: இளைஞர்களே குறி ! 4 பேர் கைது!

மாத்திரைகளை கரைத்து ஊசியின் மூலம் உடம்பில் செலுத்தி போதையை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதும், கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் குறி வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. அண்மையில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்த, பிற மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் உள்ள பலர் போதைக்காக மாற்று வழிகளை தேடி வருகின்றனர். அதேபோல இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் குறி வைத்து புதிய புதிய வகைகளில் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வருவதும் நடந்துவருகிறது. இந்நிலையில் மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை ஏற்றும் முறையை சிலர் பின்பற்றி வருவது தெரியவந்துள்ளது.

இதனிடையே கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளை பயன்படுத்தி மாநகர பகுதிகளுக்குள் சமூக விரோதிகள் சட்ட விரோத செயல்களை ஈடுபடுவதை தடுக்க, காவல் துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாய்பாபா காலனி காவல் துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது கோவில் மேடு தவசி நகர்ப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சாலையோரம் ஒரு கார் நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து ரோந்து சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில் வலி நிவாரணத்திற்காக உட்கொள்ளக் கூடிய மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி அதிக அளவில் மாத்திரைகளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 4 பேரையும் காவல் துறையினர் சாய்பாபா காலனி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


கோவை : போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் ஏற்றும் கொடூரம்:  இளைஞர்களே குறி ! 4 பேர் கைது!

விசாரணையில் Tydol tapentadol 100mg மாத்திரைகளை கரைத்து ஊசியின் மூலம் உடம்பில் செலுத்தி போதையை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதும், கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் குறி வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஜானகி ராமன், டிவிஎஸ் நகரை சேர்ந்த பார்த்திபன், இடையர்பாளையத்தை சேர்ந்த கபிலேஷ், குனியமுத்தூரை சேர்ந்த முகமது அப்சல் ஆகிய 4 பேரையும் சாய்பாபா காலணி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 650 மாத்திரைகள், 11,500 ரூபாய் ரொக்கம் மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு பயன்படுத்திய காரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது போன்ற மாத்திரைகளை உட்கொள்வதும், ஊசி மூலம் உடலில் ஏற்றுவதும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget