மேலும் அறிய

கோவை : போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் ஏற்றும் கொடூரம்: இளைஞர்களே குறி ! 4 பேர் கைது!

மாத்திரைகளை கரைத்து ஊசியின் மூலம் உடம்பில் செலுத்தி போதையை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதும், கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் குறி வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. அண்மையில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்த, பிற மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் உள்ள பலர் போதைக்காக மாற்று வழிகளை தேடி வருகின்றனர். அதேபோல இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் குறி வைத்து புதிய புதிய வகைகளில் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வருவதும் நடந்துவருகிறது. இந்நிலையில் மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை ஏற்றும் முறையை சிலர் பின்பற்றி வருவது தெரியவந்துள்ளது.

இதனிடையே கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளை பயன்படுத்தி மாநகர பகுதிகளுக்குள் சமூக விரோதிகள் சட்ட விரோத செயல்களை ஈடுபடுவதை தடுக்க, காவல் துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சாய்பாபா காலனி காவல் துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது கோவில் மேடு தவசி நகர்ப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சாலையோரம் ஒரு கார் நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து ரோந்து சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில் வலி நிவாரணத்திற்காக உட்கொள்ளக் கூடிய மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி அதிக அளவில் மாத்திரைகளை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 4 பேரையும் காவல் துறையினர் சாய்பாபா காலனி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


கோவை : போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் ஏற்றும் கொடூரம்: இளைஞர்களே குறி ! 4 பேர் கைது!

விசாரணையில் Tydol tapentadol 100mg மாத்திரைகளை கரைத்து ஊசியின் மூலம் உடம்பில் செலுத்தி போதையை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதும், கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் குறி வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஜானகி ராமன், டிவிஎஸ் நகரை சேர்ந்த பார்த்திபன், இடையர்பாளையத்தை சேர்ந்த கபிலேஷ், குனியமுத்தூரை சேர்ந்த முகமது அப்சல் ஆகிய 4 பேரையும் சாய்பாபா காலணி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 650 மாத்திரைகள், 11,500 ரூபாய் ரொக்கம் மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு பயன்படுத்திய காரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது போன்ற மாத்திரைகளை உட்கொள்வதும், ஊசி மூலம் உடலில் ஏற்றுவதும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget