மேலும் அறிய

Crime: பொண்ணு மேல கைவச்சா விட்ருவோமா? 3 மாநிலங்கள், 700 சிசிடிவி கேமராக்கள் - இளைஞருக்கு நேர்ந்த கதி

Bengaluru Crime: பெங்களூருவில் இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Bengaluru Crime: பாலியல் புகாரில் சிக்கிய இளைஞரை 700 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றம் என்ன?

கடந்த வாரம் பெங்களூருவில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை தேடும் மாரத்தான் பணிகள் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளன. 700 சிசிடிவிகளில் இருந்து காட்சிகளை ஸ்கேன் செய்து, கேரளாவின் ஒரு தொலைதூர கிராமத்தில் பதுங்கியிருந்த குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் உள்ள BTM லேஅவுட்டில் உள்ள ஒரு குறுகிய சாலையில் நடந்து சென்ற இரண்டு இளம்பெண்களை ஒரு நபர் பின் தொடர்ந்தார். அவரை தவிர்த்துக்கொண்டு பெண்கள் வேகமாக அங்கிருந்து செல்ல முயன்றனர். அப்போதும், ஒரு பெண்ணை பிடித்து இழுத்து தகாத முறையில் நடந்துகொண்ட இளைஞரை, மற்றொரு பெண் தடுக்க முயன்றார். தொடர்ந்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மூன்று மாநிலங்களில் தேடுதல் வேட்டை

வைரலான வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடும் பணியை முடுக்கிவிட்டனர். ஒருவார கால தேடுதல் பணிக்கு பிறகு போலீசார் குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ், 26 வயதுடையவர், பெங்களூருவில் உள்ள ஒரு ஜாகுவார் ஷோரூமில் ஓட்டுநராக பணிபுரிகிறார். தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டபோது அவர் பெங்களூருவிலிருந்து தமிழ்நாட்டின் ஓசூருக்கு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் அவர் சேலத்திற்கும் அங்கிருந்து கோழிக்கோடுக்கும் தப்பிச் சென்றார். கேரளாவின் ஒரு தொலைதூர கிராமத்தில் போலீசார் அவரைப் பிடிக்க முடிந்தது, கிட்டத்தட்ட ஒரு வாரம் நீடித்த வேட்டை மூன்று மாநிலங்களை உள்ளடக்கியது.

இதையும் படியுங்கள்: Bengaluru: வாழ தகுதியற்ற இடமா பெங்களூரு? நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - வீடியோ வைரல்

700 சிசிடிவி கேமராக்கள்

சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சியில் இருந்த நபர், அடுத்தடுத்து எங்கெங்கு நகர்ந்தார் என்பதை தொடர்ந்து அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்து போலீசார் குற்றம்சாட்டப்பட்ட நபரை பின் தொடர்ந்துள்ளனர். அந்த வகையில் 700 சிசிடிவி கேமராக்காளில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், அந்த நபர் பெங்களூருவிலிருந்து தமிழ்நாடு, அங்கிருந்து கேராளாவிற்கு தப்பிச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது.

வழக்கு விவரம்:

தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது நண்பரையும் அவர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் போலீசாரிடம் தனியுரிமை கேட்டு விசாரணையில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண போலீசார் முயன்றபோது, ​​சிசிடிவி காட்சிகளின் மோசமான தரம் ஒரு சவாலாக அமைந்தது. இருப்பினும் தொழில்நுர்பத்தின் உதவி மற்றும் நாட்டிலேயே அதிகம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நகரங்களில் பெங்களூருவும் ஒன்று என்பதால், குற்றம்சாட்டப்பட்ட நபர் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget