மேலும் அறிய

கடலூர் : வேப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி.. 3 பேர் மீது குண்டர் சட்டம்..

பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்க ஆந்திராவுக்கு கடத்த முயற்சிசெய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு 23 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
 
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ரேஷன் அரிசியை வேறு மாவட்டங்கள் மாநிலங்களுக்கு கடத்துவது தொடர் கதையாக இருந்து வந்தது, இந்த நிலையில் வேப்பூர் தாலுகா மாங்குளம் பகுதியில் கடந்த 26-ந்தேதி கடலூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் ஆய்வாளர் ரேகாமதி, சப்-ஆய்வாளர் கவியரசன் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
 
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழி மறித்து சோதனை செய்தனர். சோதனையில், அதில் 460 மூட்டைகளில் 23 ஆயிரம் கிலோ  (23 டன்) ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த மினி லாரியில் வந்த நபர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் மங்களூர் காலனியை சேர்ந்த முத்துகருப்பன் மகன் ரஞ்சித் (வயது 25) என்பவரும், சித்ரவேல் என்பவரின் மகன் வேல் முருகன் (30), வேலூர் மாவட்டம் அரியூர்குப்பம் பகுதியை சேர்ந்த உலகமூர்த்தி என்பவரின் மகன் புருஷோத்தமன் (32), கோவிந்தன் என்பவரின் மகன் பெருமாள் (36), மற்றும் சங்கராம்பாளையத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ராமச்சந்திரன் (51), மங்களூர் காலனியை சேர்ந்த ராமலிங்கம் (56) ஆகிய 6 பேர் என்று தெரிந்தது.
 

கடலூர் : வேப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி.. 3 பேர் மீது குண்டர் சட்டம்..
 
 
மேலும் காவல் துறையின் விசாரணையில் அவர்கள் விளாம்பாவூர், வேப்பூர் மற்றும் மங்களூர் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை அதிக விலைக்கு விற்க ஆந்திராவுக்கு கடத்த முயற்சி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரஞ்சித், வேல்முருகன், மற்றும் லாரி உரிமையாளரான ராமச்சந்திரன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சென்னை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
 

கடலூர் : வேப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி.. 3 பேர் மீது குண்டர் சட்டம்..
 
 
அதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கடலூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் துறையினர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget