மேலும் அறிய

TATA: ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் டாடா குழுமம்.. புதியதாக 100 கிளைகளை திறக்க முடிவு

இந்தியாவின் பெருநிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம், ஆப்பிளுடன் இணைந்து புதியதாக 100 விற்பனை நிலையங்களை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சால்ட் முதல் சாஃப்ட்வேர் வரை விற்பனை செய்யும் டாடா குழுமம், சீனாவில் இருந்து வெளியேறும் ஆப்பிள் நிறுவனத்தின் வணிகத்தை கைப்பற்ற முயலும் பல முக்கிய இந்திய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே டாடா குழுமத்திற்குச் சொந்தமான சில்லறை வர்த்தக நிறுவனமான இன்பினிட்டி ரீடெய்ல், க்ரோமா எனும் பெயரில் மின்சார சாதனங்களை விற்கும் தொடர் சங்கிலி கடைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

புதியதாக 100 கடைகளை திறக்க திட்டம்?

 இந்நிலையில்,  நாடு முழுவதும் மேலும் 100 சிறப்பு க்ரோமா கடைகளை திறந்து, அதில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்சார சாதனங்களை மட்டும் விற்பனை செய்ய டாடா குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வணிக வளாகங்கள், அதிக வணிகம் நடைபெறும் பகுதிகள் போன்ற இடங்களில், புதிய கடைகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பான அறிக்கையின்படி, டாடா குழுமம் ஓசூரில் உள்ள தனது எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஐபோன் உதிரிபாகங்களை உருவாக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை பெருக்க திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் உடனான வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பல்லாயிரக்கணக்கான புதிய ஊழியர்களை டாடா குழுமம் சேர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஓசூரில் உள்ள டாடா குழுமத்தின் ஆலையில் ஐபோன் கேஸ்களை உற்பத்தி செய்யும் பணியில் சுமார் 10,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர். 

ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்:

புதிய ஒப்பந்தத்தின் மூலம், இன்பினிட்டி ரீடெய்ல் ஆப்பிளின் உரிமையாளர் பங்குதாரராக மாறும் என கூறப்படுகிறது.  இந்த 100 சிறிய பிரத்யேக கடைகள் ஒவ்வொன்றும் 500-600 சதுர அடியில் இருக்கும் என்றும்,  ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளராக டாடா குழுமம் மாறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆப்பிள் பிரீமியம் மறுவிற்பனையாளர் கடைகளில் இருந்து,  க்ரோமா கடைகள் வேறுபட்டதாகவும் சிறியதாகவும் இருக்கும். இந்த சிறிய 100 பிரத்தியேக கடைகள் பெரும்பாலும் ஐபாட், ஐபோன் மற்றும் கைக்கடிகாரங்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்த உள்ளது. அதன் பெரிய கடைகள் மேக்புக்குகள் மற்றும் முழு ஆப்பிள் மாடல்களையும் விற்பனை செய்யும் எனக் கூறப்படுகிறது.

டாடா குழுமத்தின் அடுத்த திட்டம்:

இந்தியாவில் தற்போது சுமார் 160 ஆப்பிள் பிரீமியம் மறுவிற்பனையாளர் கடைகள் உள்ள சூழலில், ஆப்பிளின் முதல் நிறுவனத்திற்கு சொந்தமான பிளாஃக்ஷிப் ஸ்டோர் விரைவில் மும்பையில் திறக்கப்பட உள்ள நேரத்தில்,  ஆப்பிள் மற்றும் டாடா குழுமம் இடையேயான ஒப்பந்தம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நடவடிக்கையின் மூலம், புதிய கூட்டணிகள் மற்றும் வணிகங்களில் ஈடுபடுவதற்கான முயற்சியில் டாடா குழுமம்  புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், ஏர் இந்தியாவை விஸ்தாராவுடன் இணைப்பதாக அறிவித்த பிறகு, 500 புதிய விமானங்களை வாங்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை உலக வணிக வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்யும்  வகையில்,  செமி-கண்டக்டர் சில்லுகள் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கவும் டாடா குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . பெரும் வணிபத்தை தொடர்ந்து சில்லறை விற்பனையிலும், டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்துடன் டாடா குழுமம் செய்ய உள்ளதாக கூறப்படும், இந்த புதிய ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget