மேலும் அறிய

TATA: ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் டாடா குழுமம்.. புதியதாக 100 கிளைகளை திறக்க முடிவு

இந்தியாவின் பெருநிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம், ஆப்பிளுடன் இணைந்து புதியதாக 100 விற்பனை நிலையங்களை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சால்ட் முதல் சாஃப்ட்வேர் வரை விற்பனை செய்யும் டாடா குழுமம், சீனாவில் இருந்து வெளியேறும் ஆப்பிள் நிறுவனத்தின் வணிகத்தை கைப்பற்ற முயலும் பல முக்கிய இந்திய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே டாடா குழுமத்திற்குச் சொந்தமான சில்லறை வர்த்தக நிறுவனமான இன்பினிட்டி ரீடெய்ல், க்ரோமா எனும் பெயரில் மின்சார சாதனங்களை விற்கும் தொடர் சங்கிலி கடைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

புதியதாக 100 கடைகளை திறக்க திட்டம்?

 இந்நிலையில்,  நாடு முழுவதும் மேலும் 100 சிறப்பு க்ரோமா கடைகளை திறந்து, அதில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்சார சாதனங்களை மட்டும் விற்பனை செய்ய டாடா குழுமம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வணிக வளாகங்கள், அதிக வணிகம் நடைபெறும் பகுதிகள் போன்ற இடங்களில், புதிய கடைகள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பான அறிக்கையின்படி, டாடா குழுமம் ஓசூரில் உள்ள தனது எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஐபோன் உதிரிபாகங்களை உருவாக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை பெருக்க திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் உடனான வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பல்லாயிரக்கணக்கான புதிய ஊழியர்களை டாடா குழுமம் சேர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஓசூரில் உள்ள டாடா குழுமத்தின் ஆலையில் ஐபோன் கேஸ்களை உற்பத்தி செய்யும் பணியில் சுமார் 10,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் ஆவர். 

ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்:

புதிய ஒப்பந்தத்தின் மூலம், இன்பினிட்டி ரீடெய்ல் ஆப்பிளின் உரிமையாளர் பங்குதாரராக மாறும் என கூறப்படுகிறது.  இந்த 100 சிறிய பிரத்யேக கடைகள் ஒவ்வொன்றும் 500-600 சதுர அடியில் இருக்கும் என்றும்,  ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனையாளராக டாடா குழுமம் மாறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆப்பிள் பிரீமியம் மறுவிற்பனையாளர் கடைகளில் இருந்து,  க்ரோமா கடைகள் வேறுபட்டதாகவும் சிறியதாகவும் இருக்கும். இந்த சிறிய 100 பிரத்தியேக கடைகள் பெரும்பாலும் ஐபாட், ஐபோன் மற்றும் கைக்கடிகாரங்களை விற்பனை செய்வதில் கவனம் செலுத்த உள்ளது. அதன் பெரிய கடைகள் மேக்புக்குகள் மற்றும் முழு ஆப்பிள் மாடல்களையும் விற்பனை செய்யும் எனக் கூறப்படுகிறது.

டாடா குழுமத்தின் அடுத்த திட்டம்:

இந்தியாவில் தற்போது சுமார் 160 ஆப்பிள் பிரீமியம் மறுவிற்பனையாளர் கடைகள் உள்ள சூழலில், ஆப்பிளின் முதல் நிறுவனத்திற்கு சொந்தமான பிளாஃக்ஷிப் ஸ்டோர் விரைவில் மும்பையில் திறக்கப்பட உள்ள நேரத்தில்,  ஆப்பிள் மற்றும் டாடா குழுமம் இடையேயான ஒப்பந்தம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நடவடிக்கையின் மூலம், புதிய கூட்டணிகள் மற்றும் வணிகங்களில் ஈடுபடுவதற்கான முயற்சியில் டாடா குழுமம்  புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், ஏர் இந்தியாவை விஸ்தாராவுடன் இணைப்பதாக அறிவித்த பிறகு, 500 புதிய விமானங்களை வாங்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை உலக வணிக வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்யும்  வகையில்,  செமி-கண்டக்டர் சில்லுகள் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கவும் டாடா குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . பெரும் வணிபத்தை தொடர்ந்து சில்லறை விற்பனையிலும், டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்துடன் டாடா குழுமம் செய்ய உள்ளதாக கூறப்படும், இந்த புதிய ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget