Share Market: வார இறுதியிலும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை...! முதலீட்டாளர்கள் கவலை..!
இன்றைய வார இறுதி நாளில் இந்திய பங்கு சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. இதனால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 141.87 புள்ளிகள் குறைந்து 59,463.93 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 45.45 புள்ளிகள் குறைந்து 17,465.80 புள்ளிகளாகவும் வர்த்தக முடிவில் காணப்பட்டது.
Sensex declines 141.87 points to end at 59,463.93; Nifty dips 45.45 points to 17,465.80
— Press Trust of India (@PTI_News) February 24, 2023
இந்த வாரத்தில் இந்திய பங்கு சந்தை தொடர்ந்து சரிவுடன் காணப்பட்டது, முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அதானி எண்டர்பிரைசர்ஸ், பிபிசிஎல், பிரிட்டாணியா, சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.





















