மேலும் அறிய

தங்க நகைகளை அடகு வைக்கப்போறீங்களா.! ஆர்பிஐ உத்தரவால் வங்கிகள் பல்டி- இனி கம்மியான பணம் தான் கிடைக்கும்

Gold Jewelery Loans: தங்கத்தின் விலையானது வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், வங்களில் அடகு வைக்கப்படும் தங்க நகைகளுக்கு அதிகளவு கடன் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆர்பிஐ உத்தரவால் வங்கிகள் திடீர் பல்டி அடித்துள்ளது.

வரலாறு காணாத தங்கம் விலை உயர்வு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கத்தை வாங்குவது கனவாகவே மாறிவிட்டது. நகைக்கடைகளில் வெளியே நின்று தங்க நகைகளை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்று காலையிலேயே சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்சி கொடுத்துள்ளது. தற்போது 8 கிராம் கொண்ட தங்கத்தின் விலை  1,02,160 ரூபாயாக எகிறியுள்ளது.

வங்கியில் தங்க நகைகள் அடகு

இன்னும் ஒரு சில மாதங்களில் தங்கத்தின் விலை 2 லட்சம் ரூபாயை தொடும் என பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில் தங்கத்தின் விலை அதிகரிப்பால் ஒரு பக்கம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், தங்கத்தை வங்கிகளில் அடகு வைத்தால் அதிக பணம் கிடைப்பதால் மற்றொரு பக்கம் குஷியாக இருந்தனர். அந்த வகையில் தங்க நகைகளை அடகு வைக்கும் போது ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்றால் 70 ஆயிரம் முதல் 72 ஆயிரம் ரூபாய் வரை கடன் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அதிகளவு தங்க நகைகளை அடகு வைத்து புதிய நகைகளை வாங்குவது, வீடு, கார் வாங்குவது அல்லது மற்ற செலவுகளுக்கு பயன்படுத்துவது என இருந்து வந்தனர்.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு 1.01 லட்சம் கோடியாக இருந்த தங்க நகை கடன், கடந்த அக்டோபர் 2025ஆம் ஆண்டில் 3.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இரண்டு வருட காலத்தில் தங்க நகைகள் அடகு வைத்து வாங்கப்படும் கடன்களின் அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் தான் வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு புதிய அறிவுரையை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. அந்த வகையில் தங்க நகைகளுக்கான கடன்களை வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் உள்ள நிலையில் தங்கத்திற்கு அதிக கடன்களை கொடுத்து சிக்கி கொள்ள வேண்டாம் எனவும் ரிஸ்க் மேனேஜ்மென்டை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்  கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி நகை கடனுக்கு கம்மியான பணம் கிடைக்கும்

தங்கத்தின் விலை வரும் நாட்களில் கணிசமான அளவு குறையும் பட்சத்தில் நகைக்கடன் கொடுத்த வங்கிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். இதன் காரணமாக நகைகளை மீட்க முடியாத நிலையில் ஏலம் விடும்போது வங்கிகளுக்கு குறைந்த அளவே பணம் கிடைக்கும். எனவே தான் வங்கிகளை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் ஆர்பிஐ அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக தற்போது தங்க நகை கடன்களுக்கு 70 முதல் 72% அளவிற்கு கடன் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை 60 சதவிகிதமாக வங்கிகள் கடன் தொகையை குறைத்துள்ளது. இதன் காரணமாக நகைகளை அடகுவைத்து அதிக பணத்தை பெறலாம் என எதிர்பார்த்து செல்லும் மக்களுக்கு ஒரு சவரன் தங்க நகைக்கு 55 ஆயிரம் முதல் 60ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
50 வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டின் கடனை குறைக்க முடியாது.. உண்மையை சொன்ன நிதித்துறை செயலாளர்.!!
50 வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டின் கடனை குறைக்க முடியாது.. உண்மையை சொன்ன நிதித்துறை செயலாளர்.!!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget