மேலும் அறிய

RBI Monetary Policy: உயர்கிறதா வங்கிக்கடன், வாகனக் கடன் வட்டி விகிதம்: நாளை முதல் ஆர்பிஐயின் நாணயக் கொள்கை கூட்டம்...! முடிவுகள் என்ன?

நாளை முதல் புதன் கிழமை வரை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம், பட்ஜெட்டிற்கு பிறகான முதல் கூட்டம்,  2022-23 ஆம் நிதி ஆண்டின் கடைசி கூட்டம் மற்றும் அதானி பங்குகள் சரிவு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு பின் கூடும் கூட்டம் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

நாணய கொள்கை கூட்டம்:

இந்திய ரிசர்வ் வங்கியானது, இந்தியா நாட்டிலுள்ள வங்கிகளை கட்டுப்படுத்தும் அமைப்பாகவும், நாட்டிலுள்ள பண புழக்கத்தை கட்டுப்படுத்தும் அமைப்பாகவும் உள்ளது. மேலும், நாட்டில் விலைவாசி உயர்ந்தால், அதை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்பாகவும் விளங்குகிறது.

ஆகையால், நாட்டின் பணவீக்கத்தை அடிக்கடி ஆராய்ந்து கட்டுப்படுத்தும் நோக்கில் 2 மாதங்களுக்கு ஒரு முறை நாணய கொள்கை கூட்டம் நடைபெறுவது வழக்கம், அல்லது ஆண்டுக்கு 4 முறையாவது கூட வேண்டும் என்பது விதியாகும். இந்நிலையில் பணவீக்கம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க நாளை முதல் 3 நாட்கள் ( பிப்.6 முதல் பிப். 8 ) இக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நாணய கொள்கை கூட்டமானது, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலையில் கூட்டம் நடைபெறும். இறுதியில் உறுப்பினர்களின் பெரும்பான்மைக்கு ஏற்ப கூட்டத்தின் முடிவுகள் எடுக்கப்பட்டு பிப். 8ஆம் தேதி அறிவிக்கப்படும்,

பணவீக்கம் :

உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது. உலகின் முன்னணி நிறுவனங்களும், தங்களது பணியாட்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். விலைவாசி உயர்வு காரணமாக, கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கியானது, வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இந்தியாவும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கும் அளவாக 6  ( 4 +- 2 ) ஐ நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்தியாவின் பணவீக்க விகிதமானது பல மாதங்கள் பணவீக்க அளவை தாண்டி காணப்பட்டன. ஆனால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 6 க்கு கீழ் குறைந்தது இந்தியாவுக்கு சற்று ஆறுதலை தந்தது.

வட்டி விகிதம்:

இந்நிலையில், நாளை தொடங்கும் கூட்டத்தில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 அடிப்படை புள்ளிகள்  உயர்த்த வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள், வங்கியில் வீட்டு கடன் , வாகன கடன் வாங்கியோருக்கு இ.எம்.ஐ செலுத்தும் தொகையானது அதிகரிக்க கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அதானி நிறுவனங்களின் பங்குகள் திடீர் வீழ்ச்சியால், அதானி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளிடம், ரிசர்வ் வங்கியானது விவரங்களை கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்தும் பேச வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அதானி குழும வீழ்ச்சி குறித்து, ஆளுநர் சக்திகாந்த தாஸ் , முதல் முறையாக வாய் திறப்பாரா என பலருக்கும் இக்கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Also Read: RBI Asks Banks: அதானி நிறுவனத்துக்கு வழங்கிய கடன் எவ்வளவு? வங்கிகளிடம் தகவல்களை கேட்கும் ரிசர்வ் வங்கி

Also Read: Budget 2023-2024: பட்ஜெட் 2023-இல், இந்தியா பிற நாடுகளுக்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு?..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
Embed widget