மேலும் அறிய

SIP Scheme: வருமானம் குறைஞ்சிடுச்சா..! SIP திட்டத்தின் தவணை தொகையை குறைப்பது எப்படி? - முழு விவரம் இதோ

SIP Scheme: எஸ்ஐபி திட்டத்தில் மாதந்திர தவணை தொகையை குறைக்க நினைத்தால், பயனர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

SIP Scheme: எஸ்ஐபி திட்டத்தில் உள்ள சில சலுகைகளை அறியாமல் தவணையை குறைப்பதற்கு பதிலாக சில பயணர்கள் பெரும்பாலும் நிறுத்திவிடுகிறார்கள்.

SIP சேமிப்பு திட்டம்:

ஒவ்வொரு தனி நபர் நிதி ஆலோசனைகளும் உங்களுக்கு ஒரே விஷயத்தையே மீண்டும் மீண்டும் நினைவூட்டுகின்றன. தொழில் வாழ்க்கையில் முன்னேறி, உங்கள் சம்பளம் உயரும்போது, ​​உங்கள் சேமிப்பு முதலீட்டுத் திட்டத்தையும் (SIP) அதிகரியுங்கள் என்பதே ஆகும். அந்த அறிவுரை சரியானதுதான். ஆனால், அதன் தொடர்ச்சியான ஒரு வெளிப்படையான கேள்வியை யாரும் கேட்பதில்லை. உங்கள் வருமானம் குறையும்போது என்ன நடக்கும்? ஒரு தொழில் இடைவெளி, துறை மாற்றம், ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு மாறிய பிறகு ஏற்படும் சம்பளக் குறைப்பு என வருமானம் குறையவும் வாய்ப்புள்ளது.  பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு, அந்தப் பிரச்சனைக்கான தீர்வு மிக மோசமான ஒன்றாகவே அமைகிறது. நிதி நிலைமை மோசமாகும் போது, ​​ஏற்கனவே இருக்கும் ஒரு எளிய வழிமுறையை அறியாத காரணத்தால், அவர்கள் தங்கள் SIP திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்து, பல ஆண்டுகால கூட்டு வட்டி வளர்ச்சியை இழக்கிறார்கள்.

SIP தவணையை குறைக்கும் வசதி..

பெரும்பாலான முதலீட்டு செயலிகள், படிப்படியாக அதிகரிக்கும் SIP-ஐ ஒரு இயல்பான ஆப்ஷனாக வழங்குகின்றன. ஆனால் அவற்றில் "படிப்படியாக தவணையை குறைக்கும் SIP" ஆப்ஷனை உங்களால் ஒருபோதும் காண முடியாது. அதற்குப் பதிலாக, உங்கள் SIP தொகையைக் குறைப்பதற்கான மூன்று வெவ்வேறு வழிகளையே உங்களால் அணுக முடியும்.

முதலில், தவணையை இடைநிறுத்தும் வசதி. பெரும்பாலான பெரிய நிதி நிறுவனங்கள், உங்கள் SIP-ஐ ரத்து செய்யாமல், ஒன்று முதல் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தம் செய்யும் ஆப்ஷனை வழங்குகின்றன. இரண்டாவது விருப்பம், SIP தொகையை நேரடியாகக் குறைப்பது. இந்த அம்சத்தை தற்போது சில தளங்கள் செயலி மூலமே அணுகும் வசதியை வழங்குகின்றன. மூன்றாவது மற்றும் மிகவும் பொதுவான விருப்பம், தற்போதுள்ள SIP-ஐ ரத்து செய்துவிட்டு, உங்கள் தற்போதைய முதலீட்டுத் தொகை அப்படியே பயன்படுத்தப்பட்டு, குறைந்த தவணையில் தொகையில் ஒரு புதிய SIP-ஐத் தொடங்குவதாகும். ஒவ்வொரு வழியும் பலனளிக்கும், ஆனால் விதிகள் AMC மற்றும் தளத்தைப் பொறுத்து வேறுபடுகின்றன.

தவணைகளை தவறவிடுவதன் பாதிப்பு:

SIP-களுக்கான கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அதை நிறுத்திவிடும் பெரும்பாலான முதலீட்டாளர்கள், மூன்று தவணைகளைத் தவறவிட்டால் செலுத்த வேண்டிய விதி குறித்து அறிந்திருப்பதில்லை. இந்தியாவில் உள்ள ஏறக்குறைய அனைத்து AMC-களும், நீங்கள் தொடர்ச்சியாக மூன்று தவணைகளைத் தவறவிட்டால், SIP-ஐத் தானாகவே ரத்து செய்துவிடுகின்றன. ஒருமுறை ரத்து செய்யப்பட்டால், SIP-ஐ மீண்டும் தொடங்குவதற்குப் புதிய பதிவும் புதிய ஆணையும் தேவைப்படும். இது கூட்டு வட்டியின் தொடர்ச்சியை திடீரென முறித்துவிடுகிறது. பதிவு செய்யும் நேரத்தில் இந்த விதி பெரும்பாலும் தெளிவாக பயனர்களுக்கு எடுத்துரைக்கப்படுவதில்லை.

இதையும் படியுங்கள்: Rajinikanth: ”CM விஜயை இரண்டு வருடங்கள் தொந்தரவு செய்யாமல் வேலை செய்ய விடுங்கள்” - ரஜினி கோரிக்கை

பயனர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஒரு நெருக்கடியின் போது அல்ல, அதற்கு முன்பே பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. இன்றே உங்கள் AMC அல்லது முதலீட்டுத் தளத்தை அணுகி, உங்கள் SIP திட்டத்தில் நேரடித் தொகைத் திருத்தம், முறையான இடைநிறுத்தம் அல்லது ரத்துசெய்து மீண்டும் தொடங்குதல் மட்டுமே அனுமதிக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும். இதற்குத் தேவைப்படும் கால அவகாசத்தை கவனத்தில் கொள்ளவும், ஏனெனில் பெரும்பாலான AMC-களுக்கு அடுத்த தவணை தேதிக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்பு இந்தக் கோரிக்கை தேவைப்படுகிறது. எளிதான மாற்றங்களை ஆதரிக்காத ஒரு தளத்தில் நீங்கள் இருந்தால், அவ்வாறு ஆதரிக்கும் ஒரு தளத்தின் மூலம் உங்கள் SIP-ஐ மீண்டும் தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
Embed widget