மேலும் அறிய

சென்னை  ஃபோர்டு ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை அறிவிப்பு! ஆனால் ஊழியர்களின் கோரிக்கை?

சென்னை ஃபோர்டு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு இறுதி தீர்வு தொகுப்பை அறிவித்துள்ளது.

சென்னை அடுத்த மறைமலை நகரில் ஃபோர்டு தொழிற்சாலை  சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இந்த ஆலைகளில் வருடத்திற்கு 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளாக 80 ஆயிரம் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன . இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்ததாக கூறப்பட்டது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால், தொழிற்சாலை விரைவில் மூடப்படும் என கடந்த ஆண்டு நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் ஜூலை சென்னை  தொழிற்சாலையில் முழுமையாக உற்பத்தியை நிறுத்தியது. 

சென்னை  ஃபோர்டு ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை அறிவிப்பு! ஆனால் ஊழியர்களின் கோரிக்கை?
 
ஊழியர்களின் போராட்டம்
 
 
ஃபோர்டு தொழிற்சாலை ஊழியர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும். தொடர்ந்து தொழிற்சாலை இயங்க வேண்டும், அல்லது குஜராத் தொழிற்சாலியை எப்படி வேறு நிறுவனத்திற்கு தொழிற்சாலை ஊழியர்களுடன் விற்பனை செய்ய உள்ளதோ, அதேபோல சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை ஊழியர்களுடன் விற்பனை செய்ய வேண்டும்  எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசு, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தையின் அடிப்படையில், போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
 
 
215 நாள்..
 
 
தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இழப்பீடு தொகை நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்டால், வருடத்திற்கு 215 நாட்கள் என கணக்கு செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், குறைந்தபட்சம் 185 நாட்கள் ஆவது, கொடுத்தே தீர வேண்டும் என  தொழிற்சங்கத்தினர் கூறிவந்தனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக சுமார் 68 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை  ஃபோர்டு ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை அறிவிப்பு! ஆனால் ஊழியர்களின் கோரிக்கை?
 
130 நாட்கள் மட்டுமே
 
இறுதியாக இன்று சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலை சார்பில், 130 நாட்கள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. VSS SCHEME என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் இதற்கு, விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஊழியர் ஒருவருக்கு 33 லட்ச ரூபாயிலிருந்து , அதிகபட்சமாக 85 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. 

சென்னை  ஃபோர்டு ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் தொகை அறிவிப்பு! ஆனால் ஊழியர்களின் கோரிக்கை?
 
மறுக்கும் ஊழியர்கள்
 
இது தொடர்பாக ஏபிபி நாடு சார்பில் ஊழியர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, பெரும்பாலான ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் தேவைப்படவில்லை, தங்களுடைய வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் நிர்வாகமும் நாங்கள் எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவு செட்டில்மெண்ட் கொடுத்துவிட்டு,  இதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என திணிக்கின்றனர். மேலும் நிர்வாகம் தெரிவிக்கும், தொகையைப் பார்த்தால் பெரிய அளவாக தெரியும். ஆனால் பெரும்பாலான ஊழியர்களுக்கு குறைந்தபட்ச தொகையை கொடுக்கப்படும். மேலும் கொடுக்கப்படும் தொகையிலிருந்து 30 சதவீதம் வரை வரி பிடித்தம் செய்யப்படும், எனவே இந்த தொகை நிச்சயம் நியாயமான தொகை அல்ல, என தெரிவித்தனர்

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (21.06.2026): கேரளா சம்ருதி லாட்டரியில் இன்று 3 மணிக்கு குலுக்கல் முடிவுகள் வெளியீடு!
LIVE | Kerala Lottery Result Today (21.06.2026): கேரளா சம்ருதி லாட்டரியில் இன்று 3 மணிக்கு குலுக்கல் முடிவுகள் வெளியீடு!
Gold and Silver Rate Today: காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
காலையிலேயே ஷாக்.! நேற்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று விலை உயர்வு; தற்போதைய விலை என்ன.?
Strait of Hormuz India: ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
LIVE | Kerala Lottery Result Today (19.06.2026): கேரளா சுவர்ண கேரள லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு- உடனே காணலாம்!
LIVE | Kerala Lottery Result Today (19.06.2026): கேரளா சுவர்ண கேரள லாட்டரி முடிவுகள் இன்று வெளியீடு- உடனே காணலாம்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget