மேலும் அறிய

குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 நிதியுதவி அறிவிப்பு இடம்பெறவில்லை - ராமதாஸ் வருத்தம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலித்தல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது.

கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்று தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும் கூட, தமிழ்நாட்டை  முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்காக அறிவிக்கப்பட்டுள்ள சில திட்டங்கள் மிகவும் வரவேற்கத்தக்கவையாகும். பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதும், அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 5 ஆண்டுகளில் ரூ.7,000 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கக்கூடியவை ஆகும். தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், இது மிகவும் சரியான நடவடிக்கையாகும்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இளைஞர்களை தயார் செய்ய ரூ.25 கோடியில் சிறப்புத் திட்டம், வட சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் விளையாட்டு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உயர்கல்வித் துறை சார்பில் அறிவுசார் நகரம் அமைக்கப்படும்; அதில் உலகப்புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகள் அமைக்கப்படும்; அரசு கல்லூரிகள் ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடியில் மேம்படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

பெண்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படிப்பதை உறுதி செய்யும் வகையில், கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவி வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதே திட்டம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும்  இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மூவலூர் இராமாமிர்தம்மாள் திருமண உதவி திட்டத்தை ரத்து செய்தது ஏற்கத்தக்கதல்ல. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி மற்றும் தங்கம் வழங்கும் அந்தத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

அதேநேரத்தில், சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.18,933 கோடியிலிருந்து ரூ.17,901 கோடியாகவும்,  பொது வினியோகத்திட்டத்திற்கான மானியம் ரூ.8437 கோடியிலிருந்து ரூ.7500 கோடியாகவும் குறைக்கப் பட்டிருப்பது மக்களை கடுமையாக பாதிக்கும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு  2021-22 ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.10,025 கோடி செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆண்டிற்கு மாநில அரசின் பங்காக ரூ.2,800 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு  இருப்பது போதுமானதல்ல. இத்திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலித்தல், தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதற்காக சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது வருத்தம் அளிக்கிறது. அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட வேலைவாய்ப்பு பெருக்கத்திற்காக எந்தத் திட்டமும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் தருகிறது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை நடப்பு பத்தாண்டின் நிறைவில் ரூ. 75 லட்சம் கோடியாக உயர்த்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதற்கான செயல்திட்டம் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் தென்படாததும் கவலையளிக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.36,375 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அது ரூ.52781 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.33% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், 4.61% ஆக அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.49% என கணிக்கப்பட்டிருந்த நிலையில், 3.80% ஆக அதிகரித்திருக்கிறது. இதை பொருளாதார மீட்சிக்கான அறிகுறியாக கருதமுடியாது.

தமிழக அரசு 2022-23 ஆம் ஆண்டில் ரூ.81,371 கோடி மட்டுமே கடன் வாங்க வேண்டியிருக்கும் என  கணிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது நிகரக் கடன் மதிப்பு ரூ.90,116 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி 2023-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53,348 கோடியாக அதிகரிக்கும் என்பதும் கவலையளிக்கிறது. தமிழக பொருளாதார  வளர்ச்சியை விரைவுபடுத்த சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget