மேலும் அறிய

Budget 2024: இந்த முறையாவது கருணை காட்டுவார்களா? வருமான வரி செலுத்துவோரின் ஏக்கமும் கோபமும்!

மத்திய அரசு பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டிலாவது வருமான வரி குறைக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் வரும்போதெல்லாம் வருமான வரி வரம்பு உயர்த்தப்படுமா? வரி குறையுமா? போன்ற எதிர்பார்ப்புகளுக்கு குறைவே இருக்காது. ஆனால், என்ன சாபமோ தெரியவில்லை. வருமான வரி செலுத்துவோருக்கு மட்டும் பெரிய அளவுக்கு அரசின் சலுகைகள் கிட்டுவதே இல்லை என்பதுதான் கண்கூடு.
நாட்டின் குடிமகன்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில், இந்த வரி, அந்த வரி என ஏதோ ஒரு பெயரில் வரி கட்டி வருகிறோம்.

வருமான வரி:

ஆனால், மற்றவர்கள் கட்டும் வரிகள் மட்டுமல்ல, தாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு சொல்லும் வகையில், அரசுக்கு வருமான வரி என்ற பெயரில் கூடுதலாக வரி கட்டுபவர்கள் யாரென்றால், அவர்கள்தான் மாத சம்பளதாரர்கள். ஒவ்வொருவரின் ஊதியத்திற்கு ஏற்ப, அவரவருக்கு வரி விதிக்கப்படுகிறது. 
தம்முடைய உழைப்பிற்கு அரசுக்கு வரி கட்டுகிறார்கள்.

இத்தனைக்கும் அவர்களுக்கு எந்தவித சலுகைகளையும்  அரசு கொடுப்பதில்லை. ஆனால், வரி மட்டும், தம்முடைய உழைப்பிற்கு, ஊதியதாரர்கள் செலுத்த வேண்டும் என்பதுதான் இந்த நாட்டின் விதி. அதிலும், ஊதியம் ஏற, ஏற, அவர்களின் வரி விகிதமும் ஏறிக் கொண்டே இருக்கும். தாம் கஷ்டப்பட்டு, மூளையை, உடல் உழைப்பை செலுத்தி செய்யும் பணிக்கு, வருமான வரி என்ற பெயரில் அரசுக்கு நிதியை கொடுக்கிறோம். 

மக்கள் நல்வாழ்வு திட்டங்கள்:

மத்திய அரசின் கடந்த ஆண்டு அறிக்கையின்படி, இந்திய மக்கள் தொகையான 140 கோடியில், சம்பாதிப்பவர்கள் எவ்வளவு பேர் என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால், மாத ஊதியதாரர்களில் 8 கோடியே 61 லட்சம் பேர் வருமான வரி படிவம் தாக்கல் செய்துள்ளனர். இந்த நேரடி வரியின் மூலம், மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 25 முதல் 27 சதவீதம் கிடைக்கிறது எனத் தெரிகிறது. கிட்டத்தட்ட மத்திய அரசின் நிதியில், கால் சதவீதம் வருமான வரி தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் நலத்திட்டங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில், வருமான வரி செலுத்தும் ஊதியதாரர்களுக்கு, ஏதேனும் அரசு சிறப்பு சலுகைகளைத் தருகிறதா என்றால் இல்லை. ஆனால், மேற்கத்திய நாடுகளில் பொதுவாக, அரசுக்கு வரி செலுத்துவோருக்கு, டிக்கெட் பதிவில் முன்னுரிமை, மருத்துவ சேவையில் முன்னுரிமை என பல்வேறு சலுகைகள் நாடுகளுக்கு ஏற்ப தரப்படுகிறது. ஆனால், இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு என்ன சலுகைகள் என்றால், மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் என்ற பெயரில் தேவைப்படுவோருக்கு பொதுவாக வழங்கப்படுகிறது.

ஏதேனும் அதிசயம் நடக்குமா?

ஆனால், வருமான வரிச் செலுத்தும் மாத ஊதியதாரர்களுக்கு, வரி செலுத்துகிறோம் என்பதாலேயே, பல்வேறு சலுகைகள், குறிப்பாக, வெள்ள நிவாரணம் உள்ளிட்ட அரசின் பல நிதி உதவிகள் தரப்படுவதில்லை என்பதுதான் கசப்பான யதார்த்தம். இதுமட்டுமல்ல, பல ஆண்டுகளாக, வருமான வரிச் செலுத்துவோருக்கு, நிதி இல்லாத பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்வோர் சொல்லி வருகின்றனர். குறிப்பாக, ரயில் டிக்கெட், விமான டிக்கெட் பதிவுகளின் போது முன்னுரிமை கொடுக்கப்படும் போன்ற பல சலுகைகள் குறித்தெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவித பலனும் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

ஓர் உதாரணத்திற்கு ஆண்டுக்கு 15 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள், அவர்கள் வருவாயில், 30 சதவீதத்தை அரசுக்கு வருமான வரித் தருகிறோம் எந்தவித பலனும் இல்லாமல் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அரசு என்ன தருகிறது என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருக்கிறது. எனவே, இந்த ஆண்டாவது மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு சின்னச் சின்ன சலுகைகளாவது தரப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது அல்லது வருமான வரியை குறைத்தாவது அறிவிப்பு வரும் என்ற ஆசையும் இருக்கிறது. எது நடக்கும் என்பது மத்திய நிதி அமைச்சருக்கும் பிரதமருக்கும் மட்டுமே தெரியும். மாத ஊதியதாரர்களின் எதிர்பார்ப்பு கைக்கூடுமா? வழக்கம்போல் காத்திருப்போம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
கணவனும் வேண்டாம்; வேலையும் வேண்டாம்! 45 கிலோ எடையை குறைத்த அமெரிக்க பெண்! அவரே சொல்லும் ரகசியம்!
கணவனும் வேண்டாம்; வேலையும் வேண்டாம்! 45 கிலோ எடையை குறைத்த அமெரிக்க பெண்! அவரே சொல்லும் ரகசியம்!
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
IPL 2025 Points Table: மீண்டும் வீழ்ந்த மும்பை, மீண்டு வருமா சென்னை? - ஐபிஎல் புள்ளிப் பட்டியல், இன்று இரண்டு போட்டிகள்
Embed widget