மேலும் அறிய

நாளை பக்ரீத்: விடிய, விடிய நடந்த ஆடு வியாபாரம்; ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - களை கட்டிய எட்டயபுரம் ஆட்டுச் சந்தை..!

செம்மறி ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்தது. நேற்று இரவு தொடங்கி இன்று விடிய, விடிய தொடர்ந்து விற்பனை நடைபெற்றது.

நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, விடிய, விடிய நடந்த ஆடு வியாபாரத்தால், எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச் சந்தையில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.


நாளை பக்ரீத்: விடிய, விடிய  நடந்த ஆடு வியாபாரம்; ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - களை கட்டிய எட்டயபுரம்  ஆட்டுச் சந்தை..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு முதல் விடிய, விடிய ஆடுகள் வியாபாரம் நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு பின்னர் தற்பொழுது தான் மீண்டும் வழக்கமான விற்பனைக்கு சந்தை திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


நாளை பக்ரீத்: விடிய, விடிய  நடந்த ஆடு வியாபாரம்; ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - களை கட்டிய எட்டயபுரம்  ஆட்டுச் சந்தை..!

தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. விவசாயிகளிடம்  இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும்  வெள்ளாடு, சீனி வெள்ளாடு செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம்,  வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தைக்கு  மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில், தேனி, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள். சாதாரண வாரங்களில் ஒரு கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும். பொங்கல் தீபாவளி, பக்ரீத், ரம்ஜான் ,கிறிஸ்துமஸ் என பண்டிகை காலங்களில் 4 கோடி ரூபாய் முதல் 6 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடப்பது வழக்கம்.


நாளை பக்ரீத்: விடிய, விடிய  நடந்த ஆடு வியாபாரம்; ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - களை கட்டிய எட்டயபுரம்  ஆட்டுச் சந்தை..!

இந்நிலையில் வரும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று இரவு முதல் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை களைகட்டியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக சரிவர ஆடுகள் விற்பனை நடைபெறாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகளவு ஆடுகள் வரத்தும் இருந்தன, விற்பனையும் இருந்தது. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் 7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி 8,000 ரூபாயும் , ஜோடி ஆடு 15 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக செம்மறி ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்தது.


நாளை பக்ரீத்: விடிய, விடிய  நடந்த ஆடு வியாபாரம்; ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - களை கட்டிய எட்டயபுரம்  ஆட்டுச் சந்தை..!

நேற்று இரவு தொடங்கி இன்று விடிய, விடிய தொடர்ந்த விற்பனை நடைபெற்றது.  இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Embed widget