மேலும் அறிய

நாளை பக்ரீத்: விடிய, விடிய நடந்த ஆடு வியாபாரம்; ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - களை கட்டிய எட்டயபுரம் ஆட்டுச் சந்தை..!

செம்மறி ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்தது. நேற்று இரவு தொடங்கி இன்று விடிய, விடிய தொடர்ந்து விற்பனை நடைபெற்றது.

நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, விடிய, விடிய நடந்த ஆடு வியாபாரத்தால், எட்டயபுரம் வாராந்திர ஆட்டுச் சந்தையில் 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.


நாளை பக்ரீத்: விடிய, விடிய  நடந்த ஆடு வியாபாரம்; ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - களை கட்டிய எட்டயபுரம்  ஆட்டுச் சந்தை..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு முதல் விடிய, விடிய ஆடுகள் வியாபாரம் நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு பின்னர் தற்பொழுது தான் மீண்டும் வழக்கமான விற்பனைக்கு சந்தை திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 


நாளை பக்ரீத்: விடிய, விடிய  நடந்த ஆடு வியாபாரம்; ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - களை கட்டிய எட்டயபுரம்  ஆட்டுச் சந்தை..!

தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. விவசாயிகளிடம்  இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும்  வெள்ளாடு, சீனி வெள்ளாடு செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம்,  வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தைக்கு  மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில், தேனி, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள். சாதாரண வாரங்களில் ஒரு கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெறும். பொங்கல் தீபாவளி, பக்ரீத், ரம்ஜான் ,கிறிஸ்துமஸ் என பண்டிகை காலங்களில் 4 கோடி ரூபாய் முதல் 6 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடப்பது வழக்கம்.


நாளை பக்ரீத்: விடிய, விடிய  நடந்த ஆடு வியாபாரம்; ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - களை கட்டிய எட்டயபுரம்  ஆட்டுச் சந்தை..!

இந்நிலையில் வரும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று இரவு முதல் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை களைகட்டியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக சரிவர ஆடுகள் விற்பனை நடைபெறாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிகளவு ஆடுகள் வரத்தும் இருந்தன, விற்பனையும் இருந்தது. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் 7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி 8,000 ரூபாயும் , ஜோடி ஆடு 15 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதிலும் குறிப்பாக செம்மறி ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்தது.


நாளை பக்ரீத்: விடிய, விடிய  நடந்த ஆடு வியாபாரம்; ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை - களை கட்டிய எட்டயபுரம்  ஆட்டுச் சந்தை..!

நேற்று இரவு தொடங்கி இன்று விடிய, விடிய தொடர்ந்த விற்பனை நடைபெற்றது.  இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Embed widget