மேலும் அறிய

குடமுழுக்கு நடைபெற உள்ள திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வரும் மார்ச் 27ஆம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட திருக்கடையூரில் புகழ்பெற்ற  தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் 60, 70, 80, 90, 100  வயதை பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். 


குடமுழுக்கு நடைபெற உள்ள திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் - யூ.ஜி.சி

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று முடிவுறும் தருவாயில் உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்த யோகம் ரிஷப லக்னத்தில் காலை 10 மணி முதல் 11:30 மணிக்குள் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில்  கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  

Assembly : எல்லா பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க பெண்களை அனுமதிக்கணும் - பேரவையில் பேசிய செல்லூர் ராஜு


குடமுழுக்கு நடைபெற உள்ள திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இதற்கான கோவிலுக்கு வர்ணம் தீட்டும் பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வரும் நிலையில் இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஆதீனங்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பல லட்சம் பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதலி - துக்கத்தில் காதலனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகம்


குடமுழுக்கு நடைபெற உள்ள திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயில் திருவிளக்கு பூஜை - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி  அம்பாள் அருட் கடாட்சம் பக்தர்கள் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டி திருக்கடையூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை திருக்கடையூர் கோவில் அபிராமி அம்பாள் சன்னதியில் நடைபெற்றது. சென்னை மகாலட்சுமி ஏற்பாடு செய்திருந்த விளக்கு பூஜையில்  தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பூஜையில் பெண்களுக்கு ஸ்வர்ண புஷ்பம், மற்றும் மங்கலப் பொருட்கள் அடங்கிய அருட் பிரசாதங்களை வழங்கினார். முன்னதாக குருமகாசன்னிதானம் கோயில் நடைபெற்ற  கோ பூஜை, கஜ பூஜைகளை  செய்தார். 

கன்னியாகுமரியில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான குத்தகை தொகையை விடுவிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget