மேலும் அறிய

தமிழ்நாட்டில் கோயில்களையும் சிலைகளையும் பாதுகாக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள், சிலைகள் மற்றும் புராதான சின்னங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு பிரபல ஆங்கில நாளிதழலில் கோயில் சிலைகள் தமிழ்நாட்டில் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வந்தது. அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷக் கவுல் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு  75 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையும் மத்திய தொல்லியல் துறையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்த வழக்கில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான அறிவிப்புகள் என்னென்ன?

  • தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள், சிலைகள்,புராதான சின்னங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது மற்றும் கருத்துகளை வழங்குவது தொடர்பாக 17 பேர் கொண்ட பாரம்பரிய ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
  • இந்த பாரம்பரிய ஆணையத்தின் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள எந்த கோயில்களிலோ, சிலையையோ, புராதான சின்னங்களிலோ  எந்தவித புணரமைத்தல் பணியை தொடங்க கூடாது. 
  • பாரம்பரிய ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள பிற புராதான சின்னங்கள், கோயில்கள் சிலைகள் ஆகியவற்றை அவற்றின் காலங்களுடன் கண்டறிந்து தமிழ்நாடு அரசிற்கு தெரிவிக்க வேண்டும். அத்துடன் அவற்றை எப்படி பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பாகவும் அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும். 
  • மாவட்ட அளவில் ஒரு குழுவை நியமித்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள கோயில்களில் உள்ள சிலைகள் மற்றும் புராதான சின்னங்கள் குறித்து நிழற்படம் எடுத்து உரிய தகவல்களுடன் அவற்றை கணினியில் ஆவணம் செய்ய வேண்டும்.


தமிழ்நாட்டில் கோயில்களையும் சிலைகளையும் பாதுகாக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! 

  • தமிழ்நாட்டு இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள், சிலைகள் உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்களை கணினி மையமாக்கவேண்டும். அத்துடன் இந்த இடங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்க வசதியாக சிசிடிவி வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும் அந்த இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். 
  • உலக புகழ் பெற்ற மகாபலிபுரத்தில் உள்ள புராதான சின்னங்கள் மற்றும் கோயில்களை பாதுகாக்க தனியாக ஒரு ஆணையம் அமைக்க வேண்டும். அந்த ஆணையத்திற்கு பாரம்பரிய ஆணையம் அறிவுரை வழங்க வேண்டும்.
  • மேலும் கோயில்கள் மூலம் வரும் வருமானத்தை முதலில் கோவில் திருவிழா, புணரமைப்பு பணி மற்றும் அங்கு பணிப்புரியும் ஓதுவார்கள், அர்ச்சர்கள் ஊதியம் ஆகியவற்றிற்கு பயன்படுத்த வேண்டும். இவை போக மீதம் உள்ள பணத்தை மற்ற கோயில்களின் புணரமைக்கும் பணிகளுக்கு அளிக்கலாம். 


தமிழ்நாட்டில் கோயில்களையும் சிலைகளையும் பாதுகாக்க நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

  • இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வரும் வருமானம் மற்றும் செலவீனங்களை சரியாக தனிக்கை செய்து அதற்கான அறிக்கை விவரங்களை அரசு வைத்திருக்க வேண்டும். 

இவ்வாறு 75 அறிவிப்புகள் அடங்கி ஆணையை நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது. இந்த ஆணையை நிறைவேற்றி 12 வாரங்களுக்குள் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய தொல்லியல்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க: வீரபாண்டி ஈஸ்வரர் கோயில் வைகாசி மாத பிரதோஷ விழா

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget