மேலும் அறிய

ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் ஐப்பசி மாத பிரதோஷ விழா..

அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத பிரதோஷ விழா- நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாதம்தோறும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐப்பசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், தேன், நெய் , திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 


ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் ஐப்பசி மாத பிரதோஷ விழா..

பின்னர் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, நாணயத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட, பிறகு வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால்  நாமாவளிகள் கூறிய பிறகு, நந்தி பகவானுக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, நெய் தீப ஆலாத்தியுடன், பஞ்ச கற்பூர ஆலாத்தி மற்றும் ஷோடச உபசாரங்கள் நடைபெற்று அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆலயத்தில் பிரதோஷ விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.


ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் ஐப்பசி மாத பிரதோஷ விழா..

பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஐப்பசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு ஆலய மண்டபத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர் அதைத்தொடர்ந்து ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் உற்சவருக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு,  நெய்வேத்தியம்  சமர்ப்பிக்கப்பட்டு, பல்வேறு சோடச உபசாரங்கள் நடைபெற்ற பிறகு கும்ப ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.


ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் ஐப்பசி மாத பிரதோஷ விழா..

பின்னர் ஆலயத்தின் ஓதுவார் செங்கோலுடன் முன்செல்ல மேளதாளங்கள் முழங்க சிவபக்தர்கள் ரிஷப வாகனத்தில் கொலுவிருந்த சுவாமியை தோள் மீது சுமந்தவாறு ஆலயம் வலம் வந்தனர். ஆலயம் வலம் வந்த பின்னர் கொடிமரம் அருகே சுவாமியை மூன்று முறை வலம் வந்த பிறகு பின்னர் மீண்டும் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது அதைத் தொடர்ந்து மீண்டும் சுவாமி ஆலயம் குடிபுகுந்தார். ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாதப் பிரதோஷம் விழாவை முன்னிட்டு நந்தி பகவானின் சிறப்பு அபிஷேகத்தை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் ஐப்பசி மாத பிரதோஷ விழா..

நிகழ்ச்சியில் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் செயல் அலுவலர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் ஆலயம் சென்று வழிபடலாம் என பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு கடந்த வாரத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதனை பல்வேறு ஆன்மீக பக்தர்களும் வரவேற்றுள்ள நிலையில் ஐப்பசிமாத பிரதோஷ விழாவிற்கு ஏராளமான மக்கள் கூட்டம் ஆலயம் வருகை தந்து நந்தி பகவானை தரிசனம் செய்தனர் கடந்த பல்வேறு மாதங்களாக பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் இந்த பிரதோஷம் மக்கள் அலை கடல் கூட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் ஐப்பசி மாத பிரதோஷ விழா..

எனினும் பல்வேறு பக்தர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள உங்க கவசங்களை அணியாமல் சுவாமி தரிசனம் செய்து வருவதால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆலய நிர்வாகம் இணைந்து பக்தர்கள் முகக்கவசம் சமூக இடைவெளி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Embed widget