மேலும் அறிய

விஷ ஜந்துக்களால் கடிபடும் ஜாதகம் எது? அதற்கான பரிகாரங்களாக நம்பப்படுபவை என்னென்ன?

விஷ ஜந்துகள் எந்த ஜாதகத்தினரை தீண்டும் என்றும், அதற்கான பரிகாரங்களாக நம்பப்படுபவை என்னென்ன? என்பதையும் கீழே விரிவாக காணலாம்.

அன்பார்ந்த வாசகர்களே,

இன்றைக்கு நாம் பார்க்கவிருக்கும் தலைப்பு விஷ ஜந்துக்களால் கடிபடும் ஜாதகம். விஷ ஜந்துக்கள் என எடுத்துக்கொண்டால்  பாம்பு, பூரான், தேள் போன்றவை அடங்கும்.  ஒருவர் ஜாதகத்தில் ராகு இருக்கும் இடம்தான்  விஷ ஜந்துக்கள் அதிகமாக உலாவும் இடம். ராகு உடன் பாவ கிரங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலும் நிச்சயமாக விஷ ஜந்துக்களால் ஜாதகர் கடிபடுவார் என நம்பப்படுகிறது.  உதாரணத்திற்கு ஏற்கனவே பாம்பு கடித்த ஒரு ஜாதகத்தை நான் வைத்திருக்கிறேன் அவருக்கு  லக்னத்திற்கு இரண்டில் கேது, எட்டில் ராகு. 

பாம்பு கடி:

எட்டாம் இடம் என்பது மறைவான ஸ்தானம் யாருக்கும் தெரியாத ஒரு இடம்  அப்படிப்பட்ட இடத்தில்  ராகு அமர்ந்து ராகுவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. அதில் ராகு புத்தி மற்றும் ராகு அந்தரம் ஆகியவை சென்று கொண்டிருக்கிறது.  இந்த சமயத்தில் ஜாதகர் ஒரு மத்திய வேளையில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அந்த ஜாதகர் வசிப்பது கிராமப்புறத்தில் அல்ல நகரத்தில்தான்.  நகரத்தின் மையப் பகுதியில் அவரது வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்! எங்கிருந்தோ வந்த ஒரு நாகம் அவருடைய காலுக்கு அருகாமையில் வந்து  அவரை காலிலேயே கொத்திவிட்டு, அங்கேயே அருகில் படுத்துக்கொண்டது. 

அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததால்  பாம்பு கடியை அவரால் சரியாக உணர முடியவில்லை. இருப்பினும் தன்னை யாரோ சீண்டியதுபோல உணர்ந்தவர் சட்டென்று எழுந்து பார்த்தார். அவருடைய காலுக்கு அருகாமையிலேயே பாம்பு இருந்ததை கண்டு அதிர்ந்து  கூச்சலிடாமல்  தொலைபேசி வாயிலாக  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து  அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து அந்த பாம்பையும்  பிடித்தனர். அதேபோல் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை மருத்துவமனைக்கும் அழைத்துச்  சென்றனர்.  பாருங்கள் இந்த ஜாதகத்தில்  எட்டாம் இடத்தில் ராகு  தசை புத்தி அந்தரம் போன்றவை நடத்திக் கொண்டிருக்கிறார்.  ராகு மறைவான இடத்தில் இருப்பதால்  அவர் என்ன செய்வார் என்பதை தெரியாது, பாம்புவும் மறைவாக தான் அவருடைய காலுக்கு அடியில் வந்து அமர்ந்து அவரை கொத்தி விட்டு  விஷத்தை ஏற்றி இருக்கிறது.

ராகு - குரு:

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு எனக்கு தகவல் கொடுக்கப்பட்டு ,நான் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் படுத்திருந்த  சிகிச்சை அறையில் படுக்கைக்கு மேலே  ஒரு சாய்பாபாவின் விக்ரகம் இருந்ததை நான் பார்த்தேன்.  நலம் விசாரிக்க சென்ற நான் அவரிடம் கூறினேன். உங்களுக்கு விரைவில் குணமாகிவிடும் குருவின் அருள் பார்வை உங்களுடைய தலைக்கு மேலே இருக்கிறது. விஷம் முறிந்து நீங்கள் சுகமாவீர்கள். கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி விட்டு வந்து விட்டேன்.

பிறகு வீட்டிற்கு வந்த நான் அவருடைய ஜாதகத்தை எடுத்து  அலச ஆரம்பித்தேன்.  இதேபோல் ஏற்கனவே எட்டில் ராகு இருந்து, கால் கடிபட்ட ஜாதகங்களையும் ஒரு பார்வையிட்டேன்.  அது சம்பந்தமாக எனக்கு ஒரு  தகவல் புரிய வந்தது.  எட்டில் ராகு இருப்பவர்களை நோக்கி  இதுபோன்ற ஜந்துக்கள் வருவதும் அவரை சீண்டுவதும் அவருடைய ரத்தத்தில் இந்த ஜந்துக்களின் விஷம் கலப்பதும்  என்று அரிதான பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன.  அந்த நபரின் பெயர் கார்த்திக், நான் அவரிடம் கேட்டேன். கார்த்திக் உங்களை பாம்பு தீண்டியதும்  உங்களுக்கு வழி ஏதும் ஏற்பட்டதா? என்று, அதற்கு அவர் இல்லை என்று பதில் கூறினார். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்! பாம்பு கடித்தும் அவருக்கு வலி ஏற்படவில்லை. காரணம் அவருடைய ஜாதகத்தில் ராகு இருக்கும் அதே வீட்டில் தான் உருவம் இருந்திருக்கிறார்.  ராகு விஷசந்து கால் கடி விடுவதென்றால், குரு அவருடைய உயிரை காப்பாற்றுவதற்காக ராகுவின் அருகிலேயே இருந்திருக்கிறார். மொத்தத்தில் அவர் பாம்பினால் கடிபட்டு மருத்துவமனையில் சாய்பாபாவின் ஆள் காப்பாற்றப்பட்டார் என்று கூட நாம் எடுத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய ஜாதகத்தில் நான்காம் இடத்தில் ராகு  அல்லது எட்டாம் இடத்தில் அல்லது 12ஆம் இடத்தில் அல்லது இரண்டாம் இடத்தில் என்று  சில குறிப்பிட்ட இடங்களில் ராகு இருக்கும் போது நிச்சயமாக விஷ ஜந்துக்களின் மூலமாக அவருக்கு ஆபத்தை உண்டாக்குகிறார்.

பரிகாரம் என்ன ?

ஞாயிற்றுக்கிழமை தோறும் நாலரை மணிமுதல் 6 மணிவரை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று எலுமிச்சம் பழத்தால் தீபம் ஏற்றி வர, விஷ ஜந்துக்களால்  ஏற்படும் அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாகவே வீட்டில் துர்க்கை அம்மன் படங்களை வைத்து வழிபட்டு வர விஷ ஜந்துக்கள் உங்களை ஒன்றும் செய்யாது.

ஜோதிட நம்பிக்கைகள் இவை. இவை ஏபிபி நிறுவனத்தின் கருத்துக்களில்லை. நிபுணரின் கருத்துக்களாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Embed widget