மேலும் அறிய

முட்டைக்கோஸ் சாகுபடியில் குறைவான முதலீடு செய்து அதிக இலாபம் - விழுப்புரம் விவசாயி அசத்தல்

விழுப்புரம்: முட்டைக்கோஸ் சாகுபடியில் குறைவான முதலீடு செய்து அதிக இலாபம்ஈடும் விழுப்புரம் விவசாயி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் சித்தணி கிராமத்தில் விவசாயிகள் ஒரு சிலர் முட்டைக்கோஸ் சாகுபடி ஈடுபட்டு வருகின்றனர். முட்டைக்கோஸ் சாகுபடி குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய பயிராக விளங்குகிறது. முட்டைக்கோஸ் ஆகபடியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

முட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று.முட்டைகோஸில் கீரையில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, பி, இ சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச் சத்து, கால்சியச் சத்து மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில் தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. சமவெளி பகுதிகளில் இது குளிர்காலப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களிலும் நன்றாக வளர கூடிய பயிராகும். சமவெளிப்பகுதியில் நவம்பர் டிசம்பர் ஜனவரிபோன்ற மாதங்களில் சாகுபடி செய்து அறுவடை செய்யப்படுகிறது.

 அதுபோல விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் சித்தணி கிராமத்தில் பழனி (45) என்ற விவசாயி 20 வட்டங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். தற்போது தோட்டக்கலை பயிர்களை விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார் அதுபோல,  தன்னுடைய 60 சென்ட் வயலினத்தில் ஹரி ராணி என்ற ரகத்தை சேர்ந்த முட்டைக்கோஸ் சாகுபடி ஈடுபட்டு வருகிறார். என்னுடைய வயலில் 90 நாட்கள் வளரக்கூடிய பயிரை நான் பயிர் செய்து உள்ளேன்.,  இந்த மாதம் முடியும் தருவாயில் இந்த முட்டைக்கோஸ் அனைத்தும் அறுவடை செய்யப்படும். இதற்கு முதலீடாக 20 ஆயிரம் செலவு செய்துள்ளார். முட்டை பொசுக்கு தேவையான நாற்றங்காலை ஓசூரில் சென்று வாங்கி வந்துள்ளார். அதன் பிறகு முட்டைகோஸ் நாற்றங்காலை நடவு செய்து படித்து வருகிறார்.

முட்டைக்கோஸ் சாகுபடி குறித்து விவசாயி பழனி கூறுகையில் ,

 நான் ஹரிராணி என்ற ரகத்தை பயிர் செய்து உள்ளேன். முதலில் நிலத்தை நன்றாக தயார் செய்து கொள்ள வேண்டும், சமவெளிப்பகுதிகளுக்கு அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

நோய்த் தாக்குதல் :

பொதுவாக முட்டைகோஸ் பயிரில் வெட்டுப்புழுக்கள் தாக்குதல் இருக்கும். இதுதவிர இலைப் புள்ளி நோய், இலைக்கருகல் நோய், கருப்பு அழுகல் நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படக் கூடும். இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் இலைகளை அனைத்தும் புழுக்கள் அரித்துவிடும். எனவே, அதற்கான மருந்துகள் குறித்து தோட்டக்கலைத் துறையினரின் பரிந்துரை பெற்றுத் தெளிப்பது சிறந்தது.  மேலும் இயற்கை முறையில் வேப்பம் எண்ணெய் தெளித்தால் நன்றாக இருக்கும்.

பாசன முறை  :

முட்டைகோஸ் பயிரைப் பொறுத்தவரை மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். அதேநேரத்தில் தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும். இதற்காக தோட்டக்கலைத் துறை மூலம் 100% மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி செய்து தரப்படுகிறது. மேலும், தோட்டக்கலை துறை மூலம்  நோய் தாக்கம் இன்றியும், இயற்கை முறை சாகுபடியால் விளைச்சல் அதிகரிக்கும் வகையில்,முட்டைகோஸ் செடிகளை பூச்சி தாக்காத வண்ணம் மஞ்சள் ஒட்டு பொறி அட்டை வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் செடிகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என தோட்டக்கலை துறை அதிகாரிகள் வயலுக்கு வந்து பார்த்து, ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அதற்கான அறிவுரைகளையும் தீர்வுகளையும் வழங்கி வருகிறார்கள்.  

நாற்றங்கள் நடவு செய்த பிறகு, 75 வது நாளில் அறுவடைக்கு வந்து விடும். கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும். முக்கியமாக,செடிகள் வளரும் பருவத்தில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுடன் அறுவடை செய்யவேண்டும். ஒவ்வொரு காயம் குறைந்த பட்சம் இரண்டு முதல் இரண்டரை கிலோ எடை உள்ளதாக இருக்கும். ஒரு கிலோ ரூ.10 ரூபாய்க்கு சென்றால் நல்ல வருமானம் கிடைக்கும். விலை குறைவாக போனால் நஷ்டம் தான் ஏற்படும்  ஒரு ஏக்கரில் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை முட்டைகோஸ் சாகுபடியில் வருமானம் ஈட்ட முடியும்.  தற்போது பயிர் சிறிது நிலத்திலிருந்து குறைந்தபட்ச 6 முதல் 72 வரை முட்டைகோஸ் அறுவடை செய்யப்படும்.  அறுவடை செய்யப்படும் அனைத்து காய்களும் விழுப்புரம் பாண்டி போன்ற சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  நிச்சயமாக நல்லா பராமரிப்பு நல்ல தண்ணீர் வசதியும் இருந்தால் முட்டைகோஸ் சாகுபடி நல்ல லாபம் பார்க்க முடியும் என விவசாயி பழனி கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka AasaiWheel Chair Cricket | சக்கர நாற்காலி கிரிக்கெட் தேசிய கோப்பை வென்ற தமிழகம் சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளிகள்Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
“எடப்பாடியிடம் ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?” இல்லையெனில் செங்கோட்டையனை வைத்து செக்..!
Ruthuraj on CSK Defeat: நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
நாங்க தோத்ததுக்கு இதுதாங்க காரணம்.. CSK கேப்டன் ருதுராஜ் என்ன சொன்னார்னு பாருங்க...
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
Chennai Corporation: ரமலான் பண்டிகை - சென்னை மக்களுக்கு கடைசி நாள் - வீட்டிலிருந்தே சொத்து வரி செலுத்துவது எப்படி?
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
BJP Vijay: புரிஞ்சுக்கோங்க..! ”மோடி சாதாரண மனிதரே இல்லை, படிச்சுட்டு வாங்க விஜய்” - பாஜக ஆவேசம்
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL 2025 Points Table: புள்ளிப்பட்டியலில் சறுக்கிய சென்னை - வான்கடேவில் வாகை சூடுமா மும்பை? ஐபிஎல் இன்றைய போட்டி
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
IPL CSK vs RR: திக்.. திக்..த்ரில்..! போராடி தோற்ற சென்னை.. முதல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
ரம்ஜான் நாளில் வங்கி திறந்திருக்குமா? வெளியான அறிவிப்பு என்ன?
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
TN Weather: தமிழ்நாட்டில் 6 இடங்களில் வெயில் சதம்! ஆனால், நாளை மறுநாள் இங்கு கனமழை ஸ்டார்ட்!
Embed widget