மேலும் அறிய

உசிலம்பட்டி கடை மடை கண்மாய்க்கு வந்த வைகை நீர் ; கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு

விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அங்கிருந்த பைரவர் மற்றும் சடச்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

உசிலம்பட்டி 58 கால்வாயின் கடை மடை கண்மாய்க்கு வைகை நீர் கொண்டு செல்லப்பட்டதை கொண்டாடும் விதமாக விவசாயிகள், கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
 
கண்மாய் கரையில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அங்கிருந்த பைரவர் மற்றும் சடச்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
 
உசிலம்பட்டி பகுதி மதுரை மாவட்டத்தில் மிகவும் வறட்சி மிகுந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. இதைத் தாண்டியும் பல இடங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். பெரும் பகுதியில் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது. எஞ்சி இருக்கும் சிலரும் விவசாயம் கைவிடும் சூழலில் இருந்து வருகிறது. இதனால் தண்ணீரை உசிலம்பட்டி பகுதி மக்கள் முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். இந்நிலையில் உசிலம்பட்டி 58 கால்வாயின் கடை மடை கண்மாய்க்கு வைகை நீர் கொண்டு செல்லப்பட்டதை கொண்டாடும் விதமாக விவசாயிகள், கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

உசிலம்பட்டி கடை மடை கண்மாய்க்கு வந்த வைகை நீர் ; கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் 58 கால்வாய்க்கு பாத்தியப்பட்ட 33 கண்மாய்கள் மற்றும் இரண்டு குளங்களுக்கும் சென்றடைந்ததையடுத்து தண்ணீர் திறப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 33 கண்மாய்களில் கடைமடை கண்மாயாக உள்ள சடச்சிபட்டி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லும் வழித்தடத்தில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை நீடித்தது.
 

உசிலம்பட்டி கடை மடை கண்மாய்க்கு வந்த வைகை நீர் ; கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு
 
58 கால்வாயின் அனைத்து கண்மாய்களுக்கும் நீரை கொண்டு சென்று இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி தர விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த சூழலில் இந்த ஆண்டு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து சடச்சிபட்டி கண்மாய்க்கு வரும் வழித்தடதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் கொண்டு சென்று கண்மாயை போதுமான அளவு நிரப்பி கொடுத்துள்ளனர். 58 கிராம கால்வாயின் கடைமடை கண்மாய்க்கும் நீர் கொண்டு சென்றதற்கும், சடச்சிபட்டி கண்மாய் 35 ஆண்டுகளுக்கு பின் ஓரளவு நிரம்பியதை கொண்டாடும் வகையில், இந்த கண்மாய் கரையில் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அங்கிருந்த பைரவர் மற்றும் சடச்சியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இது போன்று அனைத்து கண்மாய்களுக்கும் வைகை நீரை கொண்டு வர இயற்கை ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.
 
 

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget