மேலும் அறிய

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 22 ஆண்டுகளாக வராத இழப்பீடு - தூத்துக்குடி விவசாயிகளின் கண்ணீர் கதை

மழைக்காலத்தில் பெய்யக்கூடிய மழை நீர்தேக்கி வைக்க போதிய நீர்நிலைகள் இல்லாததால் மழைநீர் வீணாக கடலில் கலந்தது.

பாசன கண்மாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இருபத்து இரண்டு ஆண்டுகளாகியும் இழப்பீடும் கிடைக்கவில்லை, பாசனத்திற்கு தண்ணீரும் வரவில்லை.


நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 22 ஆண்டுகளாக வராத இழப்பீடு - தூத்துக்குடி விவசாயிகளின் கண்ணீர் கதை

தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரம் கீழ்பகுதியில் காடல்குடி அருகே கே.சுப்பையாபுரம் உள்ளது. இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாகும். இங்கு மிளகாய், வெங்காயம், மக்கா, வெள்ளைச் சோளம், கம்பு, பருத்தி போன்றவைகள் சாகுபடி செய்யப்படுகிறது. இக்கிராமம் வானம் பார்த்த பூமியாகும். நீண்ட காலப் பயிரான முண்டு வத்தல் அதிகம் பயிரிடப்படுகிறது.


நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 22 ஆண்டுகளாக வராத இழப்பீடு - தூத்துக்குடி விவசாயிகளின் கண்ணீர் கதை

மழைக்காலத்தில் பெய்யக்கூடிய மழை நீர்தேக்கி வைக்க போதிய நீர்நிலைகள் இல்லாததால் மழைநீர் வீணாக கடலில் கலந்தது. இதனை கருத்தில் கொண்டு சுப்பையாபுரம், காடல்குடி, வாதலக்கரை கிராமங்களில் விவசாயிகளின் சுமார் 90 ஏக்கர் நிலங்களை நீர் வள ஆதாரத்துறை கையகப்படுத்தி 2002ம் ஆண்டு புதிய பாசன கண்மாயை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை உருவாக்கியது. புதிய பாசன கண்மாய் மூலம் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிக்கு கோடையில் தண்ணீர் பாய்ச்சுவதால் கூடுதல் விளைச்சலை பெறலாம் என விவசாயிகள் மகிழ்சியடைந்தனர்.


நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 22 ஆண்டுகளாக வராத இழப்பீடு - தூத்துக்குடி விவசாயிகளின் கண்ணீர் கதை

புதிய பாசன கண்மாயில் இரண்டு மதகுகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் மூலம் சுமார் சுமார் 150 ஏக்கர் நிலம் நேரடி பாசனமாகவும், பலநூறு ஏக்கர் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றன. இந்நிலையில் மதகுககள் தாழ்வான பகுதியிலும், ஆயக்கட்டு நிலங்கள் மேட்டுப் பகுதியாகவும் அமைந்துவிட்டன. இதனால் கண்மாயில் தண்ணீர் முழு கொள்ளளவு எட்டினாலும் சட்டர் திறந்தவுடன் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பாய்வதில்லை. இதனால் தண்ணீர் தேக்கியும் கால்வாய் வழியாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மோட்டார் மூலம் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தினர். இதில் சுப்பையாபுரம் கிராமத்தை சேர்ந்த சிலர் தண்ணீரை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவதாக புகார் தெரிவித்து விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போய் விட்டது.


நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 22 ஆண்டுகளாக வராத இழப்பீடு - தூத்துக்குடி விவசாயிகளின் கண்ணீர் கதை

இருப்பினும் அருகாமையிலுள்ள காடல்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்துவிவசாயம் செய்து வருகின்றனர். பழைய மதகுகளை அப்புறப்படுத்தி விட்டு தண்ணீர் சரளமாக நிலங்களுக்கு செல்லும் வகையில் புதிய மதகுகள் கட்ட வேண்டும். தவிர கடந்த டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் பெய்த கனமழைக்கு உபரி நீர் வெளியேறும் மறுகால் தலை அருகே மண் கரையில் பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதுமாக துளி தண்ணீர் கூட இல்லாமல் வெளியேறி விட்டது. உடைப்பு ஏற்பட்டு சுமார் ஆறு மாதங்களாகியும் உடைப்பு அடைக்கவில்லை. மழைக்காலம் துவங்குவதற்குள் கரை உடைப்பு அடைக்க வேண்டும்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, தண்ணீர் வரலன்னு அழுவதா?. இல்லை, பாசன கண்மாய் அமைக்க விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கவில்லை என அழுவதான்னு தெரியல எனக்கூறும் இவர், இங்கு புதிய மதகுகள் கட்டி சட்டர் திறந்தவுடன் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வகையில் உருவாக்கவும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து மோட்டார் மூலம் பாய்ச்ச நீர் பாசன விதிகளை திருத்தியமைக்க வேண்டும்" என்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE:நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Breaking News LIVE: நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Embed widget