மேலும் அறிய

தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும் - தென்னை விவசாயிகள் கோரிக்கை

கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணியில் ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில், சுமார் 1.20 லட்சம் ஏக்கரில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கஜா புயலுக்கு பிறகு, தென்னை சார்ந்த தொழில்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தேங்காய் விலை மிகப் பெரிய சரிவால், தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் மிக பெரியளவில் பாதிக்கப்பட்டது. தற்போது, ஒரு தேங்காய் வெறும் 8 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தென்னை விவசாயிகளுக்கான பிரச்சனைகளில் ஒன்றிய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமான தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கவும்,  தேங்காய் எண்ணெய் மக்கள் பயன்படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பேராவூரணியில் ஈஸ்ட் - கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில், பேராவூரணி, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும் - தென்னை விவசாயிகள் கோரிக்கை

போராட்டத்திற்கு  ஈஸ்ட் - கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்க தலைவர் இ.வீ.காந்தி தலைமை வகித்தார். செயலாளர் விஸ்வ.ராம்குமார், பொருளாளர் பன்னீர் செல்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈரோடு செ.நல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ,வும், திரைப்பட நடிகருமான கருணாஸ், முன்னாள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை தவிர்த்து. தென்னை விவசாயிகளுக்கு நன்மை தரும் வகையில் தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் காலை, மதியம் சத்துணவில் தேங்காய் எண்ணையையே பயன்படுத்த வேண்டும்.

பேராவூரணி பகுதியில் தென்னையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில், தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும். தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களின் உள்நாட்டு விற்பனைக்கு, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் அரசு உதவி செய்ய வேண்டும்.  

கேரள அரசு கூட்டுறவுத்துறை மூலம் உரித்த தேங்காய்களை விவசாயிகளிடம் வாங்குவது போல், தமிழகத்தில், ஒரு கிலோ தேங்காயை 40 ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.  மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து வரும் அனைத்து கொப்பரைகளையும், ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வதுடன், கொள்முதல் விலையை ஒரு கிலோ 140 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.  

தென்னை வளர்ச்சி வாரியத்தின் தமிழ்நாட்டிற்கான துணை அலுவலகத்தை, தஞ்சாவூரில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Hamas Tunnel Video: அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
மதுரை மெட்ரோ அதிமுக ஆட்சியில் தான் வரும் செல்லூர் ராஜூ சொல்ல வருவது என்ன?
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
GATE 2026 தேர்வு அட்டவணை வெளியீடு: IIT கவுஹாத்தி அறிவிப்பு! முக்கிய தேதிகள், பாடத்திட்டம் இதோ!
Hamas Tunnel Video: அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
அடேங்கப்பா.! 7 கி.மீ நீளம், 25 மீட்டர் ஆழம், 80 அறைகள்; ஹமாஸின் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல்
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! நவம்பர் 22-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ விவரம்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Hyundai Grand i10 Nios வாங்க ப்ளான் பண்ணிருக்கீங்களா? விலை, மைலேஜ், தரம் தெரிஞ்சுக்கோங்க
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Ind vs SA: விலகிய கில்.. கேப்டனான பண்ட்.. நாளை கவுகாத்தியில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட்
Embed widget