மேலும் அறிய

தொடர்ந்து நிலவும் அதிருப்தி... கடந்தாண்டை விட வெகுவாக குறைந்தது: என்ன தெரியுங்களா?

இழப்பீடு கிடைக்காததால், விழிப்புணர்வு பெற்ற விவசாயிகளும் காப்பீடு திட்டத்தில் சேருவதைத் தவிர்த்தனர். ரூ. 36 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதால், பெரும்பாலான விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

தஞ்சாவூர்: தொடர்ந்து ஏற்பட்ட அதிருப்தியால் நடப்பாண்டில் பயிர் காப்பீடு பதிவு குறைந்து விட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அதிகம் பேர் விரும்பவே இல்லை என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. 

விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைவாகவே இருந்து வருகிறது

நெற் பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைவாகவே இருந்து வருகிறது. பேரிடரால் பயிர்கள் பாதிக்கப்படும்போது இழப்பீடு கிடைக்காததால், விழிப்புணர்வு பெற்ற விவசாயிகளும் காப்பீடு திட்டத்தில் சேருவதைத் தவிர்த்தனர். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் 2020 ஆம் ஆண்டில் பெய்த தொடர் மழை காரணமாக ஏராளமான பரப்பில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட 1.17 லட்சம் விவசாயிகளுக்கு 2021ம் ஆண்டில் ஏறத்தாழ ரூ. 467 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் அதிகபட்ச இழப்பீடு கிடைத்தது அதுவே முதல் முறை. இது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும் தங்களின் பயிர் சாகுபடியில் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க உதவுகிறது என்று விழிப்புணர்வும் பெற்றனர்.


தொடர்ந்து நிலவும் அதிருப்தி... கடந்தாண்டை விட வெகுவாக குறைந்தது: என்ன தெரியுங்களா?

பிரிமிய தொகையாக ரூ. 17.94 கோடி செலுத்தப்பட்டது.

இப்படி பயிர் காப்பீடு கிடைத்ததால் ஏற்பட்ட நம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தின்போது 3.50 லட்சம் ஏக்கருக்கு 1.33 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். இதற்கு பிரிமிய தொகையாக ரூ. 17.94 கோடி செலுத்தப்பட்டது. பல விவசாயிகள் தங்களுக்கு தெரிந்தவர்கள், தங்களின் நண்பர்கள் போன்றவர்களுக்கும் பயிர்காப்பீடு குறித்து தெரிவித்து அவர்களையும் காப்பீடு செய்ய வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பெரும்பாலான விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்

இந்நிலையில்தான் அந்தாண்டு பெருமழையால் ஏராளமான ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், 7 கிராமங்களுக்கு ரூ. 36 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதால், பெரும்பாலான விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இதுதான் கொடுப்பது போல் கொடுத்து கெடுப்பதா என்று விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்தனர்.
இதேபோல, 2022 ஆம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தின்போது 3.03 லட்சம் ஏக்கருக்கு 1.11 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர்.

ஆனால், தொடர் மழையால் ஏராளமான பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டாலும், 4 கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 365 விவசாயிகளுக்கு மட்டுமே ரூ. 1.13 கோடி இழப்பீடு கிடைத்தது. இதனால், 2023ம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தின்போது பயிர் காப்பீடு பதிவு குறைந்து, 2.43 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தொடர் மழை, காவிரியில் நீர் வரத்து இல்லாதது, ஜனவரி, பிப்ரவரியில் மழை பெய்யாதது போன்ற காரணங்களால் சம்பா, தாளடி ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ரூ. 43.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

ஏராளமான விவசாயிகளுக்கு அதிருப்திதான்  நிலவுகிறது

இது, முந்தைய இரு ஆண்டுகளை விட கூடுதலாக இழப்பீடு கிடைத்தாலும், பாதிக்கப்பட்ட ஏராளமான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்ற அதிருப்திதான்  நிலவுகிறது. இந்நிலையில், நடப்பாண்டு சம்பா, தாளடிக்கு ஏக்கருக்கு ரூ. 548 பிரிமிய தொகை ஆகும். இதை கடந்த 15ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாவட்டத்தில் ஏறத்தாழ 2.85 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், 1.77 லட்சம் ஏக்கருக்கு 58 ஆயிரத்து 255 விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்துள்ளனர். இதற்கு தொடர்ந்து பயிர்கள் பாதிக்கப்பட்டும் இழப்பீடு கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்திதான் என்று விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

60 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத விவசாயிகளைச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 60 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்தனர். ஆனால், இழப்பீடு கிடைக்காததால் நிலவும் அதிருப்தி காரணமாக சில ஆண்டுகளாக பயிர் காப்பீடு பதிவு குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக பேரிடரால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானபோதும், பெரும்பாலானோருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. பயிர் பாதிப்பு கணக்கீடு செய்வதிலும், அறிவிப்பிலும் முரண்பாடு உள்ளது. இழப்பீடு கிடைக்காது என்ற அவநம்பிக்கை காரணமாக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு விரும்பவில்லை. பத்து ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள் ரூ. 5 ஆயிரத்து 480 பிரிமியம் செலுத்த வேண்டும். இதுவே 15, 20 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு பிரியமிய தொகை அதிகரிக்கிறது. இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தினாலும் பாதிக்கப்படும்போது இழப்பீடு கிடைக்காதபோது, ஏற்படும் ஏமாற்றமும் பெரும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பயிர் காப்பீடு பதிவில் பின்னடைவு

இதனால், கடந்த சில ஆண்டுகளாக பயிர் காப்பீடு பதிவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு நிறுவனங்கள்தான் லாபம் சம்பாதிக்கின்றன. பாதிக்கப்படும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அதனால் பயிர் காப்பீடு செய்தாலும் ஒன்று கிடைக்க போவதில்லை என்று காப்பீடு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 3 ஆண்டுகளாகவே பாதிப்பை சந்தித்தாலும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget