மேலும் அறிய

தொடர்ந்து நிலவும் அதிருப்தி... கடந்தாண்டை விட வெகுவாக குறைந்தது: என்ன தெரியுங்களா?

இழப்பீடு கிடைக்காததால், விழிப்புணர்வு பெற்ற விவசாயிகளும் காப்பீடு திட்டத்தில் சேருவதைத் தவிர்த்தனர். ரூ. 36 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதால், பெரும்பாலான விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

தஞ்சாவூர்: தொடர்ந்து ஏற்பட்ட அதிருப்தியால் நடப்பாண்டில் பயிர் காப்பீடு பதிவு குறைந்து விட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் அதிகம் பேர் விரும்பவே இல்லை என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. 

விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைவாகவே இருந்து வருகிறது

நெற் பயிர் காப்பீடு குறித்து விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைவாகவே இருந்து வருகிறது. பேரிடரால் பயிர்கள் பாதிக்கப்படும்போது இழப்பீடு கிடைக்காததால், விழிப்புணர்வு பெற்ற விவசாயிகளும் காப்பீடு திட்டத்தில் சேருவதைத் தவிர்த்தனர். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் 2020 ஆம் ஆண்டில் பெய்த தொடர் மழை காரணமாக ஏராளமான பரப்பில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட 1.17 லட்சம் விவசாயிகளுக்கு 2021ம் ஆண்டில் ஏறத்தாழ ரூ. 467 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் அதிகபட்ச இழப்பீடு கிடைத்தது அதுவே முதல் முறை. இது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும் தங்களின் பயிர் சாகுபடியில் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க உதவுகிறது என்று விழிப்புணர்வும் பெற்றனர்.


தொடர்ந்து நிலவும் அதிருப்தி... கடந்தாண்டை விட வெகுவாக குறைந்தது: என்ன தெரியுங்களா?

பிரிமிய தொகையாக ரூ. 17.94 கோடி செலுத்தப்பட்டது.

இப்படி பயிர் காப்பீடு கிடைத்ததால் ஏற்பட்ட நம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தின்போது 3.50 லட்சம் ஏக்கருக்கு 1.33 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். இதற்கு பிரிமிய தொகையாக ரூ. 17.94 கோடி செலுத்தப்பட்டது. பல விவசாயிகள் தங்களுக்கு தெரிந்தவர்கள், தங்களின் நண்பர்கள் போன்றவர்களுக்கும் பயிர்காப்பீடு குறித்து தெரிவித்து அவர்களையும் காப்பீடு செய்ய வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பெரும்பாலான விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்

இந்நிலையில்தான் அந்தாண்டு பெருமழையால் ஏராளமான ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், 7 கிராமங்களுக்கு ரூ. 36 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டதால், பெரும்பாலான விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இதுதான் கொடுப்பது போல் கொடுத்து கெடுப்பதா என்று விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்தனர்.
இதேபோல, 2022 ஆம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தின்போது 3.03 லட்சம் ஏக்கருக்கு 1.11 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர்.

ஆனால், தொடர் மழையால் ஏராளமான பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டாலும், 4 கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 365 விவசாயிகளுக்கு மட்டுமே ரூ. 1.13 கோடி இழப்பீடு கிடைத்தது. இதனால், 2023ம் ஆண்டு சம்பா, தாளடி பருவத்தின்போது பயிர் காப்பீடு பதிவு குறைந்து, 2.43 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே பயிர் காப்பீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தொடர் மழை, காவிரியில் நீர் வரத்து இல்லாதது, ஜனவரி, பிப்ரவரியில் மழை பெய்யாதது போன்ற காரணங்களால் சம்பா, தாளடி ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ரூ. 43.11 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

ஏராளமான விவசாயிகளுக்கு அதிருப்திதான்  நிலவுகிறது

இது, முந்தைய இரு ஆண்டுகளை விட கூடுதலாக இழப்பீடு கிடைத்தாலும், பாதிக்கப்பட்ட ஏராளமான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்ற அதிருப்திதான்  நிலவுகிறது. இந்நிலையில், நடப்பாண்டு சம்பா, தாளடிக்கு ஏக்கருக்கு ரூ. 548 பிரிமிய தொகை ஆகும். இதை கடந்த 15ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாவட்டத்தில் ஏறத்தாழ 2.85 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், 1.77 லட்சம் ஏக்கருக்கு 58 ஆயிரத்து 255 விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்துள்ளனர். இதற்கு தொடர்ந்து பயிர்கள் பாதிக்கப்பட்டும் இழப்பீடு கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்திதான் என்று விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

60 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத விவசாயிகளைச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 60 சதவீதத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்தனர். ஆனால், இழப்பீடு கிடைக்காததால் நிலவும் அதிருப்தி காரணமாக சில ஆண்டுகளாக பயிர் காப்பீடு பதிவு குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக பேரிடரால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானபோதும், பெரும்பாலானோருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. பயிர் பாதிப்பு கணக்கீடு செய்வதிலும், அறிவிப்பிலும் முரண்பாடு உள்ளது. இழப்பீடு கிடைக்காது என்ற அவநம்பிக்கை காரணமாக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு விரும்பவில்லை. பத்து ஏக்கர் வைத்துள்ள விவசாயிகள் ரூ. 5 ஆயிரத்து 480 பிரிமியம் செலுத்த வேண்டும். இதுவே 15, 20 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு பிரியமிய தொகை அதிகரிக்கிறது. இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தினாலும் பாதிக்கப்படும்போது இழப்பீடு கிடைக்காதபோது, ஏற்படும் ஏமாற்றமும் பெரும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பயிர் காப்பீடு பதிவில் பின்னடைவு

இதனால், கடந்த சில ஆண்டுகளாக பயிர் காப்பீடு பதிவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு நிறுவனங்கள்தான் லாபம் சம்பாதிக்கின்றன. பாதிக்கப்படும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். அதனால் பயிர் காப்பீடு செய்தாலும் ஒன்று கிடைக்க போவதில்லை என்று காப்பீடு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த 3 ஆண்டுகளாகவே பாதிப்பை சந்தித்தாலும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடம்... (11.06.2026) அன்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் !
மதுரை ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடம்... (11.06.2026) அன்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் !
"விஜய் சார்.. வெரி ராங் சார்!" - ஐந்து ஏக்கர் வாக்குறுதியை கையில் எடுத்து மயிலாடுதுறையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
"வராங்க.. பெஞ்சை தேச்சுட்டு போறாங்க" - அதிகாரிகளின் அலட்சியத்தை மேடையிலேயே கிழித்து தொங்கவிட்ட விவசாயிகள்
சாகுபடி இலக்கை எட்ட ரெடியான மயிலாடுதுறை! விவசாயிகளுக்கு ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடுத்த முக்கிய அப்டேட்!
சாகுபடி இலக்கை எட்ட ரெடியான மயிலாடுதுறை! விவசாயிகளுக்கு ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடுத்த முக்கிய அப்டேட்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
CM VIJAY CABINET LIST : விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு.! மீறினால் அவ்வளவு தான்- எச்சரிக்கும் சுகாதாரத்துறை
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு.! மீறினால் அவ்வளவு தான்- எச்சரிக்கும் சுகாதாரத்துறை
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
Honda Livo பைக்கில் லாங் ட்ரிப் போலாமா? சென்னை டூ விருதுநகர் - ஓர் உண்மை அனுபவம்
Honda Livo பைக்கில் லாங் ட்ரிப் போலாமா? சென்னை டூ விருதுநகர் - ஓர் உண்மை அனுபவம்
Embed widget