மேலும் அறிய

ஈரப்பதத்தை மட்டும் பார்க்காதீங்க... சேதமான பயிர்களையும் பாருங்க: சித்திரக்குடி விவசாயிகள் வலியுறுத்தல்

சம்பா பயிர்களில் நெல்பழம் நோய் தாக்குதல் மற்றும் புகையான் தாக்குதல் காணப்பட்டது. காலை மற்றும் இரவு வேளையில் அதிகளவு பனிபெய்ததால் பயிர்கள் பாதிப்பை சந்தித்து வந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்துள்ள மத்திய குழுவினர் சித்திரக்குடி உட்பட பகுதியில் வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை பார்வையிட வேண்டும். பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை,  வைரப்பெருமாள் பட்டி, குணமங்கலம், சித்தாயல் உட்பட பகுதிகளில் விவசாயிகள் கோ-51, கோ-50 ரகங்களை சாகுபடி செய்திருந்தனர். இன்னும் இரண்டு வாரங்கள் சென்றால் அறுவடை செய்து விடலாம் என்ற நிலையில் பயிர்கள் வளர்ந்து இருந்தது. 


ஈரப்பதத்தை மட்டும் பார்க்காதீங்க... சேதமான பயிர்களையும் பாருங்க: சித்திரக்குடி விவசாயிகள் வலியுறுத்தல்

இந்நிலையில் கடந்த மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சம்பா பயிர்களில் நெல்பழம் நோய் தாக்குதல் மற்றும் புகையான் தாக்குதல் காணப்பட்டது. காலை மற்றும் இரவு வேளையில் அதிகளவு பனிபெய்ததால் பயிர்கள் பாதிப்பை சந்தித்து வந்தது.

இதற்கிடையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, வைரப்பெருமாள்பட்டி, குணமங்கலம், சித்தாயல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் ஏக்கருக்கு 10 மூட்டைகள் கூட தேறாத நிலை உள்ளது. பாதிக்கு பாதிக்கூட மகசூல் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் இப்பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சித்திரக்குடி கனகராஜன், கல்விராயன்பேட்டை ஊராட்சி முன்னாள் தலைவர்கள் வடிவேல், நம்பியார் ஆகியோர் தலைமையில் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே சித்திரக்குடி, வைரப்பெருமாள்பட்டி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், குணமங்கலம் பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையால் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா - தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் தொடர் மழையால் பயிர்கள் கருக்காவாக மாறிவிட்டது. இதனால் 80 சதவீதம் நெல் பயிர்கள் வீணாகி விட்டது. எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் இதனால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பின்னர் விவசாயிகள் கூறியதாவது: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் ஈரப்பதம் உயர்த்துவது தொடர்பாக இன்று டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு செய்கிறது. ஆனால் அதனை மட்டும் ஆய்வு செய்யாமல் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குறித்தும் கணக்கீடு செய்ய வேண்டும். அதற்கு வேளாண் துறை அதிகாரிகள் மத்திய குழுவை பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு அழைத்து சென்று காட்ட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பயிர் காப்பீடு ரூ. 35 ஆயிரம் முழுமையாக வழங்க வேண்டும். சம்பா சாகுபடியை முழுமையாக இப்பகுதி விவசாயிகள் இழந்துள்ளனர். ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள விவசாயிகளுக்கு இது மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Embed widget