மேலும் அறிய

இலக்கை தாண்டியது... ரூ.1,202 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது: என்ன தெரியுங்களா?

கொள்முதல் நிலையங்களில் தினமும் 1,200 டன் வரை சராசரியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கும் உரிய பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு இலக்கை தாண்டி நெல் கொள்முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,202 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். அதன்படி கடந்த ஆண்டு அணை குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்காமல் தாமதமாக ஜூலை மாதம் 28-ந்தேதி திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


இலக்கை தாண்டியது... ரூ.1,202 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது: என்ன தெரியுங்களா?

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணிகள் நிறவைடைந்துள்ளது. இதையடுத்து அரசும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் பணிகளை முடுக்கி விட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 597 நெல் கொள்முதல் நிலையஙக்ள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன.

நடப்பு ஆண்டு சம்பா, தாளடி பருவ கொள்முதல் டிசம்பர் மாதம் தொடஙக்கி அடுத்த மாதம் (மே) மாதம் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. தற்போது கொள்முதல் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் 4 லட்சத்து 93 ஆயிரம் டன் நெல் கொள்முதுல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்து 14 ஆயிரம் விவசாயிகளு்ககு ரூ.1,202 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மேலாளர் செல்வம் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடியில் நெல் விளைச்சல் அதிகளவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு 597 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்திற்கு சம்பா, தாளடி பருவத்தில் மட்டும் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 4 லட்சத்து 93 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


இலக்கை தாண்டியது... ரூ.1,202 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது: என்ன தெரியுங்களா?

இன்னும் இலக்கை எட்டுவதற்கு 7 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டி உள்ளது. இதுவும் சில நாட்களில் கொள்முதல் செய்யப்படும். தஞ்சை மாவட்டத்தில் அறுவடை பணிகள் முடிவடைந்து கொள்முதல் செய்யப்பட்ட இடங்களில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. தற்போது 139 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இந்த கொள்முதல் நிலையங்களில் தினமும் 1,200 டன் வரை சராசரியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கும் உரிய பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் 5.5 லட்சம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் 10 தாலுகாக்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகி்னறன. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகள் சம்பா, தாளடி இலக்கு 5 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டு இலக்கை நெல் கொள்முதல் எட்டியது. அதன் பின்னர் கடந்த ஆண்டு நெல் கொள்முதல் குறைந்தது. கடந்த ஆண்டு 3 லட்சத்து 63 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டு தற்போதே இலக்கை எட்டும் தருவாயில் உள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது வரை 1 லட்சத்து 30 ஆயிரம் டன் வரை நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு மானியம்: தொழில்முனைவோர் உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு மானியம்: தொழில்முனைவோர் உடனே விண்ணப்பிக்கலாம்!
கடைமடையில் காவிரி! கொண்டாட்டம் ஒரு பக்கம்... பெரும் கவலை மறுபக்கம்!
கடைமடையில் காவிரி! கொண்டாட்டம் ஒரு பக்கம்... பெரும் கவலை மறுபக்கம்!
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்... விவசாயிகளே உஷார்... உஷார்: மழையில்லாததால் அதிகரிக்கும் பாதிப்பு
தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள்... விவசாயிகளே உஷார்... உஷார்: மழையில்லாததால் அதிகரிக்கும் பாதிப்பு
கண்டிதம்பட்டு விவசாயிகளை கண்டுக்கொள்ளுமா அரசு? கண்ணீருடன் காத்திருப்பு
கண்டிதம்பட்டு விவசாயிகளை கண்டுக்கொள்ளுமா அரசு? கண்ணீருடன் காத்திருப்பு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Enquiry: 246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Trump Vs Iran: ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
TVS Orbiter on EMI: குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
Maruti Dzire CNG AMT: இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
Karuppu Muruganandam : ’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
Embed widget