மேலும் அறிய

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள்; தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு

வடபாதிமங்கலம் என்ற இடத்தில் வேளாண் ஆணையர் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள விவசாயிகள் அவரிடம் எங்கள் பகுதியில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது என குற்றம் சாட்டினர்

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள் குறித்து தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
 
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேரடி விதைப்பில் 62,000 ஏக்கர் பரப்பளவிலும் நடவுப் பணிகளில் ஒரு லட்சத்து ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவிலும் விவசாயிகள் தற்பொழுது தங்களது நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை 80 ஆயிரம் ஏக்கர் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 93 ஆயிரம் ஏக்கர் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் தற்பொழுது நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனயர். இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடிகள் தண்ணீரில் இல்லாமல் கருகி வருகிறது. மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. தமிழக அரசின் அறிவிப்பை ஏற்று, நிகழாண்டில் டெல்டா மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். இந்த நிலையில், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் திறக்கப்பட்ட 10 நாட்களுக்குள்ளாகவே அணை மூடப்பட்டது.

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள்; தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு
 
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், கடை மடை வரை சென்று கிளை வாய்க்காலில் வழியாக வயல்களுக்கு ஏறி பாயாத நிலையில், தண்ணீர் இன்றி குறிவை நெற்பயிர்கள் முளைத்த நிலையிலேயே காயத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது பெய்த சிறு மழை உயிர்நீராக அமைந்ததால், குறுவை சாகுபடி நெற்பயிர்கள் ஆங்காங்கே தப்பி பிழைத்துள்ளன. இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் தர கர்நாடக அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள், காய்ந்து வருகின்ற குறுவை நெற்பயிர்களை வளர்த்தெடுத்து அறுவடை செய்ய முடியுமா என்றும், சம்பா சாகுபடியையாவது செய்ய முடியுமா என்ற அச்சத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், காய்ந்து வரும் குருவை நெற்பயிர்களுக்கு விவசாயிகள் நிவாரணம் கேட்கத் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை ஆணையர் எல். சுப்பிரமணியன் இன்று திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி நெற்பயிர்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய வருகை தந்துள்ளார்.
 
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த அவர், திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை, கோட்டூர் வட்டாரங்களிலும் ஆய்வு செய்ய உள்ளார். அருகில் உள்ள நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சுவதற்கான சாத்தியங்கள், பயிர்கள் தொடர்ச்சியாக காய்ந்து போகாமல் இருக்க அடிக்க வேண்டிய ஸ்பிரேயர்கள் போன்றவை குறித்து களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை செய்தார்.

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள்; தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு
 
இந்த நிலையில் வடபாதிமங்கலம் அருகே ஓவை பேரையூர் என்ற இடத்தில் வேளாண் ஆணையர் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள விவசாயிகள் அவரிடம் எங்கள் பகுதியில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது என குற்றம் சாட்டினர் உடனடியாக அந்தப் பகுதிக்கு வேளாண் ஆணையர் சென்று ஆய்வு செய்தார். வேளாண்துறை ஆணையரின் இந்த ஆய்வு காவிரி டெல்டா விவசாயிகளிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur President's Rule: கவிழ்ந்தது பாஜக ஆட்சி:  மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
கவிழ்ந்தது பாஜக ஆட்சி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | GingeeChiranjeevi Controversy | TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur President's Rule: கவிழ்ந்தது பாஜக ஆட்சி:  மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
கவிழ்ந்தது பாஜக ஆட்சி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதாலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ!
ஹேப்பி நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! இந்த ஆண்டு இறுதிக்குள் பூந்தமல்லி–போரூர் இடையே மெட்ரோ!
New Income Tax Bill 2025: மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
MOTN Survey: தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.