மேலும் அறிய

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள்; தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு

வடபாதிமங்கலம் என்ற இடத்தில் வேளாண் ஆணையர் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள விவசாயிகள் அவரிடம் எங்கள் பகுதியில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது என குற்றம் சாட்டினர்

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள் குறித்து தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
 
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேரடி விதைப்பில் 62,000 ஏக்கர் பரப்பளவிலும் நடவுப் பணிகளில் ஒரு லட்சத்து ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவிலும் விவசாயிகள் தற்பொழுது தங்களது நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை 80 ஆயிரம் ஏக்கர் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 93 ஆயிரம் ஏக்கர் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் தற்பொழுது நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனயர். இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடிகள் தண்ணீரில் இல்லாமல் கருகி வருகிறது. மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. தமிழக அரசின் அறிவிப்பை ஏற்று, நிகழாண்டில் டெல்டா மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். இந்த நிலையில், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் திறக்கப்பட்ட 10 நாட்களுக்குள்ளாகவே அணை மூடப்பட்டது.

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள்; தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு
 
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், கடை மடை வரை சென்று கிளை வாய்க்காலில் வழியாக வயல்களுக்கு ஏறி பாயாத நிலையில், தண்ணீர் இன்றி குறிவை நெற்பயிர்கள் முளைத்த நிலையிலேயே காயத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது பெய்த சிறு மழை உயிர்நீராக அமைந்ததால், குறுவை சாகுபடி நெற்பயிர்கள் ஆங்காங்கே தப்பி பிழைத்துள்ளன. இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் தர கர்நாடக அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள், காய்ந்து வருகின்ற குறுவை நெற்பயிர்களை வளர்த்தெடுத்து அறுவடை செய்ய முடியுமா என்றும், சம்பா சாகுபடியையாவது செய்ய முடியுமா என்ற அச்சத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், காய்ந்து வரும் குருவை நெற்பயிர்களுக்கு விவசாயிகள் நிவாரணம் கேட்கத் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை ஆணையர் எல். சுப்பிரமணியன் இன்று திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி நெற்பயிர்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய வருகை தந்துள்ளார்.
 
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த அவர், திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை, கோட்டூர் வட்டாரங்களிலும் ஆய்வு செய்ய உள்ளார். அருகில் உள்ள நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சுவதற்கான சாத்தியங்கள், பயிர்கள் தொடர்ச்சியாக காய்ந்து போகாமல் இருக்க அடிக்க வேண்டிய ஸ்பிரேயர்கள் போன்றவை குறித்து களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை செய்தார்.

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள்; தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு
 
இந்த நிலையில் வடபாதிமங்கலம் அருகே ஓவை பேரையூர் என்ற இடத்தில் வேளாண் ஆணையர் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள விவசாயிகள் அவரிடம் எங்கள் பகுதியில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது என குற்றம் சாட்டினர் உடனடியாக அந்தப் பகுதிக்கு வேளாண் ஆணையர் சென்று ஆய்வு செய்தார். வேளாண்துறை ஆணையரின் இந்த ஆய்வு காவிரி டெல்டா விவசாயிகளிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

நெல், கரும்பை ஓவர்டேக் செய்த கொய்யா! - விழுப்புரத்தில் கலக்கும் 'தைவான் பிங்க்' சாகுபடி!
நெல், கரும்பை ஓவர்டேக் செய்த கொய்யா! - விழுப்புரத்தில் கலக்கும் 'தைவான் பிங்க்' சாகுபடி!
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தினசரி அறுவடை... தடையற்ற வருமானம்! பல பயிர் சாகுபடியால் குவியும் லாபம் - கலக்கும் விழுப்புரம் விவசாயி
தினசரி அறுவடை... தடையற்ற வருமானம்! பல பயிர் சாகுபடியால் குவியும் லாபம் - கலக்கும் விழுப்புரம் விவசாயி
விவசாயிகளின் குரல் ஆட்சியரின் செவிகளுக்கு! நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் எப்போது தெரியுமா..?
விவசாயிகளின் குரல் ஆட்சியரின் செவிகளுக்கு! நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் எப்போது தெரியுமா..?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget