மேலும் அறிய

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள்; தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு

வடபாதிமங்கலம் என்ற இடத்தில் வேளாண் ஆணையர் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள விவசாயிகள் அவரிடம் எங்கள் பகுதியில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது என குற்றம் சாட்டினர்

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள் குறித்து தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
 
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேரடி விதைப்பில் 62,000 ஏக்கர் பரப்பளவிலும் நடவுப் பணிகளில் ஒரு லட்சத்து ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவிலும் விவசாயிகள் தற்பொழுது தங்களது நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை 80 ஆயிரம் ஏக்கர் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 93 ஆயிரம் ஏக்கர் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் தற்பொழுது நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனயர். இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடிகள் தண்ணீரில் இல்லாமல் கருகி வருகிறது. மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டது. தமிழக அரசின் அறிவிப்பை ஏற்று, நிகழாண்டில் டெல்டா மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். இந்த நிலையில், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் திறக்கப்பட்ட 10 நாட்களுக்குள்ளாகவே அணை மூடப்பட்டது.

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள்; தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு
 
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், கடை மடை வரை சென்று கிளை வாய்க்காலில் வழியாக வயல்களுக்கு ஏறி பாயாத நிலையில், தண்ணீர் இன்றி குறிவை நெற்பயிர்கள் முளைத்த நிலையிலேயே காயத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது பெய்த சிறு மழை உயிர்நீராக அமைந்ததால், குறுவை சாகுபடி நெற்பயிர்கள் ஆங்காங்கே தப்பி பிழைத்துள்ளன. இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் தர கர்நாடக அரசு தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள், காய்ந்து வருகின்ற குறுவை நெற்பயிர்களை வளர்த்தெடுத்து அறுவடை செய்ய முடியுமா என்றும், சம்பா சாகுபடியையாவது செய்ய முடியுமா என்ற அச்சத்துக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், காய்ந்து வரும் குருவை நெற்பயிர்களுக்கு விவசாயிகள் நிவாரணம் கேட்கத் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை ஆணையர் எல். சுப்பிரமணியன் இன்று திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி நெற்பயிர்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய வருகை தந்துள்ளார்.
 
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த அவர், திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை, கோட்டூர் வட்டாரங்களிலும் ஆய்வு செய்ய உள்ளார். அருகில் உள்ள நீர்நிலைகளிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சுவதற்கான சாத்தியங்கள், பயிர்கள் தொடர்ச்சியாக காய்ந்து போகாமல் இருக்க அடிக்க வேண்டிய ஸ்பிரேயர்கள் போன்றவை குறித்து களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை செய்தார்.

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்கள்; தமிழக வேளாண்துறை ஆணையர் நேரில் ஆய்வு
 
இந்த நிலையில் வடபாதிமங்கலம் அருகே ஓவை பேரையூர் என்ற இடத்தில் வேளாண் ஆணையர் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது அருகில் உள்ள விவசாயிகள் அவரிடம் எங்கள் பகுதியில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது என குற்றம் சாட்டினர் உடனடியாக அந்தப் பகுதிக்கு வேளாண் ஆணையர் சென்று ஆய்வு செய்தார். வேளாண்துறை ஆணையரின் இந்த ஆய்வு காவிரி டெல்டா விவசாயிகளிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ukraine's Planned Attack: ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine's Planned Attack: ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
ட்ரக்கில் பயணித்த ட்ரோன்கள்; சீக்ரெட் ஆபரேஷன் ‘Spider's Web‘ - ரஷ்யாவுக்கே பாயசம் போட்ட உக்ரைன்
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
TVK Vijay: ஒரு பக்கம் ஜனநாயகன்.. மறுபக்கம் தவெக! பிறந்த நாளில் டபுள் ட்ரீட் தரப்போகும் விஜய்?
Poonamallee-Paranthur Metro: பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
பூந்தமல்லி சுற்றுவட்டார மக்களுக்கு குதூகலமான செய்தி; வருது பரந்தூர் மெட்ரோ - முழு விவரம்
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
IPL Final RCB vs PBKS: ஐபிஎல் கோப்பை யாருக்கு? இவர்கள் கையில்தான் சாம்பியன் பட்டம் இருக்கு!
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
NEET PG 2025 Exam: குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்; தள்ளிப்போன நீட் முதுகலைத் தேர்வு- எப்போது தெரியுமா?
Gold Rate 2nd June: மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
மீண்டும் வேலையை காட்டிய தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா.? இன்றைய நிலவரம்
Sellur Raju on DMK: போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
IPL Final RCB vs PBKS: 18 ஆண்டு தவம்.. ஆர்சிபி - பஞ்சாப் இதுவரை எப்படி? ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
Embed widget