மேலும் அறிய
சிவகங்கை: மீன் வளர்ப்பு குளங்கள் மானியத்துடன் அமைக்கலாம்.. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு !
சிவகங்கையில் மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க வேண்டுமா? ஆட்சியரின் அறிவிப்பு, மானியத்துடன் கூடிய அரிய வாய்ப்பு. - முழு விவரம்.

மீன் வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தகவல்.
புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் (2023-2024) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படவுள்ளது. அதில், புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டமானது (2023-2024) பொதுப்பிரிவின் கீழ்–1 ஹெக்டேருக்கு 40% மானியத்தில், ஒரு அலகிற்கான விலை – 7.0 இலட்சம், ஹெக்டேர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்படுத்தப்படவுள்ளது.
எவ்வாறு விண்ணப்பம் செய்வது
எனவே, புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நபர்கள் 5/3, யூனியன் வங்கி மாடியில், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை – 630561 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு மீன்வள ஆய்வாளர் அவர்களை 9384824553 என்ற அலைபேசி எண்ணிலும், மீன்வள மேற்பார்வையாளர் தரம் II அவர்களை 9790656919 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்” - என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















