PM Kisan scheme: விவசாயிகளே மே 31 கடைசி தேதி... வருடம் 6000 ரூபாய்.. செய்ய வேண்டியது என்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பி.எம்.கிசான் திட்டம் மே 31 வரை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது

பி.எம்.கிசான் திட்டம் மே 31 வரை சிறப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர கலைச்செல்வி மோகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய்
பி.எம்.கிசான் திட்டத்தில் நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 வீதம் மூன்று தவணைகளாக வருடத்திற்கு ரூ.6000 விவசாய குடும்பங்களுக்கு விவசாய இடுபொருட்கள் வாங்குவதற்காக வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு முகாம்
இத்திட்டத்தில் பயனடைய பயனாளிகளின் நில ஆவணங்கள் பதிவேற்றம், eKYC, வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைத்தல் மற்றும் விவசாயி நில உடைமை பதிவு (Farmers Registry) ஆகிய பணிகளை முடித்திருத்தல் அவசியமாகும். மேற்கூறிய பணிகளை முடிப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் பொது சேவை மையங்களில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
முகாம் நடைபெறும் நாட்கள்
மேலும் இம்முகாம் மே 31 வரை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1844 பயனாளிகள் eKYC முடிக்காமலும், 1152 பயனாளிகள் ஆதார் எண்ணுடன் வங்கிக்கணக்கு இணைக்காமலும், 213 பயனாளிகள் நில ஆவணங்கள் பதிவேற்றாமலும், 5424 பயனாளிகள் நில உடைமைக்கான பதிவு முடிக்காமலும் உள்ளனர்.
மேற்கூறிய பணிகளை முறையாக முடித்தால் மட்டுமே பி.எம்.கிசான் உதவித்தொகை தொடர்ந்து பெற இயலும். எனவே, அனைத்து விவசாயிகளும் மேற்கூறிய பணிகளில் ஏதேனும் முடிக்காமல் இருப்பின் பி.எம்.கிசான் திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்.





















