மேலும் அறிய

அரசு அறிவித்துள்ளதை விட கூடுதலாக பயிர்கள் பாதிப்படைந்துள்ளன - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

அரசு அறிவித்துள்ளதை விட கூடுதலாக பயிர்கள் பாதிப்படைந்துள்ளது - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சீர்காழியில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.சீனிவாசன் தலைமை நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, முன்னாள் எம்.எல்.ஏவும், விவசாயிகள் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினருமான கே.உலகநாதன், மாவட்ட விவசாய சங்கச் செயலாளர் வீரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


அரசு அறிவித்துள்ளதை விட கூடுதலாக பயிர்கள் பாதிப்படைந்துள்ளன - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

கூட்டத்துக்குப் பின்னர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்த்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தோம். அது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். தற்போது பெய்த மழையில் மாவட்டத்தில் 3 வட்டாரங்களில் 2,838 ஹெக்டேர் பயிர் பாதிப்பு, 150 வீடுகள் பாதிப்பு, 39 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக என அரசு சொல்லியிருக்கிறது. ஆனால், இன்னும் கூடுதல் பாதிப்பு உள்ளது. மழையால் மட்டும் அல்ல, மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டாலும், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முழுமையாக தண்ணீர் வந்து சேராதாதலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


அரசு அறிவித்துள்ளதை விட கூடுதலாக பயிர்கள் பாதிப்படைந்துள்ளன - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

மயிலாடுதுறை மாவட்டம் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கடந்த 2022-23 -ல் தமிழக முதல்வர் இப்பகுதிகளை பார்வையிட்டு உரிய உதவிகள் செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால், குறைந்தபட்ச நிவாரணத்தை அறிவித்து, பின்னர் பேரிடர் பாதிப்பின் அடிப்படையில் காப்பீட்டு இழப்பீடு கிடைக்கும் என்று சொன்னார். நிகழாண்டு காப்பீட்டு திட்டத்தை அறிவிக்கும்போது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான காப்பீட்டு திட்டமா? கம்பெனிகளுக்கு லாபம் அளிக்கும் திட்டமா? என்ற கேள்வி எழுகிறது. ஆகவே காப்பீட்டு திட்டத்தைச் சொல்லி அரசு தட்டிக் கழிக்க கூடாது. எனவே பாதிப்புகள் குறித்து உரிய வகையில் கணக்கிட்டு, உரிய உதவிகளை செய்ய வேண்டும்.


அரசு அறிவித்துள்ளதை விட கூடுதலாக பயிர்கள் பாதிப்படைந்துள்ளன - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் நிறுவனத்துக்காக அரசு நிலம் கையகப்படுத்துதலைக் கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். 20 விவசாயிகள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது குண்டர் தடுப்பச் சட்டத்தை ஏவுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? விவசாயிகள் தங்கள் நிலம், மண் பறிபோகும்போது அதற்கு எதிரக குரல் எழுப்புகிறார்கள். அவர்களுக்கு உதவியாக அரசு இருப்பதற்கு பதிலாக, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்தி வெளியேற்றுவது என்பது என்ன முறை?


அரசு அறிவித்துள்ளதை விட கூடுதலாக பயிர்கள் பாதிப்படைந்துள்ளன - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தபோதே, அதனை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்த்தது. அந்த சட்டப்படி எவ்வித கேள்வியுமின்றி 100 ஏக்கருக்கும் மேல் நிலங்களை எடுக்கலாம் என்ற திட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், மனிதாபிமானமற்ற முறையில் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு இயந்திரங்களை நம்பி, இந்த அரசு பழிச்சொல்லுக்கு ஆளாகக் கூடாது என முதல்வரை கேட்டுக் கொள்கிறோம். முதல்வர் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று பரிசீலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் செலுத்துவதற்கான தேதியை இந்த மாத இறுதி வரை நீட்டிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கான நிவாரண உதவிகளை முறையாக அறிவித்து தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Ticket Price: இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது - எந்த ரயிலில் அதிகபட்சம்? கிலோ மீட்டருக்கு எவ்வளவு?
Train Ticket Price: இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது - எந்த ரயிலில் அதிகபட்சம்? கிலோ மீட்டருக்கு எவ்வளவு?
செங்கோட்டையன் மூலம் வலைவீசும் விஜய்.. தவெக-விற்கு தாவுவார்களா முக்கிய அரசியல் புள்ளிகள்?
செங்கோட்டையன் மூலம் வலைவீசும் விஜய்.. தவெக-விற்கு தாவுவார்களா முக்கிய அரசியல் புள்ளிகள்?
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
ABP Premium

வீடியோ

Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?
Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Ticket Price: இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது - எந்த ரயிலில் அதிகபட்சம்? கிலோ மீட்டருக்கு எவ்வளவு?
Train Ticket Price: இன்று முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது - எந்த ரயிலில் அதிகபட்சம்? கிலோ மீட்டருக்கு எவ்வளவு?
செங்கோட்டையன் மூலம் வலைவீசும் விஜய்.. தவெக-விற்கு தாவுவார்களா முக்கிய அரசியல் புள்ளிகள்?
செங்கோட்டையன் மூலம் வலைவீசும் விஜய்.. தவெக-விற்கு தாவுவார்களா முக்கிய அரசியல் புள்ளிகள்?
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
இனி நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆளை மாத்த முடியாது; 2 கட்ட சரிபார்ப்பு- லைவ் போட்டோ, முக பயோமெட்ரிக் கட்டாயம்!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிப்பதா? அரசுப் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நிவாரணம் அளிக்க வேண்டுகோள்!!
Urine Infection: உங்க சிறுநீர் இந்த கலரில் இருந்தால் ஆபத்து.. உடனே செக் பண்ணுங்க!
Urine Infection: உங்க சிறுநீர் இந்த கலரில் இருந்தால் ஆபத்து.. உடனே செக் பண்ணுங்க!
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
Hyundai Exter vs Maruti Suzuki Fronx இரண்டில் எது பெஸ்ட் கார்? இதோ கம்பேரிசன்
Hyundai Exter vs Maruti Suzuki Fronx இரண்டில் எது பெஸ்ட் கார்? இதோ கம்பேரிசன்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
Embed widget