மேலும் அறிய

அறுவடை செய்த நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள் - மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் வேதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் பல நாட்களாக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்கப்படாதது, பயிர்களுக்கு தேவையான நேரத்தில் மழை இன்றி அறுவடை செய்யும் சமயத்தில் மழைப்பொழிவு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் சூழல் என பல்வேறு மின்னல்களுக்கு இடையே இம் மாவட்ட விவசாயிகள் தங்களின் வாழ்வாதார காக்க விவசாயத்தை நம்பி செய்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தாண்டு மயிலாடுதுறை , தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய மூன்று தாலுக்காகளில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்தனர்.


அறுவடை செய்த நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள் - மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் வேதனை

அதில் அறுவடை சமயத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் நெல்மணிகள் மழை நீரில் மூழ்கி சேதமானது. இவற்றுக்கு கணக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் அதற்கான நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் அறுவடை தொடங்கிய உடனே மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் நூற்றுக்கும் அதிகமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அறுவடையில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்டத்தில் தேவையான அளவு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் நாள் கணக்கில் காத்துக் கிடக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


அறுவடை செய்த நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள் - மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் வேதனை

கடந்த ஜனவரி 22 -ம் தேதி காலகஸ்திநாதபுரத்தில் ஒரு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாவட்டத்தில் முதல் கட்டமாக 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும், தேவைக்கேற்ப படிப்படியாக கொள்முதல் நிலையங்கள் அதிகப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சீர்காழி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இதுநாள் வரை திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்மூட்டைகளுடன் கடந்த 15 நாட்களுக்கு  மேலாக விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் அவலநிலை தள்ளப்பட்டுள்ளனர். சீர்காழி, கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, எடகுடிவடபாதி, திட்டை, செம்மங்குடி, கடவாசல், ஆர்ப்பாக்கம், அத்தியூர் உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மேட்டூர் பாசன தண்ணீர் கடைமடைக்கு திறந்துவிடாத நிலையில் பம்புசெட், மழைநீரை நம்பி சாகுபடி செய்திருந்தனர்.


அறுவடை செய்த நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள் - மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் வேதனை

கடந்த சில வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது.  நெல்வயலில் தேங்கிய மழைநீர் வடியாமல் மோட்டார் வைத்து அதனை இரைக்கும் பணியையும் கூடுதல் செலவு செய்து விவசாயிகள் மேற்கொண்டனர். இதனிடையே கனமழையால் பாதிக்கப்பட்டது போக எஞ்சிய சம்பா நெற் பயிர்களை கடந்த 15 தினங்களுக்கு மேலாக சீர்காழி, கொள்ளிடம் வட்டாரத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று அடுக்கிவைத்து விவசாயிகள் இரவு, பகலாக காத்திருந்து நெல்மூட்டைகளை பாதுகாத்து வருகின்றனர்.



அறுவடை செய்த நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள் - மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் வேதனை

இதுவரை நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள் நெல் மூட்டைகளை பனி, வெயில் ஆகியவற்றால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பொருளாதார நெருக்கடியால் கடனுக்கு நெல்லை வியாபாரிகளிடம் விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில விவசாயிகளிடம் போதிய அளவு தார்பாய், சாக்குபைகள், படுதா இல்லாததால் அறுவடை செய்யும் பணியை தள்ளி வைத்துள்ளது. மேலும் சில விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை வீட்டில் கொட்டிவைத்துள்ளனர்.  இதனால் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து நெல்மூட்டைகளை கொள்முதல் செய்திடவேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget