மேலும் அறிய

Ditwah cyclone: திமுக ஆட்சியில் விவசாயம் செய்வது கடினம் - விவசாயிகள் குமுறல்..!

இக்கட்டான நிலையில், நீரில் மூழ்கி அழுகிய பயிர்களைப் பார்வையிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலோ, உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என எவருமோ முன்வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த டித்வா புயலின் கோரத் தாண்டவத்தால், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் விளைவாக, அரசுப் புள்ளிவிவரங்களின்படி சுமார் 22,000 ஏக்கர் பரப்பளவிலான சம்பா பருவப் பயிர்கள் முழுவதுமாக மழை வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதமடைந்துள்ளன. இந்த இழப்பு, ஏற்கனவே அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த இரு மழை வெள்ளங்களால் பயிர்களை இழந்த நிலையில், மிகுந்த பொருட்செலவில் மூன்றாவது முறையாகப் பயிர் செய்த விவசாயிகளின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது.

வடிந்து செல்லாத வெள்ளம்

தற்போது மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்தாலும், ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், விளைநிலங்களில் தேங்கியுள்ள நீர் வடிந்து செல்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் ₹ 30,000 வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ள நிலையில், பயிர்கள் தண்ணீரில் அழுகி, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அலட்சியத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்

இத்தகைய இக்கட்டான நிலையில், நீரில் மூழ்கி அழுகிய பயிர்களைப் பார்வையிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலோ, உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் எவருமோ முன்வரவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டைப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் முன்வைக்கின்றனர்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஆனந்ததாண்டவபுரம் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டெல்டா விவசாயிகளின் துயரத்தைக் கேட்டறிய மாவட்ட நிர்வாகம், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் என எவருமே களத்திற்கு வரவில்லை. இதைவிட வேதனை என்னவென்றால், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் கூட பாதிக்கப்பட்ட விவசாயிகளை வந்து பார்வையிடவில்லை என்பது அரசின் விவசாயிகளின் மீதான அலட்சியப் போக்கையே காட்டுகிறது," என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

11 மாதமாக நிலுவையில் கடந்த கால நிவாரணம்!

விவசாயிகளின் இந்த துயரத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், கடந்த கால மழை வெள்ள நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் அன்பழகன் அம்பலப்படுத்தினார்.

"கடந்த ஜனவரி மாதம் அறுவடை நேரத்தில் பருவம் தவறிப் பெய்த கனமழையால் சுமார் 60,000 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டன. அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூபாய் 63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால், அறிவித்து 11 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், அந்த நிவாரணத் தொகை இன்னும் விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை," என அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியில் விவசாயம் செய்வது கடினம்

தி.மு.க.வின் நான்கு ஆண்டுகால ஆட்சியில், இதுவரை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகை (இன்சூரன்ஸ்) வழங்குவதில் பெரிய பலன் எதுவும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

"காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. பயிர் செய்த பின் கிடைக்கும் வருமானத்தை விட, இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் நஷ்டமே அதிகம். இந்த அரசு விவசாயிகளைப் புறக்கணித்து விட்டதா? என்ற எண்ணமே தோன்றுகிறது. இதற்கு முன்னர் இருந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், பேரிடர் காலங்களில் உரிய நிவாரணமும் உடனடியாக வழங்கப்பட்டது," என்று அவர் சுட்டிக் காட்டினார்.

உடனடியாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஆனந்ததாண்டவபுரம் அன்பழகன், தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தத் தொடர் இழப்புகளால் சோர்வடைந்துள்ள டெல்டா விவசாயிகள், இனிமேல் விவசாயம் செய்வதா? அல்லது வேறு தொழிலுக்குச் செல்வதா என்று தெரியாமல் செய்வதறியாது திகைத்து நிற்பதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
Iran Earthquake: அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
அமெரிக்கா தான் இப்படி பண்ணுதுன்னா, இயற்கையுமா.? போருக்கு மத்தியில் நிலநடுக்கத்தால் குலுங்கிய ஈரான்
iPhone 17e Review: இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
இந்தியாவிற்கு வந்த ஐபோன் 17இ; அது எப்படி இருக்கிறது.? வாங்கலாமா, வேண்டாமா.? அலசுவோம் வாங்க
மீண்டும் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; எங்கே? ஏன்? மாணவர்கள் வேதனை!
மீண்டும் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; எங்கே? ஏன்? மாணவர்கள் வேதனை!
Embed widget