மேலும் அறிய

மழை பாதிப்புகளை தொடர்ந்து அடுத்த பிரச்சினையில் விவசாயிகள் - தப்பிக்க வழி சொல்லும் வேளாண் அதிகாரிகள்

தொடர் மழை, இரவில் வெப்ப நிலை குறைவாகவும், மந்தமான சூரிய வெளிச்சம் இருப்பதினால் நெற்பயிரை புகையான் பூச்சிகள் தாக்க வாய்ப்புகள் அதிக உள்ளதாக விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து இரவில் வெப்ப நிலை குறைவாகவும், மந்தமான சூரிய வெளிச்சம் இருப்பதினால் நெற்பயிர்கள் புகையான் பூச்சிகள் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிக உள்ளதாகவும், அதனை தடுக்க விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளார். 

வடகிழக்கு பருவமழை 

தமிழகத்தில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி தீவிரமடைந்து வரும் நிலையில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதை விட்டு, நாற்று வளர்த்து நடவு செய்த நெற்பயிர்கள் வளர்ந்து பால் வைக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், புகையான் பூச்சி தாக்குதல் பெருமளவு நெற்கதிர்களை பாதித்து வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவு இழப்பு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. இந்த வகையான புகையான் பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் ஆனந்தி ஆகியோர் விளக்கம் அளித்து ஆலோசனை வழங்கியுள்ளனர்.


மழை பாதிப்புகளை தொடர்ந்து அடுத்த பிரச்சினையில் விவசாயிகள் - தப்பிக்க வழி சொல்லும் வேளாண் அதிகாரிகள்

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய செய்தி குறிப்பு 

புகையான் பூச்சி தாக்குதல் குறித்து தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது. "கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், இரவில் வெப்ப நிலை குறைவாகவும், மந்தமான சூரிய வெளிச்சம் இருப்பதினால் நெற்பயிரை புகையான் பூச்சிகள் தாக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது. இந்த பூச்சி தனது இளநிலை பருவங்கள் - வளர்ந்த பூச்சி பருவங்களில் கூட்டம், கூட்டமாக நெற்பயிரின் தூர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு தன் ஊசி போன்ற வாயால் பயிரின் சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் பயிரின் வளர்ச்சி தடைபடுகின்றது. இப்பூச்சியின் தாக்குதலால் பயிர் திட்டுத்திட்டாக வட்ட வடிவில் காயத்தொடங்கி, பிறகு வயல் முழுவதுமுள்ள நெற்பயிர்கள் வாடிக் காய்ந்துவிடும்.


மழை பாதிப்புகளை தொடர்ந்து அடுத்த பிரச்சினையில் விவசாயிகள் - தப்பிக்க வழி சொல்லும் வேளாண் அதிகாரிகள்

பாசன நீரின் மூலம் பரவும் பூச்சிகள் 

வயலில் தண்ணீர் தேங்கியிருக்கின்ற இடங்களிலும் இப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக தென்படும். இப்பூச்சியின் தாக்குதல் பயிர் நன்கு தூள்கட்டும் நிலையிலிருந்து மணி பிடித்து முற்றும் வரையில் அதிகம் உண்டாகிறது. பாதிக்கப்பட்ட வயல்களில் ஆங்காங்கே வட்ட வட்டமாக புகைத்தது போல காணப்படும். இந்த தாக்குதல் பாசன நீரின் மூலம் பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 


மழை பாதிப்புகளை தொடர்ந்து அடுத்த பிரச்சினையில் விவசாயிகள் - தப்பிக்க வழி சொல்லும் வேளாண் அதிகாரிகள்

300 முட்டைகள் வரை இடும் பூச்சிகள் 

மேலும், முதுநிலையடைந்த தாய்ப் பூச்சிகள் ஒவ்வொன்றும் 200- 300 முட்டைகளை இலைத்தாளுக்குள் இடும். பயிரின் வளர்ச்சிக் காலத்தில் சாதாரணமாக இப்பூச்சியின் மூன்று தலைமுறைகள் தோன்றி சேதத்தை ஏற்படுத்துகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த பூச்சிகளில் இறக்கையுடையவை மற்றும் இறக்கையற்றவை என்று இரண்டு வகை உண்டு. பயிர் சேதமடைந்து காய்ந்து விட்ட நிலையில் இறக்கையுடைய பூச்சிகள் தோன்றுகின்றன. தாக்கப்பட்ட வயல் காய்ந்து விட்ட நிலையில் இவை மற்ற வயல்களுக்கு பாசன நீரின் மூலம் பரவும். 


மழை பாதிப்புகளை தொடர்ந்து அடுத்த பிரச்சினையில் விவசாயிகள் - தப்பிக்க வழி சொல்லும் வேளாண் அதிகாரிகள்

புகையான் பூச்சிகளை எப்படி கட்டுப்படுத்தலாம்?

வயலில் விளக்குப்பொறி அமைத்து புகையான் பூச்சிகளின் நட மாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம். தேவைக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சு வதை தவிர்க்கவும், வயலில் நன்றாக தண்ணீர் வடிந்த பிறகு மருந்து தெளிக்கவேண்டும். வயலில் ஒரு அங்குல உயரத்திற்கு மேல் நீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண் டும். தேவைப்பட்டால் நீரை வடித்துப் பாய்ச்சலாம். புகையான் தாக்குதல் தெரிந்தால், அதிக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மழை பாதிப்புகளை தொடர்ந்து அடுத்த பிரச்சினையில் விவசாயிகள் - தப்பிக்க வழி சொல்லும் வேளாண் அதிகாரிகள்

தாக்குதல் நடந்த வயல்களில் தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்த்து விட்டு, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் பிவேரியா பேசியானா, மெட்டா ரைசியம் அனிசோபிலே மற்றும் பண்புரிசிலியம் லில்லேசினம் ஆகிய பூஞ்சைகளில் ஏதேனும் ஒன்றினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலம் வயலின் அனைத்து பகுதிகள் மற்றும் வரப்பு, வாய்க்கால்கள் முழு வதும் நனையும்படி தெளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
விளைச்சல் தந்த வேதனை: விலையின்றி மரங்களிலேயே அழுகும் மாங்காய்கள் – கண்ணீரில் கும்பகோணம் விவசாயிகள்!
விளைச்சல் தந்த வேதனை: விலையின்றி மரங்களிலேயே அழுகும் மாங்காய்கள் – கண்ணீரில் கும்பகோணம் விவசாயிகள்!
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை: அன்புமணி வலியுறுத்தல்!
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை: அன்புமணி வலியுறுத்தல்!
நெல் சாகுபடி செஞ்சா ரூ. 5 லட்சமா? விவசாயிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரி – முழு விவரம் உள்ளே!
நெல் சாகுபடி செஞ்சா ரூ. 5 லட்சமா? விவசாயிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரி – முழு விவரம் உள்ளே!

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
Kawasaki KLX230S: ஆன்ரோடு, ஆஃப்ரோடு காதலர்களே.. கவாஸாகி KLX230S இந்தியாவில் அறிமுகம்: விலை, உயரம், சிறப்பம்சங்கள்
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Embed widget