மேலும் அறிய
மதுரை ஆலமரத்தின் 107வது பிறந்தநாள்: பாதுகாப்புக்கு விழிப்புணர்வு தேவை!
நாட்டின் தேசிய மரமான ஆலமரத்திற்கு 107 ஆவது பிறந்தநாள் விழா - மதுரையில் கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள் இயற்கை ஆர்வலர்கள்

ஆலமரம்
Source : whatsapp
ஆலமரத்தைச் சுற்றி குப்பைகளை கொட்டி எரிப்பதால் மரம் பாதிக்கப்படுகிறது., விழா காலங்களில் வெடி வெடிப்பதால் மரத்தில் உள்ள அரிய வகை பறவைகள் வருவதில்லை இல்லை என இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் - பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை என வேண்டுகோள்.
ஒரு ஆலமரம் மட்டும் நூறு ஆண்டுகளை கடந்து
மதுரை மாநகர் மீனாட்சிபுரம் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் 7-க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் வளர்ந்திருந்தது. இவைகள் சாலைகள் விரிவாக்கம் மற்றும் பூங்கா அமைப்பு காரணமாக அகற்றப்பட்டது. இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரே ஒரு ஆலமரம் மட்டும் நூறு ஆண்டுகளை கடந்தும் இருந்துவருகிறது. இந்த ஆலமரம் ஏராளமான பறவைகளின் வசிப்பிடமாக இருப்பதோடு, காக்கை, புறாக்கள், குயில்கள் ஆகிய பறவைகள் கூடுகள் கட்டிவசித்துவருகின்றது. மேலும் இந்த ஆலமரம் அந்த பகுதி மக்களின் நிழலோடு இளைப்பாறும் இடமாகவும், நினைவுகளை பகிரும் அடையாளமாகவும் இருந்துவருகிறது. இந்நிலையில் நூற்றாண்டை கடந்த நாட்டின் தேசிய மரமான ஆலமரத்தை பாதுகாக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆண்டுதோறும் பிறந்தநாள் விழாவினை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
மரங்களை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் இன்று மதுரை மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆலமரத்தின் 107 -வது பிறந்த நாள் விழா நீர்நிலைபாதுகாப்பு இயக்கம் மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நீர்நிலை இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி கேக்வெட்டி இனிப்புகள் வழங்கிய பின்னர் மரங்களை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்துசெல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து மனித வாழ்வில் மரங்களின் பயன்கள் குறித்தும், இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்தும் அனைத்த தரப்பினருக்கும் உணர்த்தும் வகையிலும், ஆலமரம் உள்ளிட்ட அனைந்துவகையான நாட்டு இன மரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் ஓவியங்கள் வரைந்தனர். 107ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உள்ள இந்த ஆலமரம் சில ஆண்டுகளுக்கு முன்பாக சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்ற முயன்றபோது பல்வேறு போராட்டங்களை சந்தித்து இன்றளவும் அப்பகுதி மக்களின் அடையாளங்களில் ஒன்றாகவும், வாழ்வின் நினைவுகளிலும் நீங்கா இடைத்தை பிடித்துள்ளதால் மனிதர்களுக்கு கொண்டாடப்படுவது போல வண்ண வண்ண விளக்குகள் கட்டப்பட்டு,ஒலிப்பெருக்கி மூலமாக பாடல் போடப்பட்டும் ஆலமரத்திற்கு உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மரத்திற்கு பிறந்தநாள் பிரமாண்டமாக கொண்டாடப்படுவதை பார்த்து பர்த்டே ஆலமரத்தின் முன்பாக நின்றுகொண்டு கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்துசெல்கின்றனர்.
மரங்களை வரங்கால இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும் என்றார்.
இது குறித்து இயற்கை ஆர்வலர் அபுபக்கர் பேசியபோது : சிறு வயதிலிருந்தே நூற்றாண்டுகளை கடந்து ஆலமரம் இருந்து வருவதால் அதனை பாதுகாக்கும் வகையிலும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிறோம். ஆலமரத்தைச் சுற்றி குப்பைகளை கொட்டி எரிப்பதால் மரம் பாதிக்கப்படுகிறது., விழா காலங்களில் வெடி வெடிப்பதால் மரத்தில் உள்ள அரிய வகை பறவைகள் வருவதில்லை இல்லை என்றார். மேலும் மரத்தை ஒட்டி மின் வயர்கள் வருவதால் மின்வாரிய ஊழியர்கள் அந்த ஆலமரத்தின் கிளைகளை வெட்டி விடுவதால் இந்த மரம் மேற்கொண்டு வளர முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இது போன்ற மரங்களை வருங்கால இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும் என்றார்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















